Pages

Sunday, October 1, 2017

என்னுடைய பார்வையில் கருப்பன் படம்

என்னுடைய பார்வையில் கருப்பன் படம் 

நடிகர்கள் 
விஜய் சேதுபதி -கருப்பன் 
தான்யா ரவிச்சந்திரன் - அன்பு 
பாபி சிம்ஹா - கதிர் 
பசுபதி - மாயி 
சிங்கம் புலி-கருப்பனின் மாமா , மற்றும் பலர் 
இயக்குனர் : ரேணிகுண்டா புகழ் பன்னீர்செல்வம் 

விஜய் சேதுபதி படம் என்றாலே வழக்கமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும் அதே ஆவலில் இந்த படத்தை ஈரோடு மகாராஜா திரையரங்கில் நண்பர் கல்யாண சுந்தரத்துடன் பார்க்க சென்றேன் 

சரி கதைக்கு வருவோம் , ஜல்லிக்கட்டு  மாடு அணையும் முரட்டு வீரனான கருப்பனுக்குத் தன் தங்கை அன்புச்செல்வியைத் திருமணம் செய்து வைக்கிறார் மாயி. கண் பார்வையற்ற கருப்பனின் தாயை அன்புச்செல்வி பிரியமாகப் பார்த்துக் கொள்வதால், படிப்பறிவுள்ள தன் பணக்கார மனைவி மீது ஓவர் காதலுடன் இருக்கிறார் படிக்காத ஏழை கருப்பன். அன்புச்செல்வியை ஒருதலையாகக் காதலிக்கும் கதிர் அவர்களைப் பிரித்து விடுகிறான். கருப்பன் மீண்டும் தன் மனைவியுடன் எப்படிச் சேர்ந்தார் என்பதே படத்தின் கதை.
    வீரம், காதல், வஞ்சம், பிரிவு, துக்கம், சுபம் என கதை ஓட்டம் மிக எளிமையாகவும் பரீச்சயமாகவும் இருக்கிறது. அதனை மீறி சுவாரசியப்படுத்துவது படத்தின் பாத்திரங்கள்தான்  தான். சிங்கம்புலியைக் கூட ரசிக்கும்படி திரையில் உலவ விட்டுள்ளதே இயக்குநர் பன்னீர் செல்வத்தின் வெற்றி. குடித்து விட்டு எம்.ஜி.ஆர். பாடல்களுக்கு சிங்கம்புலியுடன் ஆட்டம் போடும் காட்சி சூப்பர். அது அப்படியே நீண்டு, ‘ஆலுமா டோலுமா’ பாடலுக்கு வம்பிழுப்பவர்களை அடித்துத் துவம்சம் செய்வதும் அருமையாக உள்ளது. பெரிய மீசையோடு கிராமாத்தானாக வரும் விஜய் சேதுபதி ரசிகர்களைக் கவர்வது உறுதி. சக்திவேலின்  ஒளிப்பதிவு சூப்பர் 

பாபி சிம்ஹா படத்தில் வழக்கமான வில்லன்  கதாபாத்திரம். கிட்டத்தட்ட கதையும் அவ்வாறே பயணிக்கிறது. ஆனால், இப்படம் சுபம் என்பதுதான் வித்தியாசம். இறைவி போல் குழப்பமான காதாபாத்திரம் இல்லாததால், வில்லத்தனத்தை முழு வீச்சில் காட்டக் கிடைத்த பொன்னான வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்தியுள்ளார். 
விஜய் சேதுபதி மாடு அணையும் காட்சிகளை இமானின் பின்னணி இசையோடு பார்க்க அசத்தலாய் உள்ளது. விஜய் சேதுபதியின் ரொமான்ஸ் திகட்டுமளவு தூக்கலாய் உள்ளது. அவர் பேசும் ஆங்கிலம் ரசிக்க வைக்கிறது. அவருக்கு ஈடு கொடுத்து செமயாக நடித்துள்ளார் தான்யா. படத்தின் அத்தனை கதாப்பாத்திரங்களுமே மிக இயல்பான குணாதிசயத்தோடு இருப்பது சிறப்பு. மாயியாக நடித்துள்ள பசுபதி, வில்லன் கதிராக வரும் பாபி சிம்ஹா, அவருக்குத் துணை புரிய ஒத்தோதும் தவசி என கதாபாத்திர தேர்விலேயே இயக்குநர் பன்னீர் செல்வம் வாகை சூடி விடுகிறார்
           படத்தில் அங்கங்கே நாட்டுப்புற கலைகளை தூக்கி நிறுத்தி இருப்பதும், போகிறபோக்கில் தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக்  பற்றி சிங்கம்புலி வசனம் அருமை  , குடியால் குடும்பம் கெடும் என்ற செய்திகளை சொன்னதுக்கு இயக்குனருக்கு 
      வழக்கமான பழைய திரைக்கதைதான் , ஆனாலும் விஜய் சேதுபதி நடிப்பில் பார்க்கும் போது படம் மாஸ்டர் பீஸ்தான்.
     நிச்சயமாக கொடுத்த காசுக்கு ஒர்த்தான படம்தான் 

நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன்.சி 
காரிமங்கலம் வட்டம்&அஞ்சல் 
தருமபுரி மாவட்டம் 
+919965818701


































































Thursday, July 27, 2017

விக்ரம் வேதா ஒரு பார்வை :-


                                     



ஓரம் போ  மற்றும் வ குவாட்டர் கட்டிங் போன்ற மொக்க படங்களாக கொடுத்த புஷ்கர்- காயத்திரி இருவரும் இணைந்து கணவன் மனைவி இயக்கத்தில் வெளிவந்த மூன்றாவது படம்தான் விக்ரம் வேதா .

   நீண்ட நாட்களுக்கு பிறகு என்னுடைய சொந்த ஊரான காரிமங்கலம் நகரில் ராமயா சினிமாவில் இந்த படத்தை பார்த்தேன் , இப்பொழுது இந்த ரம்யா திரையரங்கம் சிறப்பான இருக்கை  வசதிகளுடன் உள்ளது .

படத்திற்கு வருவோம்

விக்ரம் - மேடி  ( மாதவன் )
வேதா - விஜய் சேதுபதி
மற்றும் வரலக்ஷ்மி , ஷ்ரத்தா  
           
போலீஸ் டிரஸ் இல்லாத மாதவனும் ' 16 கொலை செய்த விஜய் சேதுபதியின் தெனாவட்டான நடிப்பும் படத்தின் ஆக சிறந்த பலம் . அதுவும் விஜய் சேதுபதி வாய்ஸ் மாடுலேஷன் இல் சார் ஒரு கத சொல்லட்டுமா என்று ஆரம்பிப்பது செம்ம கெத்து ,
 
      படத்தின் தலைப்பு குறிப்பிடுவதைப் போல, விக்ரமாதித்யன் - வேதாளம் கதைதான் படம். விக்ரமாதித்யன் வேதாளத்தை தனது தோளில் சுமந்துகொண்டு செல்லும்போது, வேதாளம் ஒரு புதிர் கதையைச் சொல்லி, அதற்கான விடையைக் கேட்கும். சரியான பதில் சொன்னவுடன் வேதாளம் பறந்து சென்றுவிடும்.   
 
  இங்கு ,
 
வேதாளம் - விஜய் சேதுபதி , விக்ரமாதித்தன் - மாதவன் ,
 
விக்ரம் ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. கொடுங்குற்றவாளிகளை சுட்டுத்தள்ளும் ஒரு காவல்துறை அணியில் இருக்கிறார். வேதா என்ற 14 கொலைகளைச் செய்த கேங்ஸ்டரை சுட்டுத்தள்ள முடிவுசெய்கிறது அந்த அணி. இந்த நிலையில் தானே முன்வந்து சரணடையும் வேதா, ஜாமீன் பெற்று வெளியேறுகிறான்.
 
வேதா தானாக முன்வந்து சரணடைந்தது ஏன் என்ற கேள்விக்கு பதிலைத் தேட ஆரம்பிக்கிறான் விக்ரம். இப்படி பல முறை விக்ரமின் கையில் சிக்கும் வேதா ஒவ்வொரு முறையும் ஒரு புதிரை முன்வைக்கிறார். அந்தப் புதிருக்கான விடையை அடையும்போது, வேறு ஒரு புதிர்
 
சாதாரண த்ரில்லர்தான். ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி VS குற்றக்கும்பல் தலைவன் என்று மிகச் சாதாரணமாகத்தான் துவங்குகிறது படம். ஆனால், சற்று அவசரப்படாமல் கவனித்தால் பல ஆச்சரியங்களை ரசிகர்களுக்கு பரிசளிக்கிறது இந்தப் படம். கடைசிக் காட்சி வரைக்கும் இந்த ஆச்சரியத்தைத் தக்கவைத்திருக்கிறார்கள்.
 
படத்தின் துவக்கத்தில் விக்ரம், ஓடாமல் இருக்கும் ஒரு பழைய புல்லட் வாகனத்தை சரி செய்ய ஆரம்பிக்கிறார். படம் நெடுக உதிரி பாகங்களுக்காக அலைகிறார். ஒவ்வொரு பாகமாகக் கிடைக்கிறது. புல்லட் முழுவதுமாக தயாராகும்போது, படம் உச்சகட்டத்தை எட்டுகிறது. இது போன்ற ரசிக்கத்தக்க காட்சிகள் படம் நெடுக இருக்கின்றன.
 
எப்போதுமே நீதியின் பக்கம் நிற்கும் விக்ரமே கதையின் நாயகனைப்போலத் தோன்றினாலும், படம் நகர நகர படத்தை முழுவதுமாக ஆக்கிரமிக்கிறது வேதாவின் பாத்திரம். அந்தப் பாத்திரத்திற்கு கச்சிதமாகப் பொருந்துகிறார் விஜய் சேதுபதி. கையில் ஒரு வடையை வைத்தபடி மிக சாவதானமாக காவல்துறையிடம் சரணடையும் துவக்கக் காட்சியிலேயே படத்தின் கவனத்தை அவர் மீது திருப்பிவிடுகிறார். எங்கேயுமே உறுத்தலில்லாத, மிகை நடிப்பில்லாத விஜய் சேதுபதி ஆக பெரிய பலம் .
 
பெண் பாத்திரங்களாக வரும் ஷ்ரத்தா, வரலட்சுமி ஆகியோரின் பாத்திரங்கள் சவாலானவையல்ல. தேவையான நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். திரைக்கதைக்கு அடுத்தபடியாக இந்தப் படத்தின் மிக முக்கியமான பலங்கள், ஒளிப்பதிவும் பின்னணி இசையும். சற்றே இருண்மை படிந்த இந்தக் கதைக்கு உரிய நியாயத்தைச் செய்கிறது வினோத்தின் ஒளிப்பதிவு. அதேபோல சாமின் பின்னணி இசை, படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்துகிறது.
 
அதுவும் படத்தில் புரோட்டா எப்படி சாப்பிடுவது என்று கிளாஸ் எடுக்கும் வேதா செம்ம , படம் பார்த்தவர்கள் இனிமே புரோட்டா சாப்பிடும் பொது நிச்சயமாக விஜய் சேதுபதியின் நினைவு வரும் . படத்தின் வசனங்கள் பெரிய பலம் .
 
 
வித்தியாசமான கதை  மீது நம்பிக்கை வைத்து  ரசிகர்களை நம்பி எடுத்த புஷ்கர் காயத்திரி தம்பதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 
 
   ஜி எஸ் டி  பிரச்சினையில் தியேட்டர்  நிறைகிறது என்றால் அது விஜய் சேதுபதி மேஜிக்  தான் முழு முதல் காரணமாக இருக்கும் 
 
 

நன்றிகளுடன்,

பாலசுப்ரமணியன்.சி 

காரிமங்கலம் 

தர்மபுரி - 635111

+91 9965818701

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Thursday, March 30, 2017

காரிமங்கலம் வரலாற்றுச்சிறப்பு

சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் பதிவிடுகிறேன்
   காரிமங்கலம் நகரை பற்றி ஏற்கனவே பதிவிட்டிருந்தாலும் இந்தமுறை பூர்விக வரலாற்றை பதிகிறேன்.
   இது என்னோட சொந்த பதிவு இல்லை, இணையத்தில் இருந்து பெற்றது.

காரிமங்கலம் வரலாற்றுச்சிறப்பு:
காரிமங்கலம் எனும்பெயர் தகடூர் ஆண்ட அதியமான் நெடுமான் அஞ்சி காலத்தில் காரி(மலையமான் திருமுடிக்காரி) என்னும் அரசன் படை நிறுத்திய இடம் பிற்காலத்தில் காரிமங்கலம் எனப் பெயர்க் கொள்ளலாயிற்று என்பர். மங்கலம்,பாடி போன்ற சொற்கள் படைநிறுத்திய இடங்களைக் குறிப்பதாகும்.
இவ்வூர் தகடூர் நாட்டின் ஒரு உட்பிரிவு நாடான கோவூர் நாட்டில் அடங்கிய ஒரு பகுதி
இவ்வூர்ப் பழம்பெருமையைச் சொல்லும் கல்வெட்டுகள் இவ்வூரை “கோவூர் நாட்டு காரிமங்கலத்து” எனக் குறிக்கின்றன.
சிந்தல்பாடியில் இருக்கும் நடுகல்லொன்றில் கோவூர் நாட்டு காரிமங்கலங் “கங்கஅதி அரைசரசரோடு தொறுக்கொள்ள” (ஆநிரை கவர்தல்) நடைபெற்ற போரில் வீரனொருவன் இறந்ததைக் குறிக்கிறது. 
இந்த நடுகல் காலம் 6-ம் நூற்றாண்டு, பல்லவ மகேந்திரவர்மர் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக இருந்ததையும் குறிக்கிறது.
அதேபோல கதிரம்பட்டி நடுகல்லும் கோவூர்நாட்டு காரிமங்கலத்து குளவர் மக்கள் வீரர் இருவர் தொறுக் கொள்ளலில் இறந்த செய்தியைக் குறிக்கிறது. இந்நடுகல் இரண்டாம் மகேந்திரன் ஆட்சியாண்டில் எடுக்கப்பட்டதாகும்
தகடூர் அதியமான் காலம் கிபி ஒன்று மற்றும் இரண்டாம் நூற்றாண்டு என்பர். ஆயிரத்தென்னூறு ஆண்டுகளாக “காரிமங்கலம்” எனும் பெயர் மாறாமல் கொண்டுள்ள ஊர் இது என்பது பெருமை கொள்ளத்தக்கது.
குலோத்துங்க சோழனால் காரிமங்கலம் ஒட்டிய சிறு குன்றில் எடுக்கப்பட்ட “ஆரண்யேஸ்வரர் கோவிலும், பிற்காலத்தில் இப்பகுதியை ஆண்ட ஆட்சியாளர் ஒருவராகிய ராமசாமிக் கவுண்டர் என்பவரின் ஜீவசமாதிக் கோவில்,திரௌபதியம்மன் கோவில் மற்றும் சிறு தெய்வக்கோவில்களும் இதன் சிறப்பு.
ஊருக்கு மேற்கே கோட்டைமேடு எனப்படும் இடம் இன்று புளியந்தோப்பாகவும் அங்கிருந்து தென்மேற்காக செல்லும் “தண்டு ஓணி” என சொல்லப்படும் பாதையும் உள்ளது.

ஓணி-மழைக்காலத்தில் நீர்செல்லும் ஓடையாகவும் வெயிற்காலத்தில் வண்டிகள் கால்நடைகள் செல்லும் நிலவழியாகவும் பயன்படுத்தப்படும்


பாலசுப்ரமணியன்.சி 
காரிமங்கலம் வட்டம்& அஞ்சல்  
தர்மபுரி மாவட்டம் 

Sunday, July 27, 2014

என் பார்வையில் சதுரங்க வேட்டை படம்

என் பார்வையில் சதுரங்க வேட்டை படம் ;
                                                                             படத்தை பற்றிய விளம்பரங்கள் ஒரு மணி நேரத்தில் 10 முறையாவது வரும் ஒரு சானலில் , எனவே ஆர்வம் அதிகம் ஆகி தனுஷின் இன் வேலை இலா பட்டதாரி படத்திற்கு முன்பே இதை பார்ப்பது என்று முடிவு செய்துவிட்டேன் , மேலும் படத்தை ரிலீஸ் செய்வது லிங்குசாமி என்பதால் ஒரு எதிர்பார்ப்பு

படத்தை பார்க்கலாம் என்று கோவை KG சினிமாஸ் இல் இரண்டாம் காச்சிக்காக online டிக்கெட் பெற்று சென்று அமர்ந்தேன் ,

சரி படத்திற்கு வருவோம் ,

                                            சிறு வயதில் அனாதை ஆன சிறுவன் வளர்ந்த பின் அதே சமூகத்தில் எப்படி இன்றய மக்களின் பேராசைகளை பணமாக மாற்றுகிறான் என்பது தான் கதை , சமீப ஈமு கோழி மோசடி , rise புல்லிங் பாதி விலையில் தங்கம்,MLM  மோசடி என அனைத்தையும் புட்டு புட்டு வைப்பது சூப்பர் ,

உண்மையில் நடராஜிக்கு இதுதான் முதல் படம் போல் இருக்கிறது , அதுவும் அந்த இரிடியம் ஆன்மிக lecture  அமேசிங் ,

பாம்பு கடத்தும் போது ஒரு தோற்றம், எம்எல்எம் வியாபாரம் செய்யும் போது வேறொரு தோற்றம், நகைக் கடை திட்டம், இரிடியம் ரைஸ் புல்லிங், ஆகியவற்றின் போது மற்றொரு தோற்றம் என அப்படியே அந்தந்த ஏமாற்று வேலைக்குப் பொருத்தமான ஆளாகவே மாறி விடுகிறார். வேறு யாராவது முன்னணி ஹீரோ நடித்திருந்தால் அந்த கதாபாத்திரத்தின் ஜீவனே மாறிப் போயிருக்கும். ஆனால், நட்ராஜ் நடித்திருப்பதைப் பார்க்கும் போது, ஏதோ அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதை போன்றும், கதாபாத்திரம் போன்றே தோன்றுகிறது,

படத்தின் ஆகபெரும் பலம் வசனங்கள் தான் , சான்சேஇல்லை , எந்த பொய்யிலும் கொஞ்சம் உண்மை கலந்து இருக்கனும், உனக்கு மட்டும் புரிந்தால் நான் வேறு யோசிக்கணும் , நாமெல்லம் முதலாளி ஆக முயற்சி செய்யும் கம்யூனிஸ்ட் , நாளைக்கு நம்பிக்கை இல்லாதவன் சேர்த்து வைப்பான் எனக்கு அவசியம் இல்லை ,நான் யாரையும் ஏமாற்றவில்லை அவங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தேன் , உன்னை ஏமாற்றியவனை எதிரியாக நினைக்கதே அவன் உனக்கு குரு போன்றவன் . இது போன்ற வசனங்கள் சாட்டை அடி  வசனங்கள் ,

கிடைத்த கொஞ்சூண்டு இடத்திலும் அழுத்த முத்திரை பதிக்கிறார் இஷாரா. பெரிய விழிகள், பெரிய கன்னம், மருண்ட பார்வை... என்று முகமொழியிலேயே உணர்வுகளைக் கடத்திவிடுகிறார். தமிழ்த் திரைக்கு ஒரு புது ராணி!
'மொழிப் பற்றோடு’ கட்டப்பஞ்சாயத்து செய்யும் 'சுத்தத் தமிழ்’ வில்லன், 'சிவப்பு நாடா’ நீதிமன்ற நிலுவைகள் ஒரு குற்றத்தைப் பிசுபிசுக்கச் செய்யும் உண்மை, அரசாங்க வளத்தை சூறையாடும் அசகாயத் தொழிலதிபர்கள், பாம்புக்காக மௌன விரதம் இருக்கும் பணத்தாசை வியாபாரி, 'பாதி விலையில் தங்கம்’ என்றதும் 'ஜோஜோ’வெனக் கிளம்பிவரும் 'மாட்டு மந்தை’ மக்கள் என... படத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் கதாபாத்திரத்திலும் அத்தனை உண்மை ,
மூளையை மழுங்கடிக்கும் எம்.எல்.எம் பாலீஷ் பேச்சுகள், ஆன்மிக மந்திரங்களின் போலித்தனம், கும்பலாக ஏமாற ஆள் சேர்ப்பது அல்லது கும்பல் இருந்தால் ஏமாறத் தயாராக இருப்பது, மதுரை கிரானைட்ஸ் அதிபரின் ஆட்டம்... எனச் செய்திகளும் சைக்காலஜியுமாகப் படம் நெடுக உண்மையின் அரசியல்
 
நடராஜ் -இஸாரா குடுப்பம் நடத்தும் காட்சிகள் கவிதை, படத்தில் எங்கும் பிரமாண்டம் இல்லை ஆனாலும் சூப்பர். போகிற போக்கில் மதுரை giranite  மோசடிகளை   சொல்லிய உண்மையின் அரசியல்.
 
