என்னுடைய பார்வையில் கருப்பன் படம்
நடிகர்கள்
விஜய் சேதுபதி -கருப்பன்
தான்யா ரவிச்சந்திரன் - அன்பு
பாபி சிம்ஹா - கதிர்
பசுபதி - மாயி
சிங்கம் புலி-கருப்பனின் மாமா , மற்றும் பலர்
இயக்குனர் : ரேணிகுண்டா புகழ் பன்னீர்செல்வம்
விஜய் சேதுபதி படம் என்றாலே வழக்கமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும் அதே ஆவலில் இந்த படத்தை ஈரோடு மகாராஜா திரையரங்கில் நண்பர் கல்யாண சுந்தரத்துடன் பார்க்க சென்றேன்
சரி கதைக்கு வருவோம் , ஜல்லிக்கட்டு மாடு அணையும் முரட்டு வீரனான கருப்பனுக்குத் தன் தங்கை அன்புச்செல்வியைத் திருமணம் செய்து வைக்கிறார் மாயி. கண் பார்வையற்ற கருப்பனின் தாயை அன்புச்செல்வி பிரியமாகப் பார்த்துக் கொள்வதால், படிப்பறிவுள்ள தன் பணக்கார மனைவி மீது ஓவர் காதலுடன் இருக்கிறார் படிக்காத ஏழை கருப்பன். அன்புச்செல்வியை ஒருதலையாகக் காதலிக்கும் கதிர் அவர்களைப் பிரித்து விடுகிறான். கருப்பன் மீண்டும் தன் மனைவியுடன் எப்படிச் சேர்ந்தார் என்பதே படத்தின் கதை.
வீரம், காதல், வஞ்சம், பிரிவு, துக்கம், சுபம் என கதை ஓட்டம் மிக எளிமையாகவும் பரீச்சயமாகவும் இருக்கிறது. அதனை மீறி சுவாரசியப்படுத்துவது படத்தின் பாத்திரங்கள்தான் தான். சிங்கம்புலியைக் கூட ரசிக்கும்படி திரையில் உலவ விட்டுள்ளதே இயக்குநர் பன்னீர் செல்வத்தின் வெற்றி. குடித்து விட்டு எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு சிங்கம்புலியுடன் ஆட்டம் போடும் காட்சி சூப்பர். அது அப்படியே நீண்டு, ‘ஆலுமா டோலுமா’ பாடலுக்கு வம்பிழுப்பவர்களை அடித்துத் துவம்சம் செய்வதும் அருமையாக உள்ளது. பெரிய மீசையோடு கிராமாத்தானாக வரும் விஜய் சேதுபதி ரசிகர்களைக் கவர்வது உறுதி. சக்திவேலின் ஒளிப்பதிவு சூப்பர்
பாபி சிம்ஹா படத்தில் வழக்கமான வில்லன் கதாபாத்திரம். கிட்டத்தட்ட கதையும் அவ்வாறே பயணிக்கிறது. ஆனால், இப்படம் சுபம் என்பதுதான் வித்தியாசம். இறைவி போல் குழப்பமான காதாபாத்திரம் இல்லாததால், வில்லத்தனத்தை முழு வீச்சில் காட்டக் கிடைத்த பொன்னான வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார்.
விஜய் சேதுபதி மாடு அணையும் காட்சிகளை இமானின் பின்னணி இசையோடு பார்க்க அசத்தலாய் உள்ளது. விஜய் சேதுபதியின் ரொமான்ஸ் திகட்டுமளவு தூக்கலாய் உள்ளது. அவர் பேசும் ஆங்கிலம் ரசிக்க வைக்கிறது. அவருக்கு ஈடு கொடுத்து செமயாக நடித்துள்ளார் தான்யா. படத்தின் அத்தனை கதாப்பாத்திரங்களுமே மிக இயல்பான குணாதிசயத்தோடு இருப்பது சிறப்பு. மாயியாக நடித்துள்ள பசுபதி, வில்லன் கதிராக வரும் பாபி சிம்ஹா, அவருக்குத் துணை புரிய ஒத்தோதும் தவசி என கதாபாத்திர தேர்விலேயே இயக்குநர் பன்னீர் செல்வம் வாகை சூடி விடுகிறார்
படத்தில் அங்கங்கே நாட்டுப்புற கலைகளை தூக்கி நிறுத்தி இருப்பதும், போகிறபோக்கில் தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் பற்றி சிங்கம்புலி வசனம் அருமை , குடியால் குடும்பம் கெடும் என்ற செய்திகளை சொன்னதுக்கு இயக்குனருக்கு
வழக்கமான பழைய திரைக்கதைதான் , ஆனாலும் விஜய் சேதுபதி நடிப்பில் பார்க்கும் போது படம் மாஸ்டர் பீஸ்தான்.
நிச்சயமாக கொடுத்த காசுக்கு ஒர்த்தான படம்தான்
நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன்.சி
காரிமங்கலம் வட்டம்&அஞ்சல்
தருமபுரி மாவட்டம்
+919965818701