Pages

Wednesday, December 25, 2013

பிரியாணி சினிமா விமர்சனம்

பிரியாணி சினிமா விமர்சனம் :




நேற்று இரவு  கோவையில் நான் எவளவோ சொல்லியும் கேட்காமல் என் அறை தோழர் ராஜீவ் மற்றும் நண்பர் குணா மற்றும் சிலருடன் படம் பார்க்க கங்கா காம்ப்ளெக்ஸ் இல்  இரண்டாம் காட்சிக்கு சென்றோம்

ஒரே வரியில் சொல்வது என்றால் vegitable பிரியாணியை சிக்கன் பிரியாணி என்று சொல்லி ஏமாற்றி விட்டார்  வெங்கட் பிரபு , நாங்கள் எதிர் பார்த்தது என்னவோ அட்லீஸ்ட் குஸ்கா .

இந்த படம் யுவனின்  100 ஆவது படம் என்றால் யுவனே நம்பமாட்டார்

  • நடிகர் : கார்த்தி
  • நடிகை : ஹன்சிகா மோத்வானி
  • இயக்குனர் :வெங்கட்பிரபு
  •  இசை  : யுவன் சங்கர் ராஜா 
  •  தயாரிப்பு : ganavel ராஜா .


  • கதைப்படி சுகன் - கார்த்தியும், பரசுராம் - பிரேம்ஜி அமரனும் நான்காம் வகுப்பு படிக்கும் காலந்தொட்டு நண்பர்கள். வகுப்பில் முதல் மாணவனாக தேறும் பிரேம்ஜி, கார்த்தியின் சகவாசத்திற்கு பின் தான் சகல துன்பங்களையும் அனுபவிக்க ஆரம்பித்ததாக கதை சொல்ல ஆரம்பிக்கிறார். அதுவும் எப்படி? முடியாத பாலத்தில் படுவேகமாக ஒரு காரில், பின்னால் போலீஸ் வாகனங்கள் துரத்த பறந்து வந்து கீழே விழும் நிலையில் பிரேம்ஜி கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.

    , பிரேம்ஜி பார்த்து ஜொள் விடும் பெண்களை எல்லாம் இராத்திரி எந்நேரம் ஆனாலும் ஒரு பிளேட் பிரியாணி திண்ணாது, உறங்கபோகாத கார்த்தி உஷார் பண்ணி ஓரங்கட்டுவது ஒருபக்கம் என்றால், கதாநாயகி ஹன்சிகாவையும் சின்ஸியராக மற்றொருபக்கம் லவ்வுகிறார் கார்த்தி! நட்புக்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கார்த்தியை சகித்து கொள்ளும் பிரேம்ஜியும், கார்த்தியும் ஒருநாள் தங்களது பிரியாணி மற்றும் பெண் சபல புத்தியால் பிரபல கிரானைட் தொழில் அதிபர் நாசர் கொலையில் வகையாக சிக்குகின்றனர். அப்புறம்? அப்புறமென்ன, தங்களது புத்தி சாதுர்யத்தால் தங்களை வலை வீசித்தேடும் போலீஸ்க்கும், நாசரின், ராம்கி உள்ளிட்ட உறவுகளுக்கும் தண்ணிகாட்டி உண்மை குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கார்த்தி, பிரேம்ஜி இருவரும் தப்பித்து, ஹன்சிகா கழுத்தில் தாலி கட்டு(ஹீ, ஹீ... கார்த்தி மட்டும்தான்...)வது தான் "பிரியாணி படத்தின் மொத்தகதையும்!

    சுகனாக, கார்த்தி ஒருசில இடங்களில் அண்ணன் சூர்யா சாயலில் தெரிவது மட்டுமின்றி, "சிங்கம் சூர்யா மாதிரி ஆக்ஷ்ன் காட்சிகளிலும் அடித்து தூள் பரத்தியிருக்கிறார். ஹன்சிகாவுடனான காதலில் அவ்வளவு ஒட்டுதல் இல்லை! காரணம் படம் முழுக்க பீஸ்களாக (கார்த்தி - பிரேம்ஜி பாணியில்) பவனி வரும் பெண்களா? என்பது கார்த்திக்கே வெளிச்சம்

    பிரேம்ஜி அமரன் படம் முழுக்க காமெடி என்ற பெயரில் "வாவ் என வாயை பிளந்தபடி கலாய்க்கிறார். நல்லவேளை கடிக்கவில்லை! அதேநேரம் நான் உன் கேர்ள்ப்ரண்ட் அல்ல, ப்ரண்ட் என்று "பன்ச் டயலாக் பேசுவதெல்லாம் ரொம்ப ஓவர்!

    பிரியாணி படத்தின் மொத்தத்திற்கு பெரிய "லெக்பீஸ் மாயவாக வரும் மாண்டி தக்கார் தான். வாவ்! அம்மணி ஆடி அசத்தும் அந்த ஒற்றை பாடல் போதும் மொத்த படத்திற்கும்! ஆனாலும் அநியாமாய் அவரை, உமா ரியாஸ் ரயிலில் தள்ளி விடுவது கொடுமை!

    வில்லன் மாதிரி பூச்சாண்டி காட்டி நல்லவராகி விடும் ராம்கி, நாசர், சம்பத், உமா ரியாஸ், ஜெய்பிரகாஷ், சாட் ஆண்டர்சன் தொடங்கி கெஸ்ட் ரோலில் வரும் ஜெய், விஜய் வஸந்த், விஜயலட்சுமி எல்லோரும் "லெக்பீஸ் பிரியாணியில் எக்ஸ்ட்ராவாக கிடைக்கும்  எனும் வகையில் ஆறுதல்!

    இந்த படத்தில் ஹன்சிகா சும்மா அப்ப அப்ப வந்து ஆடிவிட்டு போகிறார் அவருக்கு tv இல் வேலை,

    commercial சினிமாவில் லாஜிக் கிடையாதுதான் அதற்காக கொலை பலி விழுந்த கார்த்திக்கும் பிரேம்ஜியும் சாதாரணமாக வெளியில் சுற்றுவதை  எப்படி சரி என்பது ?

    யப்பா வெங்கட் பிரபு முதலில் பிரேம் ஜி  ஐ க்ளோஸ் up  காட்டுவதை நிறுத்து எங்களால் முடியலை

    கடைசியில் தூக்கம் கெட்டு நண்பர்கள்  ராஜீவ், குணா மற்றும் நந்தகுமார் பாலாஜி, சுதன்  ஆகியோரை திட்டிக்கொண்டே என் அறை வந்து சேர்ந்தேன்.

    sorry வெங்கட் பிரபு பெட்டர் லக் நெக்ஸ்ட்  டைம்



    உங்கள் கமெண்ட்ஸ்  களை  எதிர்நோக்கும்

    பாலசுப்ரமணியன் .சி 

    கோவை .






























     

    No comments: