Pages

Tuesday, November 26, 2013

ஒரு இனிய பயண அனுபவம்

நண்பர்களுக்கு இனிய வணக்கம் ,

இந்த நாள் இனிய நாள்.

ஒரு நாள் நாங்கள் பார்த்த ஒரு உடல் ஊனமுற்ற மனிதனை பற்றியும் அந்த மனிதனை அணுகிய மனித மிருகங்களை பற்றிய பதிவு இது ,

சென்ற வாரத்தில் ஒரு நாள் எங்கள் பணி விசயமாக கோயம்பத்தூர்   நகரத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு நானும் என் அறை நண்பர் ராஜீவும் பொள்ளாச்சிக்கு  இரண்டு\
சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம் அப்போது கிணத்துகடவு  தாண்டி சென்று கொண்டிருக்கும் பொது நண்பர் ராஜீவ் ஒரு காபி அருந்திவிட்டு நம்
பயணத்தை தொடரலாம் என்று கூறியதால் சாலை ஓரத்தில் பிரபலமான காபி கடைக்கு சென்றோம் காலை நேரம் என்பதால் கடையில் கூட்டம் எதுவும் இன்றி காலியாக
தான் இருந்தது அந்த கடையில் காபி தவிர  வேறு எதுவும் கிடையாது என்பதால் நானும்
நண்பருடன் வேண்டா  வெறுப்பாக கடையில் சென்று அமாந்தோம் நண்பர் காபி ஆர்டர் செய்தார் , பின்னர் இருவரும் பேசிக்கொண்டே காபி  அருந்த தொடங்கினோம் , நான் கடையில் சாலையை பார்க்கும் வண்ணம் அமர்ந்து இருந்தேன் .

அந்த நேரத்தில் அந்த நெடுஞ்சாலையில் ஒரு பிச்சைக்கார உருவம் கொண்ட மனிதர் சாலையை கஷ்டப்பட்டு கடந்து நாங்கள் அமர்ந்து இருந்த கடையை நோக்கி வந்தார், அவரின் இரண்டு கால்களும் வளைந்து மிகவும் பரிதாபமாக இருந்தார் அவரின் இரண்டு கா ல்களும் போலியோ  ஏதோ ஒரு வினோதமான எலும்பு நோய் என்று பார்த்த நேரத்தில் உணர முடிந்தது , அவர் கையில் ஒரு அலுமினிய பாத்திரமும் இருந்தது,

நாங்கள் இருவரும் பார்த்து பரிதாப பட்டு பேசிகொண்டோம் , அப்போது நண்பர் ராஜீவ் இவர் ஒரு பிச்சைகாரர் என்று கருதி அவருக்கு ஒரு பத்து ரூபாய் கொடுக்க கையில் எடுத்து  வைத்து இருந்தார் , அவர் எங்கள் அருகில் வந்து பேச தொடங்கினர் அபோது அவர் நான் நேற்று இரவு மதியம் சாப்பிட்டேன் பிறகு சாப்பிடவே இல்லை என்று கூறி தனக்கு பசிபதாகவும்  அதற்கு காபி வாங்கி போக வந்ததாக கூறி ஒரு காபி ஆர்டர்  செய்தார்.

அந்த மனிதரை
மனிதரை பரிகாசமாக பார்த்த அந்த கடையில் வேலை செய்யும் பெண்  இந்த மனிதரை பார்த்து பிச்சைகாரனுக்கு  எடுப்பது பிச்சை  இதில் காபி வேறயா என்று கூறி ஒரு கப்பில் கொண்டு வந்து ஊற்றினாள் , அந்த மனிதர் தனக்கு இன்னும் ஒரு காபி வேண்டும் என கூறவே அவள் மீண்டும் வேண்டா  வெறுப்பாக மீண்டும் கொண்டு வந்து ஊற்றினாள்  அளவு குறைவாக.

அந்த மனிதரின் முகத்தில் சிறிது கூட  புன்னகை மறையவில்லை மாறாக அந்த மனிதர் யோசிக்காமல் இரண்டு காபிக்கு  உண்டான தொகை ரூபாய் 30 கொடுதுவித்து நடக்க தொடங்கினார் , அபோது மனதில் நினைத்து கொண்டேன் மனிதனின் உருவத்தை பார்த்து கேலியாக நினைக்க கூடாது என்று. அந்த மனிதர் ஊனமாக இருந்தாலும் மனது ஊனம் இல்லை மேலும் அவர் தோற்ற்றம் அப்படித்தானே தவிர உள்ளம் வெள்ளை, அந்த கடையில் வேலை வேலை செய்த பெண்ணுக்கு அவர அருவருப்பாக தெரிந்தாலும், அவரின் பணம் அப்படி தெரியவில்லை

அந்த மனிதர் அந்த பெண்ணை செருப்பால் அடிக்காத  குறையை தன் நடத்தையால் செய்து விட்டு சென்று விட்டார்.

இறுதியாக அவர் கூறியது தான் பிச்சை எடுபதில்லை என்று  கூறியதோடு தன்னால் முடிந்த வேலை செய்து வாழ்வாத கூறினார்

நல்லவேளை நாங்களும் அவருக்கு 10 ரூபாய் கொடுத்து அவரை இழிவு செய்யவில்லை நண்பர் ராஜீவ் அந்த பணத்தை பாக்கெட்டில் போட்டுகொண்டு பொள்ளாச்சியை நோக்கி பயணமானோம் அந்த மனிதரின் நினைவுகளோடு .


அதனால் கூற விளைவது யாதெனில் உடல் தான் ஊனமே தவிர அவர்களுக்கு மனதில் இல்லை, அனால்  நம்மில் பலர் உடல் தான் நலமே தவிர மணம்  ஊனம்தான்.

நாம் சந்தித்த மிக அற்புத மனிதரில் அவரும்  ஒருவர்,


இந்த பதிவை எழுத ஊக்கபடுத்திய நண்பர் ராஜீவுக்கும்  நன்றிகளுடன் 

பாலசுப்ரமணியன்.சி 
கோயம்புத்தூர்.




























 

No comments: