Pages

Tuesday, November 26, 2013

ஒரு இனிய பயண அனுபவம்

நண்பர்களுக்கு இனிய வணக்கம் ,

இந்த நாள் இனிய நாள்.

ஒரு நாள் நாங்கள் பார்த்த ஒரு உடல் ஊனமுற்ற மனிதனை பற்றியும் அந்த மனிதனை அணுகிய மனித மிருகங்களை பற்றிய பதிவு இது ,

சென்ற வாரத்தில் ஒரு நாள் எங்கள் பணி விசயமாக கோயம்பத்தூர்   நகரத்தில் இருந்து பொள்ளாச்சிக்கு நானும் என் அறை நண்பர் ராஜீவும் பொள்ளாச்சிக்கு  இரண்டு\
சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தோம் அப்போது கிணத்துகடவு  தாண்டி சென்று கொண்டிருக்கும் பொது நண்பர் ராஜீவ் ஒரு காபி அருந்திவிட்டு நம்
பயணத்தை தொடரலாம் என்று கூறியதால் சாலை ஓரத்தில் பிரபலமான காபி கடைக்கு சென்றோம் காலை நேரம் என்பதால் கடையில் கூட்டம் எதுவும் இன்றி காலியாக
தான் இருந்தது அந்த கடையில் காபி தவிர  வேறு எதுவும் கிடையாது என்பதால் நானும்
நண்பருடன் வேண்டா  வெறுப்பாக கடையில் சென்று அமாந்தோம் நண்பர் காபி ஆர்டர் செய்தார் , பின்னர் இருவரும் பேசிக்கொண்டே காபி  அருந்த தொடங்கினோம் , நான் கடையில் சாலையை பார்க்கும் வண்ணம் அமர்ந்து இருந்தேன் .

அந்த நேரத்தில் அந்த நெடுஞ்சாலையில் ஒரு பிச்சைக்கார உருவம் கொண்ட மனிதர் சாலையை கஷ்டப்பட்டு கடந்து நாங்கள் அமர்ந்து இருந்த கடையை நோக்கி வந்தார், அவரின் இரண்டு கால்களும் வளைந்து மிகவும் பரிதாபமாக இருந்தார் அவரின் இரண்டு கா ல்களும் போலியோ  ஏதோ ஒரு வினோதமான எலும்பு நோய் என்று பார்த்த நேரத்தில் உணர முடிந்தது , அவர் கையில் ஒரு அலுமினிய பாத்திரமும் இருந்தது,

நாங்கள் இருவரும் பார்த்து பரிதாப பட்டு பேசிகொண்டோம் , அப்போது நண்பர் ராஜீவ் இவர் ஒரு பிச்சைகாரர் என்று கருதி அவருக்கு ஒரு பத்து ரூபாய் கொடுக்க கையில் எடுத்து  வைத்து இருந்தார் , அவர் எங்கள் அருகில் வந்து பேச தொடங்கினர் அபோது அவர் நான் நேற்று இரவு மதியம் சாப்பிட்டேன் பிறகு சாப்பிடவே இல்லை என்று கூறி தனக்கு பசிபதாகவும்  அதற்கு காபி வாங்கி போக வந்ததாக கூறி ஒரு காபி ஆர்டர்  செய்தார்.

அந்த மனிதரை
மனிதரை பரிகாசமாக பார்த்த அந்த கடையில் வேலை செய்யும் பெண்  இந்த மனிதரை பார்த்து பிச்சைகாரனுக்கு  எடுப்பது பிச்சை  இதில் காபி வேறயா என்று கூறி ஒரு கப்பில் கொண்டு வந்து ஊற்றினாள் , அந்த மனிதர் தனக்கு இன்னும் ஒரு காபி வேண்டும் என கூறவே அவள் மீண்டும் வேண்டா  வெறுப்பாக மீண்டும் கொண்டு வந்து ஊற்றினாள்  அளவு குறைவாக.