படத்தின் பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
 
 
 
 
மீண்டும் விரைவில் சந்திக்கும் வரை ,
 
 நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன்.சி 
+91 996581871
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 






















 

Saturday, March 29, 2014

என்னுடைய பார்வையில் குக்கூ படம்

என்னுடைய பார்வையில் குக்கூ  படம்

 ஆனந்த விகடன் புத்தகத்தில் டைரக்டர் ராஜு முருகன் வட்டியும் முதலும் தொடர் என் மனதின் மிக நெருக்கமான தொடர் அது என்னுடைய பள்ளி நாட்களையும் கிராம வாழ்கையும் நினைவு படுத்திய தொடர்  அந்த தொடர் முடியும் பொது ராஜு முருகன் நான் ஒரு படத்தை இயக்க இருப்பதால் இந்த தொடர் முடிவதாக எழுதி இருந்தார் அப்போதே படத்தின் தலைப்பையும் கூறி இருந்தார்

  நான் இந்த படத்தை ஆவலுடன் எதிர் பார்த்தாலும் முதல் வாரம் பார்க்கவில்லை என் அறை  நண்பர் ராஜு அழைத்த காரனத்தால் உடனடியாக  இரவு காட்சி காண கோவை செந்தில் குமரன் சென்றோம் அனால் டிக்கெட் இல்லை பின்னர் பத்து நிமிட தாமதத்தில் கங்கா காம்ப்ளெக்ஸ் அரங்கில் படத்தை பார்த்தோம்  ஆனாலும் முதல் 5 நிமிட படத்தை பார்க்க முடியவில்லை

சரி படத்திற்கு வருவோம் ,


நாயகனும் நாயகியும் மாற்றுத் திறனாளிகள். இருவரும் அதனை வைத்து பிழைக்க நினைக்காமல் உழைத்து பிழைக்கிறார்கள். அவர்கள் சார்உலகில் மகிழ்வுடன் பயணிக்கிறார்கள்.

சில அலைவரிசை புரிதல்களுக்கு பிறகு காதலிக்கிறார்கள். பார்வையற்ற நாயகியின் பணத்தாசை பிடித்த அண்ணனின் கட்டாயத்தினாலும் வாழ்வின் சூழலினாலும் இவர்கள் பிரிக்கப்படுகிறார்கள். இறுதியில் இணைந்தார்களா என்பதே  படம் .
 
நாயகனாக தினேஷ், முதல் படத்தைப் போலவே பர்பார்மன்ஸில் அசத்தியிருக்கிறார். கொஞ்சம் அசந்தாலும் ஓவர் ஆக்டிங் என்று சொல்லிவிடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதே அவர் திறமைக்கு சான்று. கண்டிப்பாக இவர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட வேண்டும்.

நாயகியாக மாளவிகா, நல்ல நடிப்பு, இயல்பான அழகு, தெறிக்கும் எக்ஸ்பிரசன் என பட்டையை கிளப்புகிறார். நமக்கு பேரழகிகளை விட பக்கத்து வீட்டு பொண்ணு தோற்றம் தான் பிடிக்கும். அதனாலேயே இவர் இன்னும் கவனிக்கப்படுவார்.
 
படத்தில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தனிப்பட்ட முறையில் ஒரு பங்களிப்பை வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த எம்ஜியார் நடிகர், குபேரன் சந்திரபாபு, இளையராஜா காதல் சோக பாடல்களுக்கு பணம் தந்து ரசிக்கும் நபர், பிஎம், ரயிலில் யாரையும் திரும்பிக்கூட பார்க்காமல் பயணம் செய்யும் நபர் என ஒவ்வொருவரும் கவனம் ஈர்க்கின்றனர்.

பேஸ்புக் ஸ்டேட்டஸ்க்காக போலி பொதுச்சேவை செய்யும் நபர்களை ஒரு காட்சியில் நிற்க வைத்து சாட்டையால் அடிக்கிறார் இயக்குனர். அந்த ஒரு காட்சி என்னை மிகவும் ரசிக்க வைத்தது.

