Pages

Monday, November 4, 2013

பாண்டியநாடு சினிமா விமர்சனம்

பாண்டியநாடு சினிமா விமர்சனம்


ரவுடிகள் சூழ்ந்த ஊரில் பயமின்றி நண்பர்களுடன் பொழுதை கழித்து நாயகியுடன் காதல் செய்து குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்றதும் ஆக்சன் அவதாரம் எடுக்கும் தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் கதை தான். ஆனால் திரைக்கதையில் பழைய படங்களின் சாயல் செய்ததில் வித்தியாசப்பட்டு நிற்கிறார்கள்.

படத்தின் ஆகச்சிறந்த பலம் பாரதிராஜா தான். என்னா நடிப்பு, மனிதர் பிச்சு உதறியிருக்கிறார். இது போன்ற பாத்திரங்களில் இனி கவனம் செலுத்தினால் இயக்கத்தைப் போல் நடிப்பிலும் உச்சத்தை அடையலாம். மகன் இறந்ததும் தப்பாக கொடுக்கப்பட்ட இறப்பு சான்றிதழில் கையெழுத்து போட மறுத்து பொங்கி அழும் காட்சியிலும் மகனை கொன்றவர்களை கூலிப்படை வைத்தாவது கொல்ல வேண்டும் என்று செயலில் இறங்கும் போதும் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

ரவுடிகளால் ஆளப்படும் மதுரையில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம். குடும்பத் தலைவர் பாரதிராஜா. இளைய மகன் விஷால் ஒரு செல்போன் கடை வைத்துக் கொண்டு, காமெடிரவுடி அடித்தால் கூட அடியை வாங்கிக் கொண்டு செல்லும் சாதுவான பையன். மூத்த மகன் சுரங்கத் துறையில் அதிகாரி. ஒரு பிரச்சனையில் பெரிய ரவுடியின் கனிம சுரங்கத்தை சீல் வைக்கிறார்.


கொதித்தெழும் ரவுடி விபத்து ஏற்பட்டது போல் அந்த பெரிய பையனை கொன்று விடுகிறார். மகனை கொன்றவர்களை பழி வாங்க கூலிப்படையினரைத் தேடி அலைகிறார் பாரதிராஜா. அப்பாவுக்குத் தெரியாமல் ரவுடியை கொல்ல பின் தொடர்கிறார் விஷால். பல மாதங்கள் காத்திருப்புக்கு பிறகு வில்லனை கொன்று குடும்பத்தையும் ஊரையும் காப்பாற்றுகிறார் விஷால்.

விஷாலுக்கு இந்த நேரத்தில் முக்கியமான படம் இது. கொஞ்சம் கூட ஹீரோயிசம் காட்டாமல் இயல்பான இளைஞனாக வருகிறார். பஞ்ச் டயலாக் கிடையாது. அதிரடி அறிமுகம் கூட கிடையாது. கடைசி நிமிடத்தில் ஆக்சன் அவதாரம் எடுக்கும் போது பின்னி எடுக்கிறார்

லட்சுமி மேனன் அம்சமாக இருக்கிறார். புடவை கட்டும் விதத்திலும் சரி, மேக்கப்பிலும் சரி. அதே போல் அடக்கமாக நடிக்கவும் செய்கிறார். இடைவேளைக்கு பிறகு தான் கதையின் தேவை கருதி காணாமல் போகிறார்.

சூரியின் காமெடிகள் சில இடத்தில் எடுபடுகின்றன. நகைச்சுவைக்கென்று மட்டும் இல்லாமல் கதையின் போக்குக்கு ஏற்ப சீரியஸாகவும் நடித்துப் போகிறார். நட்புக்காக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் விக்ராந்த். நன்றாக செய்திருக்கிறார்.

சிறு வயதில் ஒரு வில்லனை கண்டால் நாமும் கொல்ல வேண்டும் போல் ஒரு எண்ணம் தோன்றும். சற்று மெச்சூர்ட் ஆன பிறகு அப்படி எந்த படத்திலும் தோன்றியதில்லை. ஆனால் இந்த படத்தில் வில்லனை நாமே கொல்ல வேண்டும் தோன்றியதில் நிற்கிறது படத்தின் வெற்றி.

பாடல்கள் நன்றாக இருக்கின்றன எடுக்கப்பட்ட விதத்திலும் கூட. படத்தில் ஆரம்பத்திலிருந்து சண்டை பிரச்சனை என்று காட்டாமல் சண்டை நடக்கப்போகிறது என்ற பெப்பை கிரியேட் பண்ணி க்ளைமாக்ஸ் வரை கொண்டு சென்றிருப்பது நன்றாக இருக்கிறது.

நன்றி
பாலா...

No comments: