Pages

Sunday, December 29, 2013

என்றென்றும் புன்னகை படம் ஒரு பார்வை

என்றென்றும்  புன்னகை  படம் ஒரு பார்வை :

இந்த படத்தின் விமர்சனங்களை நிறையவே படித்து இருப்பீர்கள் எனவே இங்கு இந்த படத்தில் என்னை கவர்ந்த காட்சிகளை இங்கு பதிவிடுகிறேன்

 இந்த படத்திற்கு எந்த எதிர்பார்ப்பும் இன்றி செந்தில் திரை அரங்கில் நண்பர்களுடன் பார்க்க சென்றேன்  முந்தின நாள் பிரியாணி படம் பாதிப்பு வேறு அதனால் அரை மனதுடன் அமர்ந்தேன்

நண்பன் படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் மூவரும் நண்பர்கள். இந்தப்படத்தில் ஜீவா, சந்தானம், வினய் மூவரும் நண்பர்கள் கிட்டத்தட்ட இதுவும் நட்பை வலியுறுத்தி வெளிவந்திருக்கும் படம் தான்!

இந்தகதையை எத்தனைக்கு எத்தனை காமெடியாகவும், கலர்புல்லாகவும் படமாக்க முடியுமோ? அத்தனைக்கு அத்தனை காமெடியாகவும், கலர்புல்லாவும், அதேநேரம் கமர்ஷியலாகவும் படமாக்கி என்றென்றும் புன்னகை படத்தை எக்குத்தப்பாக எகிற வைத்து இருக்கிறார் இயக்குநர் ஐ.அஹமத்!

கையில் மதுக்கோப்பை, கண்ணில் மதுபோதை, நக்கல் பேச்சு, நச் என்ற கோபம்... என வழக்கம் போலவே தன் பாணி நடிப்பில் இந்தப்படத்தையும் தூக்கி நிறுத்த முற்பட்டிருக்கிறார் கெளதம் பாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகர் ஜீவா. இவரது அம்மா, அப்பா நாசரை விட்டு ஓடிப்போனவர்... என்று நண்பர்கள் கலாய்க்கும் போது அவர் படும் வேதனை, கோபம், ஏற்கும் சபதம் எல்லாம் அவரது முகத்தில் கலவையாக சேர்ந்து திரையில் எதிரொளிக்கும் சீன்கள் போதும்

கதைப்படி, ஹீரோ ஜீவாவிற்கு பெண்கள் என்றாலே பிடிக்காது. காதல் என்றாலே கடுப்பு! காரணம், அவரது அப்பாவை விட்டு எஸ் ஆன அவரது அம்மா! அதனால் காதல், கன்னியர் என்றாலே கடுப்பாகும் ஜீவாவுடன், சிறுவயது முதலே நட்பில் இருக்கும் சந்தானமும், வினய்யும், ஜீவாவுக்காக காதலிப்பது இல்லை, திருமணம் செய்து கொள்வதில்லை... எனும் உறுதியுடன் ஒரே படிப்பு, ஒரே குடிப்பு, ஒரே மாதிரி வேலை, ஒரே அலுவலகம், ஒரே படுக்கை... என நெருக்கமான நண்பர்களாக இருக்கின்றனர். ஒரு கட்டத்தில் இந்த வாழ்க்கை சலித்துப்போய் நண்பர்கள் சந்தானம், வினய் இருவரும் தங்கள் பெற்றோர் சொல்படி கல்யாணம் கட்டிக்கொண்டு இல்வாழ்க்கையில் இறங்க, விளம்பர பட இயக்குநரான ஜீவா தனிமையில் தவிக்கிறார்.

ஆனாலும் த்ரிஷா மேக்கப்  தாண்டியும்  முகத்தில் வயசு நன்றாக தெரிகிறது. ஆனாலும் நன்றாகத்தான் இருக்கிறார் நீண்ட நாளைக்கு பிறகு ஜீவாவிற்கு மற்றும் த்ரிஷாவிற்கு ஒரு நல்ல வெற்றி

அதே போல் படத்தின் இன்னொரு முக்கியமான பலம் இசை  வாழ்த்துக்கள் ஹாரிஸ் மற்றும் நன்றி நீண்ட நாளைக்கு பிறகு ஒரு நல்ல இசை உங்களிடம் இருந்து.

அஹமத்தின் எழுத்து, இயக்கத்தில் ஆரம்பகாட்சிகளில் இது ஏதோ ஆணுக்கு ஆண் எனும் கொச்சையான உறவை வலியுறுத்தும் ஹே படமோ! எனும் மாயை உடைத்தெறிந்து எல்லாம் காமெடிக்குத்தான் எனும் எண்ணத்தை ஏற்படுத்துவது பலம்!


நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன் .சி
கோவை .
+91 9965818701

















 

Wednesday, December 25, 2013

பிரியாணி சினிமா விமர்சனம்

பிரியாணி சினிமா விமர்சனம் :




நேற்று இரவு  கோவையில் நான் எவளவோ சொல்லியும் கேட்காமல் என் அறை தோழர் ராஜீவ் மற்றும் நண்பர் குணா மற்றும் சிலருடன் படம் பார்க்க கங்கா காம்ப்ளெக்ஸ் இல்  இரண்டாம் காட்சிக்கு சென்றோம்

ஒரே வரியில் சொல்வது என்றால் vegitable பிரியாணியை சிக்கன் பிரியாணி என்று சொல்லி ஏமாற்றி விட்டார்  வெங்கட் பிரபு , நாங்கள் எதிர் பார்த்தது என்னவோ அட்லீஸ்ட் குஸ்கா .

இந்த படம் யுவனின்  100 ஆவது படம் என்றால் யுவனே நம்பமாட்டார்

  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ஹன்சிகா மோத்வானி
  • இயக்குனர் :வெங்கட்பிரபு
  •  இசை  : யுவன் சங்கர் ராஜா 
  •  தயாரிப்பு : ganavel ராஜா .


  • கதைப்படி சுகன் - கார்த்தியும், பரசுராம் - பிரேம்ஜி அமரனும் நான்காம் வகுப்பு படிக்கும் காலந்தொட்டு நண்பர்கள். வகுப்பில் முதல் மாணவனாக தேறும் பிரேம்ஜி, கார்த்தியின் சகவாசத்திற்கு பின் தான் சகல துன்பங்களையும் அனுபவிக்க ஆரம்பித்ததாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவும் எப்படி? முடியாத பாலத்தில் படுவேகமாக ஒரு காரில், பின்னால் போலீஸ் வாகனங்கள் துரத்த பறந்து வந்து கீழே விழும் நிலையில் பிரேம்ஜி கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.

    , பிரேம்ஜி பார்த்து ஜொள் விடும் பெண்களை எல்லாம் இராத்திரி எந்நேரம் ஆனாலும் ஒரு பிளேட் பிரியாணி திண்ணாது, உறங்கபோகாத கார்த்தி உஷார் பண்ணி ஓரங்கட்டுவது ஒருபக்கம் என்றால், கதாநாயகி ஹன்சிகாவையும் சின்ஸியராக மற்றொருபக்கம் லவ்வுகிறார் கார்த்தி! நட்புக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கார்த்தியை சகித்து கொள்ளும் பிரேம்ஜியும், கார்த்தியும் ஒருநாள் தங்களது பிரியாணி மற்றும் பெண் சபல புத்தியால் பிரபல கிரானைட் தொழில் அதிபர் நாசர் கொலையில் வகையாக சிக்குகின்றனர். அப்புறம்? அப்புறமென்ன, தங்களது புத்தி சாதுர்யத்தால் தங்களை வலை வீசித்தேடும் போலீஸ்க்கும், நாசரின், ராம்கி உள்ளிட்ட உறவுகளுக்கும் தண்ணிகாட்டி உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கார்த்தி, பிரேம்ஜி இருவரும் தப்பித்து, ஹன்சிகா கழுத்தில் தாலி கட்டு(ஹீ, ஹீ... கார்த்தி மட்டும்தான்...)வது தான் "பிரியாணி படத்தின் மொத்தகதையும்!

    சுகனாக, கார்த்தி ஒருசில இடங்களில் அண்ணன் சூர்யா சாயலில் தெரிவது மட்டுமின்றி, "சிங்கம் சூர்யா மாதிரி ஆக்ஷ்ன் காட்சிகளிலும் அடித்து தூள் பரத்தியிருக்கிறார். ஹன்சிகாவுடனான காதலில் அவ்வளவு ஒட்டுதல் இல்லை! காரணம் படம் முழுக்க பீஸ்களாக (கார்த்தி - பிரேம்ஜி பாணியில்) பவனி வரும் பெண்களா? என்பது கார்த்திக்கே வெளிச்சம்

    பிரேம்ஜி அமரன் படம் முழுக்க காமெடி என்ற பெயரில் "வாவ் என வாயை பிளந்தபடி கலாய்க்கிறார். நல்லவேளை கடிக்கவில்லை! அதேநேரம் நான் உன் கேர்ள்ப்ரண்ட் அல்ல, ப்ரண்ட் என்று "பன்ச் டயலாக் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர்!

    பிரியாணி படத்தின் மொத்தத்திற்கு பெரிய "லெக்பீஸ் மாயவாக வரும் மாண்டி தக்கார் தான். வாவ்! அம்மணி ஆடி அசத்தும் அந்த ஒற்றை பாடல் போதும் மொத்த படத்திற்கும்! ஆனாலும் அநியாமாய் அவரை, உமா ரியாஸ் ரயிலில் தள்ளி விடுவது கொடுமை!

    வில்லன் மாதிரி பூச்சாண்டி காட்டி நல்லவராகி விடும் ராம்கி, நாசர், சம்பத், உமா ரியாஸ், ஜெய்பிரகாஷ், சாட் ஆண்டர்சன் தொடங்கி கெஸ்ட் ரோலில் வரும் ஜெய், விஜய் வஸந்த், விஜயலட்சுமி எல்லோரும் "லெக்பீஸ் பிரியாணியில் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும்  எனும் வகையில் ஆறுதல்!

    இந்த படத்தில் ஹன்சிகா சும்மா அப்ப அப்ப வந்து ஆடிவிட்டு போகிறார் அவருக்கு tv இல் வேலை,

    commercial சினிமாவில் லாஜிக் கிடையாதுதான் அதற்காக கொலை பலி விழுந்த கார்த்திக்கும் பிரேம்ஜியும் சாதாரணமாக வெளியில் சுற்றுவதை  எப்படி சரி என்பது ?

    யப்பா வெங்கட் பிரபு முதலில் பிரேம் ஜி  ஐ க்ளோஸ் up  காட்டுவதை நிறுத்து எங்களால் முடியலை

    கடைசியில் தூக்கம் கெட்டு நண்பர்கள்  ராஜீவ், குணா மற்றும் நந்தகுமார் பாலாஜி, சுதன்  ஆகியோரை திட்டிக்கொண்டே என் அறை வந்து சேர்ந்தேன்.

    sorry வெங்கட் பிரபு பெட்டர் லக் நெக்ஸ்ட்  டைம்



    உங்கள் கமெண்ட்ஸ்  களை  எதிர்நோக்கும்

    பாலசுப்ரமணியன் .சி 

    கோவை .






























     

    Monday, December 16, 2013

    தலயின் பொங்கல் விருந்து ரெடி....!!!!!!!!!!1

    டிசம்பர் 20-ல் இசை ; ஜனவரி 10-ல் படம் - வீரம் ரிலீஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு



    அஜீத் குமார் நடிக்க விஜயா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் திருமதி பாரதி ரெட்டி மற்றும் திரு வெங்கட்ராம ரெட்டி தயாரிக்க, சிவாவின் இயக்கத்தில், தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க மிக பிரம்மாண்டமாக தயாராகும் வீரம் படத்தின் இசை இம்மாதம் 20ஆம் தேதி வெளியாகிறது. ஜுங்கலீ மியூசிக் இசை நிறுவனம், படத்தின் இசையை வெளியிட உள்ளது. படம் ஜனவரி 10ம் தேதி ரிலீஸாகிறது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    அஜீத் குமாருடன் தமன்னா இணைந்து நடிக்கும் இந்த படத்தில் அவருடன் நாசர்,அதுல் குல்கர்னி, ரமேஷ் கண்ணா, விதார்த், பாலா, சந்தானம் , முனீஸ் , சுஹைல் ,தம்பி ராமையா, அப்பு குட்டி , மயில் சாமி, சுமித்ரா, சுஜாதா, ரோஹினி அட்டங்காடி , அபிநயா, மனோ சித்ரா, சூசாகுமார், தேவதர்ஷினி ,வித்யு லேகா, என்று ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து உள்ளது .

    அஜீத் ரசிகர்களை கவரும் வண்ணம் மாஸ் பாடல்களை தேவிஸ்ரீ பிரசாத் வழங்கி உள்ளார் , அவரது இசை பயணத்தில் இந்த படம் ஒரு மைல் கல்லாக இருக்கும் என்று இயக்குனர் சிவா நம்பிக்கை தெரிவித்தார். ஜனவரி 10ஆம் தேதி உலகெங்கும் வெளி வரும் வீரம் படம், பாடல்களில் மட்டுமின்றி , கதை அமைப்பிலும், காட்சி அமைப்பிலும் மிக பிரம்மாண்டமாக , ஜனரஞ்சகமாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

    வெற்றியின் ஒளிப்பதிவில், மிலனின் கலை வண்ணத்தில், காசி விஸ்வநாதனின் பட தொகுப்பில், செல்வாவின் சண்டை காட்சி அமைப்பில், தினேஷ் நடனம் அமைக்க , விவேகா பாடல் வரிகளுக்கு , தேவி ஸ்ரீ பிரசாத் பட்டையை கிளப்பும் இசையை தந்துள்ளார் .



    நன்றிகளுடன் 

    பாலசுப்ரமணியன்.சி 

    +91 9965818701



     

    Saturday, December 7, 2013

    அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கட்டுரை,

    நாட்டைச்சீரழிக்கும் போலி மதச்சார்பின்மை, குடும்ப ஆட்சி முறை


    நமது நாட்டை சமீப காலமாக சீரழித்து வரும் போலி மதச்சார்பின்மை மற்றும் குடு்மப ஆட்சி முறை குறித்து, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலும், அசாம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் மாநில முன்னாள் கவர்னருமான எஸ்.கே.சின்கா டெக்கான் குரோனிக்கில் நாளிதழில் எழுதியுள்ளார்.
    சின்கா தனது கட்டுரையில் கூறியிருப்பதாவது: மதசார்பின்மை என்பது ஐரோப்பிய முறையாகும். அரசில் தேவாலயங்களின் ஆதிக்கம் ஏற்படக் கூடாதென்பதற்காக உருவாக்கப்பட்ட முறை. ஒரே மதம் உள்ள ஐரோப்பிய நாடுகளில், அந்த மதத்தின் பல்வேறு பிரிவுகளின் ஆதிக்கத்தையும் கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது. ஆனால் பல்வேறு மதங்களைக் கொண்ட இந்தியாவில் அத்தகைய மதசார்பின்மை கொள்கையை நமது தலைவர்கள், அனைத்து மதங்களும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் முதலில் ஏற்றுக் கொண்டனர். நமது அரசியலைமைப்புச் சட்டத்தில மதசார்பின்மை என்ற வார்த்தை முதலில் கிடையாது. பின்னர் இந்திரா பிரதமராக இருந்த காலத்தில் இது சேர்க்கப்பட்டது.

    மதச்சார்பின்மை என்றால் என்ன?:

    மகாத்மா காந்தியை பொறுத்தவரையில் மதச்சார்பின்மை என்பது, அனைத்து மதத்தினரையும் சமமாக நடத்துவதே ஆகும். இத்தகைய எண்ணமே அவரை நமது மிகப் பெரிய தலைவராக எடுத்துக் காட்டியது. அதே சமயம் நேருவின் மதசார்பின்மை கொள்கையானது மத ஆதிக்கம் இல்லாத அரசு என்ற ஐரோப்பிய கொள்கையாக இருந்தாலும், பிரிவினை காரணமாக இந்தியாவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எவ்வித மனக்குறையும் ஏற்பட்டு விடக் கூடாது; இந்தியாவில் தாங்களும் சமமான குடிமக்களே என்ற எண்ணம் ஏற்பட வேண்டும்; தங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக கருதி விடக்கூடாது என்ற அடிப்படையில் இருந்தது.

    நேரு ஆட்சிக் காலத்தில் மதக் கலவரம் எதுவும் நடந்ததில்லை; எந்த இஸ்லாமிய நாட்டிலும் இல்லாத, ஹஜ் யாத்திரைக்கு மானியம் வழங்கும் திட்டம் இந்தியாவில் அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது. இஸ்லாமியர்களை ஊக்குவிப்பதற்காக மட்டுமே கொண்டு வரப்பட்ட திட்டமாக அது இருந்தது. ஓட்டுக்களைப் பெறுவதற்காக கொண்டு வரப்பட்ட திட்டமல்ல; ஏனென்றால், இஸ்லாமியர்களின் ஆதரவு இருந்தாலும் இல்லா விட்டாலும், நேருவும் அவருடைய கட்சியும் வெற்றி பெறும் சூழல் அப்போது நிலவியது.
    இஸ்லாமியர் நிலை: பிரிவினைக்கு காரணமான இரு நாடுகள் கொள்கைக்கு தாங்கள் பலியாகி விட்டதை இஸ்லாமியர்கள் உணர, நேருவின் இந்த சலுகைகள் காரணமாக அமைந்தன. இந்த உண்மை நிலையை உணர்ந்த இஸ்லாமியர் இடையே மத வேறுபாடும் கசப்புணர்வும் குறைய ஆரம்பித்தது. இஸ்லாமிய இனத்தைச் சேர்ந்த நடிகர்களான மெஹருனிஷாவும், யூசுப் கானும் தங்களின் பெயர்களை மீனா குமாரி எனவும் திலீப் குமார் எனவும் மாற்றி கொண்டதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

    ஆனால் தற்போதைய நிலை அப்படி இல்லை. இஸ்லாமியர்கள் தங்களை மத அடையாளத்தை, பிரிவினைக்கு முன் இருந்தததை விடவும் கூடுதலாக காட்டிக் கொள்ள தயங்குவதில்லை. இந்தியாவின் பெரும்பான்மை சமுதாய கலாச்சாரத்துடன் தொடர்புடைய நமது தேசிய சின்னம், தேசிய கீதம், தேசிய பாடல் உள்ளிட்டவைகளை ஏற்றுக் கொள்ள, அன்றைய இஸ்லாமியர்கள் எவரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் இன்று இத்தகைய முடிவுகள் எடுக்கப்படுமானால், மதச்சார்பின்மை என்று கூறிக் கொள்ளும் சக்திகளிடமிருந்தும், அடிப்படை மதவாத சக்திகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கும்.

    தடம் மாறிய மதச்சார்பின்மை:

    நேரு போன்று இல்லாமல், இந்திரா மத நம்பிக்கையற்றவராக இருக்கவில்லை; மதச் சடங்குகளை கடைப்பிடித்தார். அவரது மதசார்பின்மை ஓட்டு வங்கியை உருவாக்குவதையே மையமாகக் கொண்டிருந்தது. நேரு காலத்தில், அரசு செலவில் இப்தார் விருந்து நடத்தப்பட்டதில்லை. ஆனால் தற்போது வரிந்து கட்டிக் கொண்டு நடத்துகின்றனர். மற்ற எந்த மதத்தின் விழாவையும் இது போன்று அரசு சார்பில் கொண்டாடுவதில்லை. தேசிய பாதுகாப்பும், தேசிய நலனும் போலி மதசார்பின்மைவாதிகளால் சமரசம் செய்து கொள்ளப்படுகிறது. வங்கதேசத்தில் இருந்து அசாமில் சட்ட விரோதமாக குடியேறுவது, ஓட்டு வங்கிக்காக ஊக்குவிக்கப்படுகிறது. காஷ்மீரிலும் ஜிகாதி பயங்கரவாதிகளுக்கு எதிராக மென்மையான போக்கே கடைபிடிக்கப்படுகிறது. அதேசமயம் காஷ்மீரில் வாழும் பண்டிட்களின் நலன்கள் புறக்கணிக்கப்படுகின்றன.
    காஷ்மீர் பள்ளத்தாக்கில் நூற்றுக்கணக்கான இந்து கோயில்கள் இடிக்கப்பட்ட சம்பவங்கள் மூடி மறைக்கப்பட்டன. ஆனால் பாபர் மசூதி இடிக்கப்பட்டு, 20 ஆண்டு ஆன பின்னரும் இன்றும் ஒரு பிரச்னையாக இருக்கிறது.

    எது மதவாதம்?: இஸ்லாமிய தலைவர்கள் பலரைக் கொண்டுள்ள பா.ஜ.,வை மதவாத கட்சியாக ஒதுக்கி வைத்து, தீண்டத்தகாத கட்சியாக நடத்துகின்றனர். ஆனால் அதே நேரத்தில் மதவாதக் கொள்கையைக் கொண்டுள்ள முஸ்லீம் லீக், மஜ்லிஸ் இ லிதிஹதுல் முஸ்லீமின், அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முற்போக்கு கட்சி போன்றவற்றை, மதசார்பின்மை பற்றி பேசும் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் சேர்த்துக் கொண்டு கவுரவிக்கிறது. பிரதமர் மன்மோகன் சிங்கோ அரசியலமைப்பு விதிமுறைகளை மீறி, இஸ்லாமிய இனத்தவர்களின் வளர்ச்சிக்கே தனது ஆட்சியில் முதல் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என அறிவிக்கிறார். அவருக்கு இஸ்லாமியர்கள் அல்லாத மக்கள் பற்றியோ அவர்கள் பின்தங்கி இருப்பது பற்றியோ கவலையில்லை. 2008ம் ஆண்டு டில்லியின் துவாரகா பகுதியில் ரூ.22 கோடி அரசு செலவில் ஹஜ் இல்லம் கட்டப்பட்டது. அதே ஆண்டு அமர்நாத் ஆலய நிர்வாகத்திற்கு ரூ.2.2 கோடிக்கு குத்தகைக்கு விடப்பட்ட, வெறுமையாக கிடந்த 100 ஏக்கர் வனப்பகுதி, மதவாதிகளைத் திருப்தி செய்வதற்காக திரும்பப் பெறப்பட்டது. போலி மதசார்பின்மை பேசுபவர்களின் போக்கை விவரிக்க இது போன்று பல உதாரணங்களைக் காட்ட முடியும். உண்மையான மதசார்பின்மை என்பது அனைவருக்கும் நீதி வழங்குவது; எவரையும் திருப்தி செய்ய முயலாதது.

    குடும்ப ஆட்சி முறை:

    நமது நாட்டின் மற்றொரு துயரம், பரம்பரை ஆட்சி முறையை நோக்கிச் செல்வதாகும். இது ஜனநாயக ஆணி வேரை அழி்த்து, அரசியலில் பிரபுத்துவ முறையைக் கொண்டு வர வழி வகுக்கிறது. ஆளும் குடும்பத்தின் மேலாதிக்கத்தை உறுதி செய்வதற்காக, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை குப்பைத் தொட்டியில் போடப்பட்டு விட்டன. குடும்பத்தாரால், குடும்பத்தினருக்காக, குடும்பத்தாரையே கொண்ட ஆட்சி முறையால், நாடு பல்வேறு பாதிப்புக்களை சந்திக்க இருக்கிறது. இந்த பரம்பரை ஆட்சிமுறை நோய், புற்றுநோய் போன்று மற்ற அரசியல் கட்சிகளிடையேயும் பரவி உள்ளது.


    இதை விட மிகவும் மோசமானது என்னவென்றால், இந்த பிரபுத்துவ கலாச்சாரம், ஆட்சியாளர்களை மட்டுமல்ல, அதிகாரிகளையும் ஆட்டுவிக்கிறது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்ததை விட தற்போது மிகவும் அடிமைப்பட்டவர்களாக அதிகாரிகள் உள்ளனர். சமானிய மக்களும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தை விடவும் அதிக அளவில் அதிகார ஆணவத்தால் தற்போது பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பரம்பரை ஆட்சி முறை, முகஸ்துதி மற்றும் இடைத் தரகர் கலாச்சாரத்தை ஊக்குவிக்கிறது. ஆட்சியாளர்கள் அதிகார போதை காரணமாக, அனைத்தும் தங்களின் தலைமையில் நடக்கிறது என்ற எண்ணத்துடன் துணிச்சலாக செயல்படுகின்றனர். ஆட்சியாளர்கள் தவறே செய்யமாட்டார்கள்; அவர்கள் செய்வதெல்லாம் சரியானவையே என்ற போக்கும் உருவாகி உள்ளது. இந்த பரம்பரை ஆட்சி அதிகாரத்தை மீறி, நியாயமாக செயல்படும் துர்காசக்தி நாக்பால் போன்ற அதிகாரிகள் பாதிக்கப்படுகின்றனர். பிரபுத்துவ ஆட்சி முறையில், அமைச்சரவையின் கூட்டுப் பொறுப்போ, ஒரு அமைச்சரின் தனிப்பட்ட பொறுப்பிற்கோ மதிப்பில்லை. ஒரு திட்டத்திற்கு ஒரு அமைச்சர் ஒப்புதல் கொடுத்து, எழுத்துபூர்வமாக அங்கீகரித்த பிறகு, அந்த திட்டம் தவறென கருத்ப்பட்டால், அதற்காக அமைச்சரைத் தண்டிப்பதில்லை; அதிகாரிகளே தண்டிக்கப்படுகின்றனர். இதற்கு விதிவிலக்காக திகழ்ந்தவர் லால் பகதூர் சாஸ்திரி மட்டுமே.

    ராகுல் நடத்திய நாடகம்:

    காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர், கிரிமினல் அரசியல்வாதிகள் தொடர்பான அவசர சட்டத்தை நியாயப்படுத்தி பத்திரிக்கையாளரிடையே பேசிக்கொண்டிருந்தபோது, கட்சியின் துணைத்தலைவர் ராகுல் திடீரென நுழைகிறார்; தனது கட்சி சகாக்களால் கொண்டு வரப்பட்ட அவசரசட்டத்தை முட்டாள் தனமானது என விமர்சித்து, அதை கிழித்தெறிய வேண்டும் என்கிறார். முகஸ்துதி பாடும் காங்கிரஸ் கட்சியினர் அந்த நொடியிலேயே தங்கள் மனதை, பச்சோந்தி போல் மாற்றிக் கொள்கின்றனர். இளைய தலைவருக்கான ஜால்ரா ஓசை உச்சகட்டத்தை எட்டுகிறது. ஏன் இவ்வாறு செய்யப்பட்டது? எந்த சூழ்நிலையில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது என்றெல்லாம் எவரும் கவலைப்படவில்லை. அந்த அவசர சட்டம், காங்கிரசின் உயர்மட்ட குழுவால் ஒப்புதல் பெறப்பட்டு, அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டு, காங்கிரஸ் கட்சியில் உள்ள அனைவராலும் ஏற்கப்பட்ட ஒன்று. இதையெல்லாம் நன்கு அறிந்த ராகுல், அப்போது கருத்து ஏதும் தெரிவிக்காமல் அமைதியாக இருந்ததால், அந்த அவசர சட்டத்தை அவரும் ஆதரிப்பதாகவே கருதப்பட்டது.

    அப்படி இருக்கும்போது ராகுல் தாமதமாக எதிர்ப்பு தெரிவிக்க என்ன காரணம்? அந்த அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஜனாதிபதி தயக்கம் காட்டியதும், அதில் கையெழுத்திடக் கூடாதென ஜனாதிபதியை எதிர்கட்சிகள் வற்புறுத்தியதும், மக்களிடையே ஏற்பட்ட அதிருப்தியும் காரணமாக இருக்கலாம். ஆனால பாமர மனிதனின் இத்தகைய எண்ணங்கள் முக்கியத்துவம் பெறுவதில்லை.


    நாடு விடுதலை பெறுமா?

    மகாத்மா காந்தி, அடிமை மனப்போக்கிலிருந்து நாட்டை மீட்டு, கவுரவமான உயர் நிலையும் சுதந்திரமும் பெற உதவினார். 2014 லோக்சபா தேர்தலில் எத்தகைய முடிவு ஏற்படும் என்று இப்போது கூற முடியாது; இருந்தாலும் யார் ஆட்சிக்கு வந்தாலும், இந்த போலி மதச்சார்பின்மை மற்றும் பிரபுத்துவ ஜனநாயக முறையிலிருந்து நாட்டை விடுவிப்பார்கள் என நம்புவோமாக.


    நன்றி ,
    தினமலர்  நாளிதழுக்கு ,



    என்றும் அன்புடன்,
    பாலசுப்ரமணியன்.சி




     

    Tuesday, November 26, 2013

    ஒரு இனிய பயண அனுபவம்

    நண்பர்களுக்கு இனிய வணக்கம் ,

    இந்த நாள் இனிய நாள்.

    ஒரு நாள் நாங்கள் பார்த்த ஒரு உடல் ஊனமுற்ற மனிதனை பற்றியும் அந்த மனிதனை அணுகிய மனித மிருகங்களை பற்றிய பதிவு இது ,

    சென்ற வாரத்தில் ஒரு நாள் எங்கள் பணி விசயமாக கோயம்பத்தூர்   நகரத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு நானும் என் அறை நண்பர் ராஜீவும் பொள்ளாச்சிக்கு  இரண்டு\
    சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம் அப்போது கிணத்துகடவு  தாண்டி சென்று கொண்டிருக்கும் பொது நண்பர் ராஜீவ் ஒரு காபி அருந்திவிட்டு நம்
    பயணத்தை தொடரலாம் என்று கூறியதால் சாலை ஓரத்தில் பிரபலமான காபி கடைக்கு சென்றோம் காலை நேரம் என்பதால் கடையில் கூட்டம் எதுவும் இன்றி காலியாக
    தான் இருந்தது அந்த கடையில் காபி தவிர  வேறு எதுவும் கிடையாது என்பதால் நானும்
    நண்பருடன் வேண்டா  வெறுப்பாக கடையில் சென்று அமாந்தோம் நண்பர் காபி ஆர்டர் செய்தார் , பின்னர் இருவரும் பேசிக்கொண்டே காபி  அருந்த தொடங்கினோம் , நான் கடையில் சாலையை பார்க்கும் வண்ணம் அமர்ந்து இருந்தேன் .

    அந்த நேரத்தில் அந்த நெடுஞ்சாலையில் ஒரு பிச்சைக்கார உருவம் கொண்ட மனிதர் சாலையை கஷ்டப்பட்டு கடந்து நாங்கள் அமர்ந்து இருந்த கடையை நோக்கி வந்தார், அவரின் இரண்டு கால்களும் வளைந்து மிகவும் பரிதாபமாக இருந்தார் அவரின் இரண்டு கா ல்களும் போலியோ  ஏதோ ஒரு வினோதமான எலும்பு நோய் என்று பார்த்த நேரத்தில் உணர முடிந்தது , அவர் கையில் ஒரு அலுமினிய பாத்திரமும் இருந்தது,

    நாங்கள் இருவரும் பார்த்து பரிதாப பட்டு பேசிகொண்டோம் , அப்போது நண்பர் ராஜீவ் இவர் ஒரு பிச்சைகாரர் என்று கருதி அவருக்கு ஒரு பத்து ரூபாய் கொடுக்க கையில் எடுத்து  வைத்து இருந்தார் , அவர் எங்கள் அருகில் வந்து பேச தொடங்கினர் அபோது அவர் நான் நேற்று இரவு மதியம் சாப்பிட்டேன் பிறகு சாப்பிடவே இல்லை என்று கூறி தனக்கு பசிபதாகவும்  அதற்கு காபி வாங்கி போக வந்ததாக கூறி ஒரு காபி ஆர்டர்  செய்தார்.

    அந்த மனிதரை
    மனிதரை பரிகாசமாக பார்த்த அந்த கடையில் வேலை செய்யும் பெண்  இந்த மனிதரை பார்த்து பிச்சைகாரனுக்கு  எடுப்பது பிச்சை  இதில் காபி வேறயா என்று கூறி ஒரு கப்பில் கொண்டு வந்து ஊற்றினாள் , அந்த மனிதர் தனக்கு இன்னும் ஒரு காபி வேண்டும் என கூறவே அவள் மீண்டும் வேண்டா  வெறுப்பாக மீண்டும் கொண்டு வந்து ஊற்றினாள்  அளவு குறைவாக.

    அந்த மனிதரின் முகத்தில் சிறிது கூட  புன்னகை மறையவில்லை மாறாக அந்த மனிதர் யோசிக்காமல் இரண்டு காபிக்கு  உண்டான தொகை ரூபாய் 30 கொடுதுவித்து நடக்க தொடங்கினார் , அபோது மனதில் நினைத்து கொண்டேன் மனிதனின் உருவத்தை பார்த்து கேலியாக நினைக்க கூடாது என்று. அந்த மனிதர் ஊனமாக இருந்தாலும் மனது ஊனம் இல்லை மேலும் அவர் தோற்ற்றம் அப்படித்தானே தவிர உள்ளம் வெள்ளை, அந்த கடையில் வேலை வேலை செய்த பெண்ணுக்கு அவர அருவருப்பாக தெரிந்தாலும், அவரின் பணம் அப்படி தெரியவில்லை

    அந்த மனிதர் அந்த பெண்ணை செருப்பால் அடிக்காத  குறையை தன் நடத்தையால் செய்து விட்டு சென்று விட்டார்.

    இறுதியாக அவர் கூறியது தான் பிச்சை எடுபதில்லை என்று  கூறியதோடு தன்னால் முடிந்த வேலை செய்து வாழ்வாத கூறினார்

    நல்லவேளை நாங்களும் அவருக்கு 10 ரூபாய் கொடுத்து அவரை இழிவு செய்யவில்லை நண்பர் ராஜீவ் அந்த பணத்தை பாக்கெட்டில் போட்டுகொண்டு பொள்ளாச்சியை நோக்கி பயணமானோம் அந்த மனிதரின் நினைவுகளோடு .


    அதனால் கூற விளைவது யாதெனில் உடல் தான் ஊனமே தவிர அவர்களுக்கு மனதில் இல்லை, அனால்  நம்மில் பலர் உடல் தான் நலமே தவிர மணம்  ஊனம்தான்.

    நாம் சந்தித்த மிக அற்புத மனிதரில் அவரும்  ஒருவர்,


    இந்த பதிவை எழுத ஊக்கபடுத்திய நண்பர் ராஜீவுக்கும்  நன்றிகளுடன் 

    பாலசுப்ரமணியன்.சி 
    கோயம்புத்தூர்.




























     

    Tuesday, November 19, 2013

    கவிதைகள்;


     
     
     
     
     
     
     
    ன் மேல் விழுந்த
    மழைத்துளி
    என்னை கூப்பிட்டு
    கர்வத்தில்
    காதில் சொன்னது
    மெல்ல...

    கடுப்பாயிட்டேன்..!!

    நீ தொடாத
    இடங்களைக் கூட
    நான்
    தொட்டுவிட்டேனேன்று
    ...
     
     
     
    நீ பேசும் வார்த்தை
    உலகுக்கே புரியும் ...!!
    நீ பேசாத வார்த்தை
    உன்னை நேசிக்கும் எனக்கு
    மட்டுமே புரியும்...!!
     
     

    Sunday, November 17, 2013

    பீட்சா 2 வில்லா விமர்சனம்

    பீட்சா 2 வில்லா  விமர்சனம்:

    நடிகர்கள்

    அசோக் செல்வன்
    சஞ்சிதா ஷெட்டி
    இயக்கம் :தீபன் சக்கரவர்த்தி
    இசை :சந்தோஷ் நாராயணன்
    ஒளிபதிவு :தீபக் குமார்

    சமீப திரைப்படங்களில்  இது திகில் படம் என்றாலும்  ரத்தம் மற்றும் வன்முறை இல்லாத படம் கொடுத்த வகையில் நிச்சயம்  பாராட்ட வேண்டும்

    ஹீரோ ஒரு க்ரைம் நாவல் எழுத்தாளர். அவரோட அப்பா ஒரு ஓவியர். சில பெயிண்ட்டிங்க்ஸ் எல்லாம் வரைஞ்சு ஒரு வீட்டுல வெச்சிருக்கார். அந்த ஓவியங்கள்ல எதிர் காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களை விவரிப்பது போல் சில கலெக்ஷன்ஸ் இருக்கு. ஹீரோவோட அம்மா விபத்தில் இறப்பது போல் ஒரு ஓவியம். அந்த ஓவியம் வரைஞ்ச அடுத்த வருசம் அம்மா டெட். ஹீரோ நாவல் எழுதுனதுக்காக அவார்டு வாங்குவது போல் ஒரு ஓவியம் அதே போல் ஹீரோ அவார்டு வாங்கறார்.

    இந்த மாதிரி சில சம்பவங்கள் ஓவியங்கள்ல இருப்பது போலவே ஹீரோ வாழ்க்கைல நடக்குது. ஹீரோவோட அப்பா பிஸ்னெஸ்ல லாஸ் ஆகி கோமா ஸ்டேஜ்ல படுத்து செத்துடறாரு. ஹீரோவுக்கு தற்செயலாக வில்லா அப்டிங்கற வீட்டைப்பத்தி தகவல் கிடைக்குது. அது அவரோட அப்பா வாங்குன வீடுதான், ஆனா ஏதோ சில காரணங்களுக்காக அந்த வீட்டைப்பற்றின தகவல்களை மறைச்சுட்டாரு . அந்த வீட்டில் இதுக்கு முன்னால வாழ்ந்தவங்கள்ல ஒரு ஆள் ஒரு குழந்தையை நர பலி கொடுத்திருக்காரு. அதனால கூட இருக்கலாம்னு ஹீரோ நினைக்கறாரு.

    ஹீரோவோட அப்பா வரைஞ்ச ஓவியக்கலெக்ஷன்ல ஹீரோ சாவது போலவும், ஹீரோவோட லவ்வரை ஹீரோவே கொலை செய்வது போலவும் இருக்கு. ஹீரோ அதைத்தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் வெற்றியா? தோல்வியா? என்பது க்ளைமாக்ஸ்.

    விஜய் சேதுபதி ஹீரோவா நடிச்ச பீட்சா செம ஹிட் ஆனதால், அதே ஃபார்முலாவில் பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டில் எடுக்கப்பட்ட தமிழ் சினிமாவுக்கு மாறுதலான த்ரில்லர் கதை கொண்ட படம். ஹீரோவா அசோக் செல்வன். கச்சிதமான நடிப்பு. அவர் ஏன் படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் வர்றார்னு தெரியலை. அப்பப்ப ஜாலியா இருப்பது மாதிரி காட்டி இருக்கலாம்.

    ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டி. ஹீரோவை விட அதிக ஸ்கோப் உள்ள கேரக்டர் . இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம். நாசர் ஹீரோவுக்கு அப்பா கேரக்டர். ஆனா அதிக வாய்ப்பில்லை. பின்னணி இசை பிரமாதம்

    படத்தின் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஒவ்வொரு காட்சிகளிலும் ரசிகர்களுக்கு திக் திக் என வரவழைக்க காரணம் சந்தோஷ் நாராயணன் இசையும் தீபக் குமாரின் ஒளிப்பதிவும்தான்.

    பீட்சா பாணியில் திகிலாக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தீபன்.

    மொத்தத்தில் 'பீட்சா 2 வில்லா' திகிலூட்டும் தீனி.

    மொத்தத்தில் இந்த படம் A  சென்டர்களுக்கான  படம் Bமற்றும் C   சென்டர்களிலும்  படம் ஓடும் என்றாலும் பெரிய வசூல் எதிர் பார்க்ககூடாது  என்பதுதான் உண்மை .



    இது என்னுடைய பார்வையில் மட்டுமே எனவே உங்களின் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்

    என்றும் நேசமுடன் ,
    பாலசுப்ரமணியன்.சி
    கோயம்புத்தூர் .

                                        இந்த நாள் இனிய நாள் .




















     

    Saturday, November 16, 2013

    தெண்டுல்கர் வேடத்தில் நடிக்க ஆசை: அமீர்கான்

    தெண்டுல்கர் வேடத்தில் நடிக்க ஆசை: அமீர்கான்

    உலகமே ஆவலுடன்  எதிர்நோக்கிய  சச்சின்  கிரிக்கெட் வாழ்க்கை மும்பை வாங்கடே மைதானத்தில்  மிக பிரமாண்டமாக நிறைவு பெற்றது  அப்போது மும்பை மைதானத்தில் அமிர்கான் மற்றும் ராகுல்காந்தி மற்றும் பல்வேறு பிரபலங்கள் போட்டியை ரசித்தனர் அப்போது அமிர்கான்  நிருபர்களிடம் பேசிய அமீர் இந்த செய்தியை கூறினார்

    சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முயற்சிகள் நடக்கின்றன. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சச்சின் வேடத்தில் நடிக்க நடிகர் தேர்வு நடப்பதாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் சச்சின் தெண்டுல்கராக நடிக்க அமீர்கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.அமீர்கான் ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘லகான்’ இந்தி படத்தில் நடித்துள்ளார். எனவே சச்சின் தெண்டுல்கர் வேடத்துக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்கின்றனர்.

    இதுகுறித்து அமீர்கான் கூறும்போது, நான் சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகன். சச்சின் தெண்டுல்கர் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டினால் நிச்சயம் நடிப்பேன். கதை பிடித்தால் ஏன் மறுக்க வேண்டும். நான் நடிப்பேன் என்று கூறினார்.

    மேலும் சச்சின் டெண்டுல்கருக்கு அவரின் இந்த மிக பெரிய சாதனையை பாராட்டி அவருக்கு இந்தியாவின் மிக பெரிய விருதான பாரத  ரத்னா  விருது வழங்கி சிற்பிக்க வேண்டும் என பல்வேறு மட்டங்களில் கோரிக்கை எழுந்துள்ளது .


    pizzaa  2 விமர்சனத்துடன் உங்களை மீண்டும் சந்திப்போம்

    வணக்கம் அன்பர்களே
    இந்த நாள் இனிய நாள்

    என்றும்  பிரியமுடன் ,
    பாலசுப்ரமணியன் .சி
    9965818701
     

    Tuesday, November 12, 2013

    Sachin Tendulkar some Intresting Data;

    Sachin Tendulkar some Intresting Data;


    Most Matches in Odi :463
    Most Matches in Test :198
    Most runs in Test :15837 runs
    Most runs in ODI :18426 runs
    Most Fours in odi :2016 fours
    Most Fours in test :2044 Fours
    Most 150+ scores in odi :5
    Most 150+ scores in test :20
    Most hundreds by a batsman in Test:51 hundreds
    Most Hundreds by a batsman in ODI :49 hundreds
    Most Ninties in Odi :18
    Most Ninties in Test :10
    Most fifties by a batsman in Test :67
    Most fifties by a batsman in ODI :96
    Most Man of Match in odi :62
    Most Man of series in odi :15
    Most Balls Faced in odi :21367
    Most ODI runs in a calendar year :1,894 ODI runs in 1998.
    Most centuries in a calendar year :9 ODI centuries in 1998.
    Most runs scored by a batsman in ODI tournament finals:
    Tendulkar 1851,
    Most centuries hit by a batsman in ODI tournament Finals:
    Tendulkar (6 ton)
    Most Runs in world cup :2278
    Most Runs in single world cup :673 Runs in 2003 world cup
    Most Hundreds in world cup :6
    Most fifties in world cup :15
    Most successful batsman in wins :(11157 runs in 234 matches)
    Most successful batsman in chases :(5490 runs in 127 matches)
    Yes it is one and only SACHIN TENDULKAR.

    9 famous quotes on Sachin Tendulkar . . .!!!
     i want my son to became Sachin Tendulkar - brian lara
     We did not lose to a team called India, we lost to a man called Sachin
    - mark taylor
     nothin bad can happen to us if we were on a plane in India with Sachin on it.
    - hashim amla
     he can play that leg glance with a walking stick also,
    - waqar younis
     there are 2 kind of batsman in the world,
    1 Sachin tendulkar
    2 all the others.
    -andy flower
    i have seen god. He bats at no.4 for India in tests.
    - matthew hayden
     i see myself when i see Sachin batting.
    -don bradman🎳
    do your crime when Sachin is batting, bcos even god is busy watcing his batting.
    - Australian fan🏉
    best one from
    Barack Obama- i don't know about cricket but still i watch cricket to see Sachin play. . Not bcoz i love his play its bcoz I want to know the reason why my country production goes down by 5 percent when he's batting. . . 
    True Sachinists SHARE this. . . .
    Tendulkar's 1'st match,
    18 - 11 -1989
    and.....
    Last match,
    18 - 11 - 2013....
    That's all.


    Regards,
    Balasubramanian.C

    Monday, November 11, 2013

    மும்பை கான்திவிலி மைதானத்திற்கு சச்சின் பெயர்: கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

    மும்பை கான்திவிலி மைதானத்திற்கு சச்சின் பெயர்: கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு


    கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகள் படைத்த சச்சின் தனது 200-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியின் முடிவில், சச்சினுக்கு பிரமாண்ட பிரிவுபசார விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சச்சன் டெண்டுல்கரை கவுரவப்படுத்தி சிறப்பிக்கும் வகையில் மும்பையில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. மும்பை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த விழா, ஆடல்-பாடல் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் விமரிசையாக நடைபெற்றது.

    விழாவில் மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் திரையுலக பிரபலங்கள், இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன் பங்கேற்றார்.

    அப்போது, சச்சினின் கிரிக்கெட் சாதனைகளை கவுரவிக்கும் வகையில், மும்பையில் உள்ள கான்திவிலி மைதானத்துக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் முறைப்படி அறிவித்தது.

    சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியில், தங்க நாணயத்தில் டாஸ் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். டெஸ்ட் போட்டி நடைபெறும் 5 நாட்களிலும் சச்சின் படத்துடன் 5 வண்ணத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

    Saturday, November 9, 2013

    ஆறே படத்தில் ஆடி கார் வாங்கினார் சிவகார்த்திகேயன்:

    ஆறே படத்தில் ஆடி கார் வாங்கினார் சிவகார்த்திகேயன்:

    சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மெரீனா படத்தின் மூலம் சினிமா நடிகர் ஆனார். அதன் பிறகு 3 படத்தில் சிறிய காமெடி கேரக்டரில் நடித்தார். மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இவர் படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்க மெரீனாவில் 2 லட்சம் சம்பளம் வாங்கியவர் இப்போது 5 கோடி சம்பளம் வாங்குகிறார். தனது உயரத்தின் அடையாளமாக இப்போது 6 படங்களில் மட்டுமே நடித்துள்ள சிவகார்த்திகேயன் ஆடி கார் வாங்கி உள்ளார். அதில் உட்கார்ந்து போஸ் கொடுத்து அந்தப் படத்தை தனது பேஸ்புக்கிலும் வெளியிட்டுள்ளார்.

    சினிமாவின் சிகரங்களை தொட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போதும் தனது பழைய அம்பாசிடர் காரைத்தான் பயன்படுத்துகிறார். 6 படங்களில் நடித்த சிவா ஆடி காரில் பவனி வரப்போகிறார். சினிமா காட்டும் மாயாஜாலங்களில் இதுவும் ஒன்று

    நன்றி
    தினமலர்


    அன்புடன்
    பாலா ...
     

    Friday, November 8, 2013

    அஜீத்தின் ‘ஆரம்பம்’ 6 நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்து சாதனை

    அஜீத்தின் ‘ஆரம்பம்’ 6 நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்து சாதனை



    தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட ஓப்பனிங் கொண்ட ஹீரோக்களில் நடிகர் அஜீத்தும் ஒருவர். அவரது படம் வெளியாகும் போதெல்லாம் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.

    அந்த வகையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தீபாவளிக்கு 2-நாட்கள் முன்னதாக அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

    ‘பில்லா’ வெற்றிக்குப் பிறகு விஷ்ணுவர்தன்–அஜீத் கூட்டணியில் உருவான படம் என்பதால், இதுவரை இல்லாத அளவிற்கு ‘ஆரம்பம்’ படத்திற்கு டிக்கெட் விற்பனையும் படுஜோராக நடந்தது. முதல் நாள் விற்பனையிலேயே ஒரு வாரத்திற்குண்டான டிக்கெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்ந்தன.

    பல்வேறு எதிர்பார்ப்புகளிடையே வெளியான ‘ஆரம்பம்’ படத்தின் வசூலும் இப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுககு திருப்தியாக அமைந்தது. தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்காக பல தியேட்டர்கள் ஏற்கெனவே புக் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த தியேட்டர்களில் மட்டும் ‘ஆரம்பம்’ 2 நாட்களுக்கு வெளியானது.

    அதன்பிறகு தீபாவளிக்கு வெளியான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘பாண்டிய நாடு’ படங்களின் வசூல் திருப்திகரமாக இல்லாததால், அந்த திரையரங்குகளில் காட்சிகள் குறைக்கப்பட்டு ‘ஆரம்பம்’ படம் திரையிடப்பட்டது.

    ‘ஆரம்பம்’ படம் வெளியான முதல் நாள் மட்டும் ரூ.10.20 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ரிலீஸாகி 6 நாட்கள் ஆகிய நிலையில் ரூ.50 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்துள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வெளிநாடுகளிலும் ரிலீசான 3 நாட்களில் சுமார் 1.34 கோடி ரூபாயை வசூல் செய்து யு.கே.பாக்ஸ் ஆபீசில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

    படத்தின் மொத்த பட்ஜெட் 60 கோடி ரூபாய். ஆனால் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையிலேயே இந்த தொகையை நெருங்கிவிட்ட ‘ஆரம்பம்’ படத்தின் வசூல் தமிழகத்தின் பல்வேறு ஏரியாக்களிலும் எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதால் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனவே, இப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களும், ‘ஆரம்பம்’ படக்குழுவினரும் மிகுந்த மகிழ்ச்சியுடைந்துள்ளனர்.

    Thursday, November 7, 2013

    Alaguraja Movie Review:

    அழகுராஜா சினிமா விமர்சனம்:

    அழகுராஜா கார்த்தி. தான் நடத்தும் லோகல் கேபிள் சேனலை நம்பர் ஒன் சேனல் ஆக்கிய பின்புதான் கல்யாணம் என கண்ட கண்ட நிகழ்ச்சிகளையெல்லாம் தன் சேனலில் ஒலி, ஒளிபரப்பி வேறு ஒரு உலகத்தில் வாழ்ந்து வருபவர் கார்த்தி. அவர் தன் நண்பர் கல்யாணம் என்னும் சந்தானத்தின் காதர்பாய் பிரியாணி ஆசைக்காக, ஒரு கல்யாண ரிசப்ஷனுக்கு போகிறார். போன இடத்தில் அந்த மண்டபத்தில் நடக்கும் லைட் மியூசிக்கில் தப்பும் தவறுமாக பாடும் கொப்பும் குலையுமான சித்ராதேவிபிரியா என்னும் காஜல் அகர்வால் மீது காதல் வயப்படுகிறார். தனக்கு பாட்டு சரவரவில்லை என்றால் பரதம் என்று கலைத்துறையில் ஏதாவது சாதித்த பின்புதான் திருமணம் என கார்த்தி மாதிரியே விரதமிருக்கும் காஜல். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கேற்ப பாட்டும் வராமல் ஆட்டமும் சரிவராமல் கார்த்தியின் காதலுக்கு இல்லை இல்லை.. கடலைக்கு சற்றே மனம் இறங்குகிறார், இளகுகிறார். ஆனால், இந்த சமயத்தில் கார்த்தியின் அப்பா பிரபு இவர்களது காதலுக்கு தடை போடுகிறார். காரணம் பிரபுவின் பிளாஷ்பேக் காதல்! காஜலின் தாத்தா ராமசாமி என்னும் நாசரிடம் டிரைவராக வேலைபார்க்கும் பிரபுவுக்கு நாசரின் மகள் மீனாட்சி என்னும் ராதிகா ஆப்தே மீது காதல்! அந்த காதல் நாசருக்கு தெரிய வருவதற்கு முன்பே நாசரிடம் பிரபுவை (பிரபுவின் இளவயதிலும் கார்த்தியே நடித்திருப்பது மட்டுமே இம்மாம்பெரிய படத்தில் புதுமை, பொருத்தம்!) வேலைக்கு சேர்த்துவிட்ட கல்யாணம் சந்தானத்தின் அப்பா காளி சந்தானம் பிரபுவை (அதாங்க கார்த்தியை) வேறு ஒரு மேட்டரில் சிக்கவைத்து வேலையை விட்டு தூக்குகிறார். அதனால் பிரபு-ராதிகா ஆப்தேவின் காதல் பணால் ஆகிறது. அந்த கடுப்பில் கார்த்தியின் காஜல் மீதான காதலுக்கு நோ சொல்கிறார் பிரபு. அப்பா சந்தானம் செய்த தப்புக்கு பிள்ளை சந்தானம் பிராயச்சித்தம் தேடி பிரபுவின் சம்மதத்துடன் கார்த்தி-காஜலின் காதலை சேர்த்து வைக்க, ஆல் இன் ஆல் அழகுராஜா இனிதே முடிகிறது! இனிதேவா.?!

    ஏதோ டாப்-10, படவரிசை பத்து, நகைச்சுவை கலாட்டா உள்ளிட்ட சின்னத்திரை டிராமா மாதிரியான கதையை துணிச்சலாக படமாக எடுத்திருக்கும் இயக்குநர் ராஜேஷ்.எம்-ஐ பாராட்டியே ஆகவேண்டும்! அதில் துணிச்சலாக நடிக்கவந்த கார்த்தி, காஜல், சந்தானம், பிரபு, நாசர், சரண்யா, வி.எஸ்.ராகவன், ராதிகா ஆப்தே, கோட்டா சீனிவாசராவ், ஆடுகளம் நரேன், ரஞ்சனி உள்ளிட்டவர்களுக்கு அபார துணிச்சல்தான்.

    இந்த காமெடி டிராமாவுக்கும் பேமிலி டிராமாவுக்கும் இசையமைத்திருக்கும் எஸ்.தமன், ஒளிப்பதிவு செய்திருக்கும் சக்திசரவணன் உள்ளிட்ட எல்லோருக்கும் இப்படத்தை எழுதி, இயக்கி இருக்கும் ராஜேஷ்.எம் மாதிரியே ரொம்பவே துணிச்சல்! இதை படமாக தயாரித்திருக்கும் கே.இ.ஞானவேல்ராஜாவுக்கு துணிச்சலோ துணிச்சல்! ஆனால் அந்த துணிச்சல், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இருக்காது என்பதுதான் படக்குழுவினருக்கு எரிச்சல்! ஆக மொத்தத்தில் ப்ளாஷ்பேக்கில் பிரபுவாக நடிக்கும் கார்த்தி போர்ஷனை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஆல் இன் ஆல் அழகுராஜா - அல்வாராஜா! ராஜேஷ்.எம்-க்கு சரக்கு தீர்ந்துபோச்சா...?


    நன்றிகளுடன்,
    பாலசுப்ரமணியன்.சி




    Wednesday, November 6, 2013

    ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை செய்ய கமல் திட்டம்

    ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை செய்ய கமல் திட்டம்


    கமல் தற்போது ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்;டாம் பாகத்தில் பிசியாக இருக்கிறார். முதல் பாகத்தை வெளியிடுவதில் பெரும் சர்ச்சைகளை சந்தித்து அப்படத்தை வெளியிடுவதற்குள் படாதாபாடு பட்டுவிட்டார். இறுதியில் அப்படம் வெளியாகி அவருக்கு சுமார் ரூ.200 கோடி வரை வசூலை வாரித் தந்தது.
    இதேபோல் ‘விஸ்வரூபம்-2’ பாகத்திலும் வசூலை வாரிக்குவித்துவிட வேண்டும் என்று முனைப்பில் உள்ளார். நல்ல படங்களை கொடுத்தால் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்க முடியும் என்கிறார் கமல்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, ரூ.200 கோடியெல்லாம் பெரிய வசூல் கிடையாது. அதிகபட்சமாக ஆயிரம் கோடி ரூபாய் வரை நம்மால் வசூலிக்க முடியும். காரணம், 100 கோடி ரசிகர்களை நாம் வைத்திருக்கிறோம். அதனால், அவர்கள் விரும்பும் வகையில் படங்கள் கொடுத்தால் கண்டிப்பாக ரூ.1000 கோடி வரை வசூல் செய்துவிடலாம். வருங்காலத்தில் இதை செய்து காட்டவேண்டும் என்ற ஆர்வம் என்னுள் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Monday, November 4, 2013

    பாண்டியநாடு சினிமா விமர்சனம்

    பாண்டியநாடு சினிமா விமர்சனம்


    ரவுடிகள் சூழ்ந்த ஊரில் பயமின்றி நண்பர்களுடன் பொழுதை கழித்து நாயகியுடன் காதல் செய்து குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்றதும் ஆக்சன் அவதாரம் எடுக்கும் தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் கதை தான். ஆனால் திரைக்கதையில் பழைய படங்களின் சாயல் செய்ததில் வித்தியாசப்பட்டு நிற்கிறார்கள்.

    படத்தின் ஆகச்சிறந்த பலம் பாரதிராஜா தான். என்னா நடிப்பு, மனிதர் பிச்சு உதறியிருக்கிறார். இது போன்ற பாத்திரங்களில் இனி கவனம் செலுத்தினால் இயக்கத்தைப் போல் நடிப்பிலும் உச்சத்தை அடையலாம். மகன் இறந்ததும் தப்பாக கொடுக்கப்பட்ட இறப்பு சான்றிதழில் கையெழுத்து போட மறுத்து பொங்கி அழும் காட்சியிலும் மகனை கொன்றவர்களை கூலிப்படை வைத்தாவது கொல்ல வேண்டும் என்று செயலில் இறங்கும் போதும் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

    ரவுடிகளால் ஆளப்படும் மதுரையில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம். குடும்பத் தலைவர் பாரதிராஜா. இளைய மகன் விஷால் ஒரு செல்போன் கடை வைத்துக் கொண்டு, காமெடிரவுடி அடித்தால் கூட அடியை வாங்கிக் கொண்டு செல்லும் சாதுவான பையன். மூத்த மகன் சுரங்கத் துறையில் அதிகாரி. ஒரு பிரச்சனையில் பெரிய ரவுடியின் கனிம சுரங்கத்தை சீல் வைக்கிறார்.


    கொதித்தெழும் ரவுடி விபத்து ஏற்பட்டது போல் அந்த பெரிய பையனை கொன்று விடுகிறார். மகனை கொன்றவர்களை பழி வாங்க கூலிப்படையினரைத் தேடி அலைகிறார் பாரதிராஜா. அப்பாவுக்குத் தெரியாமல் ரவுடியை கொல்ல பின் தொடர்கிறார் விஷால். பல மாதங்கள் காத்திருப்புக்கு பிறகு வில்லனை கொன்று குடும்பத்தையும் ஊரையும் காப்பாற்றுகிறார் விஷால்.

    விஷாலுக்கு இந்த நேரத்தில் முக்கியமான படம் இது. கொஞ்சம் கூட ஹீரோயிசம் காட்டாமல் இயல்பான இளைஞனாக வருகிறார். பஞ்ச் டயலாக் கிடையாது. அதிரடி அறிமுகம் கூட கிடையாது. கடைசி நிமிடத்தில் ஆக்சன் அவதாரம் எடுக்கும் போது பின்னி எடுக்கிறார்

    லட்சுமி மேனன் அம்சமாக இருக்கிறார். புடவை கட்டும் விதத்திலும் சரி, மேக்கப்பிலும் சரி. அதே போல் அடக்கமாக நடிக்கவும் செய்கிறார். இடைவேளைக்கு பிறகு தான் கதையின் தேவை கருதி காணாமல் போகிறார்.

    சூரியின் காமெடிகள் சில இடத்தில் எடுபடுகின்றன. நகைச்சுவைக்கென்று மட்டும் இல்லாமல் கதையின் போக்குக்கு ஏற்ப சீரியஸாகவும் நடித்துப் போகிறார். நட்புக்காக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் விக்ராந்த். நன்றாக செய்திருக்கிறார்.

    சிறு வயதில் ஒரு வில்லனை கண்டால் நாமும் கொல்ல வேண்டும் போல் ஒரு எண்ணம் தோன்றும். சற்று மெச்சூர்ட் ஆன பிறகு அப்படி எந்த படத்திலும் தோன்றியதில்லை. ஆனால் இந்த படத்தில் வில்லனை நாமே கொல்ல வேண்டும் தோன்றியதில் நிற்கிறது படத்தின் வெற்றி.

    பாடல்கள் நன்றாக இருக்கின்றன எடுக்கப்பட்ட விதத்திலும் கூட. படத்தில் ஆரம்பத்திலிருந்து சண்டை பிரச்சனை என்று காட்டாமல் சண்டை நடக்கப்போகிறது என்ற பெப்பை கிரியேட் பண்ணி க்ளைமாக்ஸ் வரை கொண்டு சென்றிருப்பது நன்றாக இருக்கிறது.

    நன்றி
    பாலா...

    Friday, November 1, 2013

    ஆரம்பம் திரை விமர்சனம்


     

    ஆரம்பம் - சினிமா விமர்சனம்

    காலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மாவட்ட தலைமை, நகர தலைமை கிடையாது. ஆனால் ரசிகர்களின் உற்சாகத்துக்கு மட்டும் அளவே கிடையாது. போன தீபாவளியன்று துப்பாக்கி காலை 4 மணிக்காட்சி பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன் இந்த ஓப்பனிங் மாஸ் விஜய்க்கு கூட கிடையாது.

    என்ன ஒரு ஸ்கிரீன் ப்ரசன்ஸ். என்ன ஒரு அழகு. என்ன ஒரு வசீகரம். என்ன ஒரு ஸ்டைல். ரஜினிக்கு அடுத்து சந்தேகமில்லாமல் அஜித் தான். படம் முழுக்க அஜித் அஜித் அஜித் தான். அஜித் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி சந்தேகமில்லாமல் டபுள் கொண்டாட்டம் தான்.

    இந்த படம் ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள். நான் அந்தப்படத்தை பார்க்கவில்லை. அதனால் ஒப்பிட்டு பார்ப்பதை விட்டு விடுவோம்.
    ரசிகர்களின் உற்சாகம்

    அஜித் மும்பையில் ஒரு உதவி கமிசனர். ஒரு தீவிரவாத தாக்குதலில் அவரது சக நண்பர் ராணா டகுபதி இறந்து விடுகிறார். அதில் புல்லட் ப்ரூப் ஊழல் நடந்திருப்பது தெரிய வருகிறது. ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சரும் கமிசனரும் அஜித்தின் குடும்பத்தை கொன்று விடுகின்றனர்.

    அதில் இருந்து தப்பிக்கும் அஜித்தும் நயன்தாராவும் ஆர்யாவை பயன்படுத்தி வில்லன்கள் கூட்டத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர். இறுதியில் வில்லன்களை வீழ்த்தி படத்தை முடித்து வைக்கிறார் அஜித்.

    முதல்பாதியில் தாடியுடன் வரும் அஜித் வசீகரிக்கிறார். பிட்டாக இருக்கிறார். எப்போதும் போல் கோட்டு கோபி போல் இருப்பாரோ என்று நினைத்தேன். ஆனால் மறந்தும் கோட்டை கையில் எடுக்கவில்லை. டிசர்ட் தான் படம் முழுக்க அருமையாக இருக்கிறது.
    காலை 5.30மணிக்கு திரையரங்கம் முன் நான் செல்வின் சிவா

    ஆர்யா பாத்திரத்திற்கு சரியான தேர்வு. அவ்வப்போது நச் வசனங்களில் சிரிக்கவும் வைக்கிறார். முதலில் அஜித்திடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் போதும் இடைவேளைக்கு பிறகு உண்மை தெரிந்து உதவும் போதும் நன்றாகவே செய்திருக்கிறார்.

    நயன்தாரா ம்ஹூம் ஒன்னும் சாதாரணமாக சொல்வதற்கில்லை. ஒரு வில்லனை கொல்வதற்காக ஒரு சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு எண்ணெய் வழியும் உடம்புடன் வரும்போது அப்படிேய டென்சனாகிட்டேன். சமநிலை வருவதற்கு பத்து நிமிடம் பிடித்தது. நாயனம் வாசிச்சவனெல்லாம் பாக்கியசாலிங்க.
    இடைவேளையில் காரசார விவாதம்

    டாப்ஸி வழக்கமான தமிழ் சினிமாவின் லூசு கதாநாயகியாக வருகிறார். ஒரு பாடலுக்கு ஆர்யாவுடன் வந்து செல்கிறார். அவ்வப்போது பேபி பேபி என்று கொஞ்சுகிறார். நமக்குதான் கடுப்பாகிறது.

    கிஷோர் அந்த போலீஸ் கதாபாத்திரத்திற்கு நச்சென பொருந்துகிறார். அதுல் குல்கர்னியை வேஸ்ட் செய்து இருக்கிறார்கள். ராணா டகுபதியை தெலுகு மார்க்கெட்டுக்காக போட்டு இருக்கிறார்கள். பத்து நிமிடம் வந்து செல்கிறார்.

    அஜித்தும் ஆர்யாவும் பணத்தை களவாடும் காட்சி தான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும். ஆனால் எனக்கு காட்சி சற்று சுமாராகத்தான் தெரிகிறது. இன்னும் இன்ட்ரஸ்டிங்காக யோசித்து இருக்கலாம்.

    பாடல்கள் எல்லாமே கடுப்பேற்றுகி்ன்றன. தேவையில்லாத இடத்தில் எல்லாம் பாடல்கள் வருகின்றன. ஹீரோ இன்ட்ரோ சாங்க் சுமாராக இருக்கிறது.

    முதல்பாதியில் சுவாரஸ்யமே இல்லை. காலங்காத்தால பார்ப்பதால் கொட்டாவி வரவைத்தது. பின்பாதி தான் படத்தின் பக்கா பேக்கேஜ். ஆனால் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் போறவன் வர்றவனையெல்லாம் சுட்டுக்கிட்டு இருக்கப் போறாங்களோ.

    ஆர்யாவின் அந்த குண்டு பிளாஷ்பேக், படத்தின் ஓட்டத்தை இன்னும் குறைக்கிறது. அதை அப்படியே வெட்டி எறிஞ்சிடலாம். அது படத்தின் சுவாரஸ்யத்தை எந்த விதத்திலும் பாதிக்காது.

    அஜித்தை விட்டு இந்த படம் என்று பார்த்தால் சற்று தொங்கலாகத்தான் இருக்கும். ஆரம்பம் என்று பெயர் வைத்ததற்காக படத்தில் ஏகப்பட்ட காட்சிகளில் ஆரம்பம் ஆரம்பம் என்று சொல்வது சற்று நெருடத்தான் செய்கிறது.

    அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் டபுள் அடிப்பொளி. சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம். ஆனால் பொதுமக்களுக்கு ஒரு முறை பார்க்கலாம் ரகமே.
     
     
     
    நன்றி

    ஆரூர் மூனா

    Tuesday, October 29, 2013

    கவிதை

                       கவிதை


    நதியில் மீனை கண்டேன்
    காட்டினில் மானை கண்டேன்
    அன்பே இரண்டையும் கண்டேன்
    உன் கண்களில்!


    ப்ரியமுடன்,
    பாலா...

    Saturday, October 19, 2013

    நரேந்திர தாமோதர தாஸ் மோடி ?

    நண்பர்களே நலம் விரும்பிகளே! இந்தப் பதிவை பார்த்து இவன் இம்மதக் கொள்கை உடையவன்,இந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்று எண்ண வேண்டாமென்று கேட்டுக்கொள்கிறேன். மிகவும் பத்திரிக்கைச் செய்திகளினாலும் மற்றும் ஊடக பதிவுகளினாலும் ஏற்பட்ட தாக்கத்தை மட்டுமே பதிவிடுகிறேன், இது பதிவு என்று கூறுவதை விட ஒரு வினா என்றே கூறலாம்! முற்றிலும் இது ஒரு போற்றுதல் படலம் அல்ல! எங்கோ இருக்கும் ஒரு மாநிலத்தலைவரைப் பற்றி இன்று நான் எழுத காரணம் என்ன ?ஏன் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் ஒரு அரசியல் தலைவரை இப்படி முன்னிறுத்துகிறது? உண்மையில் ஒரு தலைமை பஞ்சம் இங்கு இருப்பதை உணர முடிகிறது!


    கடந்த 10 மாதங்களில் தினமும் பத்திரிக்கையிலும் அல்லது சமூக வலைதளங்களிலும் ஒருவருடைய பெயர் மற்றும் புகைப்படம் அல்லது அவரை பற்றியான யூகச் செய்திகள் தவறாமல் இடம் பெற்று இருந்தது. இவர் இன்னது செய்தார் என்று ஒரு தரப்பும், இல்லை என்று மறுக்கும் மற்றொரு தரப்பும் என்று விவாதிக்கும் அளவுக்கு இந்தியாவின் மிக முக்கியப் பிரபலம் ஆனார். ஏன் போற்றுகின்றனர் ஒரு தரப்பினர்? மற்றொரு தரப்பினரோ கடுமையான வாதங்களை வைத்து ஏன் எதிர்க்கின்றனர்? நம் நாட்டில் ஒரு அரசியல் தலைவருக்கான தனி மனித போற்றுதலை நீண்ட நாட்களுக்குப் பிறகு காண முடிகிறது! குறிப்பாக இவரை பாராட்டும் தரப்பினர் கூறும் போது இந்த மாநிலத்தை நாட்டின் முதன்மை ஆக மாற்றியுள்ளார் என்று கூறுகின்றனர். எதிர்ப்பவர்களோ இவர் ஒரு மதத்தை சார்ந்தவர், மதசார்பற்றத் தன்மையை இவரிடம் காண முடியாது என்ற மிக நியாயமான எதார்த்தமான ஐயத்தை முன் வைக்கின்றனர்! ஊடகங்களில் எதிர்கட்சிக்கு எப்போதும் இருக்கும் ஆதரவை விட இம்முறை சற்று அதிகமாகவே உள்ளது. அதுவும் இவரை முன்னிறுத்தி ஊடகங்கள் தங்கள் பக்கங்களை நிரப்பிக் கொண்டனர்.




    இன்றைய எதிர்கட்சியின் நாளைய பிரதமர் வேட்பாளர்! ஆம் இன்றைய ஊடகங்களில் தலைப்புச் செய்தி இவர் பெயர் தான்! 2014ம் ஆண்டு நடக்கவிருக்கும் மக்களவை தேர்தலுக்கு அறிவிக்கப்பட்ட முதல் பிரதமர் வேட்பாளர் இவர் தான்! ஆம் நரேந்திர மோடி தான் இப்போதைய'Indian Trend'. குஜராத் மாநிலம் வடநகர் என்னும் ஊரில் 1950ம் ஆண்டில் பிறந்தவர் தான் மோடி. ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம் எனப்படும்RSS அமைப்பிலிருந்து வந்த அவர் . பின் தன் அரசியல் வாழ்கையை பாரதீய ஜனதா கட்சியில் இருந்து தொடங்கினார்! Political Science ல் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். தொடர்ந்து மூன்றாவது முறையாக குஜராத் மாநிலத்தின் முதல்-அமைச்சாரக பதவி வகித்து வருகிறார். ஜூன் 2013 ல் கோவா வில் நடந்த பிஜேபி தேசிய செயற்குழுவில் மோடி, அக்கட்சியின் தேர்தல் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டார். அடுத்து அவர் தான் பிரதமர் வேட்பாளர் என்று ஊடகங்களும் அரசியல் நோக்கர்களும் யூகித்த போது கடந்த வாரம் வெள்ளியன்று (​செப் 13, 2013) மோடி தான் பிரதமர் வேட்பாளர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது அக்கட்சி.


    மோடி நல்லவரா? கெட்டவரா ? என்றெல்லாம் எனக்கு தெரியாது.ஆனால் பெரும்பாலான மக்கள் அவரிடம் எதோ எதிர்பார்கின்றனர்! இந்த நாட்டு மக்களுக்கு இன்றைய பிரதமர் யாரென்று தெரியாமல் இருக்கலாம் ஆனால் இவரை தெரியாமலிருக்க வாய்ப்பில்லை! இவர் இவ்வளவு பிரபலம் அடைந்ததற்கு காரணம் குஜராத், நாட்டின் முதன்மை மாநிலம் என்று பரப்பப்படும் விளம்பரங்கள் ! மற்றொரு காரணம் குஜராத் கலவரம்! நாளைய பிரதமர் என்று சொல்லும் இவரை எதிர்க்கும் சிலர் இன்றைய ஆட்சி நிலவரங்களை எழுத தவறுகின்றனர்! அதனாலேயே இவருக்கு மக்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது!

    குஜராத் இன்றைய தேதியில் நம்பர் 1 மாநிலம் தான், ஏன் 2002 ல் கூட குஜராத் முதன்மை மாநிலம் தான் ! ஏதோ சாதாரண மாநிலத்தை முன்னேற்றியவர் போல் ஏன் இவரை மக்கள் போற்றுகின்றனரே? என்று எனக்கு சந்தேகம். அப்போது அவரை பற்றியும் அம்மாநிலத்தை பற்றியும் ஆராயத் தொடங்கிய போது கிடைத்த தகவல்கள் சில : ஆசியாவின் முதல் முறையாக சூரிய வெப்பம் மூலம் மின்சாரம் தயாரிக்கும் ஆலையை சுமார் 5000 ஏக்கர் நிலப்பரப்பில் நிறுவியுள்ளார்! இதன் மூலம் ஆண்டுக்கு சுமார்1.6 மில்லியன் யூனிட் மின்சாரம் தயாரிக்கபடுவதாக புள்ளியியல் ஒன்று கூறுகிறது.அம்மாநிலத்தில் இவரால் செயல்படுத்தப்பட்ட நதிகள் இணைப்பு திட்டத்தால், கிராமங்களில் இருந்துநகரங்களுக்கு குடிபெயர்ந்து செல்பவர்கள் எண்ணிக்கை 30 சதவீதம் குறைந்துள்ளது என ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது! முற்றிலும் பாலை நிலமான குஜராத்தின் விவசாயம் தமிழகம், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களுடன் போட்டியிடுகிறது! இவையெல்லாம் 2001க்கு பின் ஏற்பட்ட மாற்றங்கள் என்று இந்திய புள்ளியியலே கூறுகிறது! நாட்டின் ஏற்றுமதி விகிதத்தில் 15% குஜராத்தின் பங்கு.28 மாநிலம் 7யூனியன் பிரதேசம் உள்ள இந்நாட்டில் இந்த சதவிகிதம் மிக அதிகம். தொழில் துறையிலும் அபார வளர்ச்சியை அம்மாநிலம் தொட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆக அம்மாநிலம் இவரால் ஒரு வகையில் வளர்ச்சி அடைந்திருப்பதை உணர முடிந்தது! ஒன்றுமே செய்யாமல் ஒரு மனிதரை மூன்று முறை முதல்வராக தேர்ந்தெடுக்க அம்மாநில மக்கள் ஒன்றும் முட்டாள் இல்லை என்பது விளங்கியது!



    இன்றைய தேதியில் இந்தியாவின் முக்கியமான பிரபலம் என்றால் அதுமோடி தான்! 2012 ம் ஆண்டு டைம்ஸ் பத்திரிக்கையின் ஆசிய பதிப்பில் மோடியை பற்றியான கட்டுரை இடம் பெற்றிருந்தது! அதன் அட்டையில் மோடியின் புகைப்படத்தை வெளியிட்டு இருந்தது, நம் நாட்டில் மிக குறைவான தலைவர்களுக்கு(காந்தி,வல்லபாய் படேல்,நேரு, இந்திரா காந்தி )கிடைத்த வெகுமதியாகும். சமீபத்திய பேட்டி ஒன்றில் இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், மோடியுடன் இணைந்து செயலாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார், மேலும் குஜராத்தின் திட்டங்கள் தன்னை கவர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்!



    இப்படி இவரை பற்றியான நல்ல ஆதரவான கருத்துக்கள் ஒரு புறம் இருந்தாலும், குஜராத் கலவரம், கோத்ரா ரயில் எரிப்பு போன்ற வன்முறை சம்பவங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன! இப்படி எல்லா தலைவர்களுக்கும் ஏதேனும் ஏற்ற இறக்க தன்மைகள் இருக்கும். 2014 ம் ஆண்டோ அதற்கு முன்போ நாடு பொதுத் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.மக்கள் தங்கள் விரும்பிய கட்சிக்கு வாக்குகளை பதிவு செய்ய காத்திருக்கின்றனர்! இவரை முன்னிறுத்துவதற்கு பலர் எதிர்ப்பை தெரிவிக்கின்றனர். இவரை எதிர்ப்பதா ? ஆதரிப்பதா? என்ற ஐயம் என்னை போன்ற பாமரனுக்கு தெரியவில்லை !

    ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது இன்று இவரைத் தவிர இங்கு வேறு எந்த மாற்று தலைவர்களும் இல்லை! இது ஒரு நிதர்சனமான உண்மை!

    அப்படி ஏதேனும் மாற்று தலைவர்கள் இருந்தால் சொல்லுங்கள்?

    காத்திருக்கிறேன் இந்தியாவின் விடியலை காண !

    -பாமரக் குடிமகன்!