போகிற போக்கில் நம் நடிகர்களையும் இன்றய அரசியல்  அழகா விமர்சிப்பது மிக அழகு 
 
  படத்தில் கண் பார்வை இல்லாத தினேஷ் இடம் நண்பர்கள் 2 லச்ச ரூபாய் தந்து அனுப்புவது நம்பும் படி இல்லை , மேலும் தேர்தல் காலங்களில் சோதனை என்ற பெயரில் மக்களை  வஞ்சிக்கும் போலீஸ் அதிகாரிகளை ராஜு முருகன்  தோலுரித்து காட்டி இருக்கிறார் 
 

சந்தோஷ் நாராயணின் மனதை வருடும் பாடல்கள், இசை, (பின்னணி இசை விட்டுவிட்டு ஒலிப்பதின் பின்னணி என்னவோ.?), பி.கே.வர்மாவின் கண்களை கவரும் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் பெரிய பிளஸ் பாயிண்ட்டுகள்.

அண்ணனை விட தம்பிக்கு தான் பவர்..., இருட்டில் கிடைத்த சுதந்திரம்..., தமிழுக்கும், தமிழர்களுக்கும் தொடர்ந்து கிடைத்து வரும் அவமரியாதைகள், உள்ளிட்ட லோக்கல்-இன்டர்நேஷனல் பாலிட்டிக்ஸ்களை நக்கல் அடிப்பது, என படத்தில் பாத்திரங்கள் பேசும் வசனங்கள் இயக்குநர் ராஜூ முருகனுக்கு ஒரு ஷொட்டு
 
 பாடல்கள் தேன் என கூறினால் அது ஒன்றும் மிகை இல்லை , ஆனாலும் கிளைமாக்ஸ் நீளத்தை சற்று குறைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக  இருந்திருக்கும் , தரமான படம் வழக்கமான கிளைமாக்ஸ் ,
 
 
 
 
இது  தாமதமான விமர்சனம் , அடுத்த முறை மிக விரைவில் சந்திக்கும் வரை 
 
நன்றிகளுடன் ,
பாலசுப்ரமணியன்.சி 
கோயம்புத்தூர் .
9965818701.
 















 

Friday, March 28, 2014

குக்கூ. படத்தை பற்றி

குக்கூ. படத்தை பற்றி ,

                             இந்த படத்தை ரிலீஸ் ஆன உடனே பார்த்து விட வேண்டும் என எண்ணி இருந்தேன் ஆனாலும் வேலை பளு காரணமாக படத்தை பார்க்க முடியவில்லை , நான் ராஜு முருகனின் வட்டியும் முதலும் தொடரின் மிக பெரிய அடிமை , ஆனந்த விகடனில் அது தொடராக வெளி வந்த போது ஒரு வாரம் கூட  விடாமல் படித்தவன்  அதனால் தான் அந்த அளவுக்கு ஆர்வம்

தாமதம் என்றாலும் இன்று இரவுக்குள் படத்தின் விமர்சனத்தை இங்கு பதிவிடுகிறேன்


நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன் .சி
கோயம்புத்தூர்
+91 9965818701.

Wednesday, March 12, 2014

நிமிர்ந்து நில் சினிமா விமர்சனம் - என் பார்வையில்

நிமிர்ந்து நில்  சினிமா விமர்சனம் - என்  பார்வையில்,

   மிக நீண்ட நீண்ட இடைவெளிக்கு பிறகு பட விமர்சனம் எழுதுகிறேன் ,சமீபத்தில் முக்கிய படங்கள் எதுவும் வரவில்லை விஜய் சேதுபதி படமும் பெரிய எதிர்பார்ப்பு இல்லாத காரணத்தால் விமர்சனம் எழுதவில்லை ,

சமுதிரகனியின் படம் என்றாலே நிச்சயம் சமூக விழிப்புணர்வு இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும், மேலும் சமீபத்தில் அவர் படம் சாட்டை என்ற படத்தில் இடம் பெற்ற வசங்கள் மிகபெரிய வரவேற்ப்பை பெற்றன. எனவே இந்த் படத்திற்கும் வசனங்கள் மீது பெரிய எதிபார்ப்பு எனக்கு இருந்தது.

ஜெயம் ரவிக்கும் சமீபத்தில் எந்த ஹிட் படமும் இல்லை மேலும் படம் வெள்ளியன்று வெளியாகும் என்று கூறினார்கள், அனால் வரவில்லை சனிகிழமை அன்று வெளியான உடனே பார்க்க வேண்டும் என நினைத்தேன் அனால் முடியவில்லை நண்பர்களுடன் நேற்றுதான் பார்த்தேன்.

நான்  இந்த படத்தை  கோவை  செந்தில் குமரன் அ.ரங்கில் என் அறை தோழர் மற்றும் இன்னும் சில நண்பர்களுடன் அமர்ந்தேன்

சரி கதைக்கு வருவோம்,

நேர்மையாக வாழ நினைக்கும் பொறியியல் பட்டதாரியான ஜெயம் ரவி ஒரு நாள் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொது போக்குவரத்து காவலரால் உண்டாகும் சின்ன பிரச்சனையால் உண்டான கோபம் அது எங்கு போய்  முடிகிறது என்பதுதான் படம்.
நேர்மையாக வாழ வேண்டும் என்று போதிக்கப்பட்டு வளர்ந்த ஒருவனுக்கு வாழ்க்கையின் நிஜம் புரிய மறுக்கிறது. இயல்பான இந்தியா லஞ்சத்தில் மட்டுமே இயங்குகிறது என்பதை ஏற்க மறுக்கும் அவன் படும் பாடும் அதற்கு அவன் கண்டறியும் தீர்வுமே நிமிர்ந்து நில்.

ஜெயம் ரவியால் பதிக்கப்பட்ட  போலீஸ் மற்றும் ஜட்ஜ் இருவரும் ஜெயம் ரவியை போலீஸ் கொண்டு சாகும் அளவுக்கு அடிக்கிறார்கள்  இதனால் பொங்கி எழும் ஜெயம் ரவி இவர்கள் அனைவரும் பழி வாங்க இல்லாத ஒரு ஆள் பெயரில் பாஸ்போர்ட் driving licence , voter id மற்றும் death certificate போன்ற அனைத்தும் பெறுகிறார் இதன் மூலம் மொத்தம் 147 பேர் மாட்டுகிறார்கள் இவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்துகிறார்  ஜெயம் ரவி

இடைவேளை வரை மாட்டிய  அதிகாரிகள் ஜெயம் ரவியை பழிவாங்க முயற்சி செய்கிறார்கள் , இடைவேளை வரை வேகமாக செல்லும் படம் பின்னர் சற்று தடுமாறுகிறது என்பதே உண்மை.

அமலபாலுக்கு இந்த படத்தை பொறுத்தவரை பெரிய  வேலை இல்லை அவர் பாத்திரம் இல்லாவிட்டாலும் படத்தில் எந்த பாதிப்பும் இருந்திருக்காது.நாயகனின் நண்பனாக சூரி நிறைவாக வந்து காமெடியுடன் குணச்சித்திரத்தையும் கலந்து நிறைவாக செய்து போகிறார். கோபிநாத்தும் படத்தில் இருக்கிறார்.

பாடல்களை பொறுத்தவரை படத்தில் எதற்கு என்றே தெரியவில்லை , சரத்குமார் CBI அதிகாரியாக 10 நிமிடம் வந்து செல்கிறார்,.

இடைவேளைக்கு பின் வரும் ஆந்தர  ஜெய் சிம்ம ரெட்டியாக  இன்னொரு பாத்திரத்திலும் வெளுத்து வாங்கி இருக்கிறார் ஜெயம் ரவி. அவரை  இறுதியில் கொலை செய்வது ஏன் என்று தெரியவில்லை.

ஆனால் படத்தின் பிற்பாதி சலிப்பையும் ஒரு அயற்சியையும் தருகிறது. முதல் பாதியில் ரவிக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் காணாமல் போனதன் ரகசியம் தான் புரியவில்லை.

ரவியின் பேட்டியைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் அவருக்கு ஆதரவாக உயிரையும் கொடுக்க கிளம்புகிறார்கள். ஆனால் படத்தின் ஓட்டத்தில் காணாமலே போகிறார்கள்.

லஞ்சம் வாங்குபவனை விட லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க நினைக்கும் மக்கள் தான் குற்றவாளிகள் என்பதை சொல்ல நினைக்கும் படம் சற்றே தடம் புரண்டுவிட்டது. ஆகச்சிறந்த படமாக வந்திருக்க வேண்டியது அனால் சற்று தடம் புரண்டுவிட்டது 
 
ஆனாலும் படம் பார்க்கும் பொது அந்நியன்  மற்றும் சாமுராய் போன்ற படங்களின் எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை 
 
ஆனாலும் படத்தை ஒருமுறை நிச்சயம் பார்க்கலாம்