அந்த மனிதரின் முகத்தில் சிறிது கூட  புன்னகை மறையவில்லை மாறாக அந்த மனிதர் யோசிக்காமல் இரண்டு காபிக்கு  உண்டான தொகை ரூபாய் 30 கொடுதுவித்து நடக்க தொடங்கினார் , அபோது மனதில் நினைத்து கொண்டேன் மனிதனின் உருவத்தை பார்த்து கேலியாக நினைக்க கூடாது என்று. அந்த மனிதர் ஊனமாக இருந்தாலும் மனது ஊனம் இல்லை மேலும் அவர் தோற்ற்றம் அப்படித்தானே தவிர உள்ளம் வெள்ளை, அந்த கடையில் வேலை வேலை செய்த பெண்ணுக்கு அவர அருவருப்பாக தெரிந்தாலும், அவரின் பணம் அப்படி தெரியவில்லை

அந்த மனிதர் அந்த பெண்ணை செருப்பால் அடிக்காத  குறையை தன் நடத்தையால் செய்து விட்டு சென்று விட்டார்.

இறுதியாக அவர் கூறியது தான் பிச்சை எடுபதில்லை என்று  கூறியதோடு தன்னால் முடிந்த வேலை செய்து வாழ்வாத கூறினார்

நல்லவேளை நாங்களும் அவருக்கு 10 ரூபாய் கொடுத்து அவரை இழிவு செய்யவில்லை நண்பர் ராஜீவ் அந்த பணத்தை பாக்கெட்டில் போட்டுகொண்டு பொள்ளாச்சியை நோக்கி பயணமானோம் அந்த மனிதரின் நினைவுகளோடு .


அதனால் கூற விளைவது யாதெனில் உடல் தான் ஊனமே தவிர அவர்களுக்கு மனதில் இல்லை, அனால்  நம்மில் பலர் உடல் தான் நலமே தவிர மணம்  ஊனம்தான்.

நாம் சந்தித்த மிக அற்புத மனிதரில் அவரும்  ஒருவர்,


இந்த பதிவை எழுத ஊக்கபடுத்திய நண்பர் ராஜீவுக்கும்  நன்றிகளுடன் 

பாலசுப்ரமணியன்.சி 
கோயம்புத்தூர்.




























 

Tuesday, November 19, 2013

கவிதைகள்;


 
 
 
 
 
 
 
ன் மேல் விழுந்த
மழைத்துளி
என்னை கூப்பிட்டு
கர்வத்தில்
காதில் சொன்னது
மெல்ல...

கடுப்பாயிட்டேன்..!!

நீ தொடாத
இடங்களைக் கூட
நான்
தொட்டுவிட்டேனேன்று
...
 
 
 
நீ பேசும் வார்த்தை
உலகுக்கே புரியும் ...!!
நீ பேசாத வார்த்தை
உன்னை நேசிக்கும் எனக்கு
மட்டுமே புரியும்...!!
 
 

Sunday, November 17, 2013

பீட்சா 2 வில்லா விமர்சனம்

பீட்சா 2 வில்லா  விமர்சனம்:

நடிகர்கள்

அசோக் செல்வன்
சஞ்சிதா ஷெட்டி
இயக்கம் :தீபன் சக்கரவர்த்தி
இசை :சந்தோஷ் நாராயணன்
ஒளிபதிவு :தீபக் குமார்

சமீப திரைப்படங்களில்  இது திகில் படம் என்றாலும்  ரத்தம் மற்றும் வன்முறை இல்லாத படம் கொடுத்த வகையில் நிச்சயம்  பாராட்ட வேண்டும்

ஹீரோ ஒரு க்ரைம் நாவல் எழுத்தாளர். அவரோட அப்பா ஒரு ஓவியர். சில பெயிண்ட்டிங்க்ஸ் எல்லாம் வரைஞ்சு ஒரு வீட்டுல வெச்சிருக்கார். அந்த ஓவியங்கள்ல எதிர் காலத்தில் நடக்கப்போகும் சம்பவங்களை விவரிப்பது போல் சில கலெக்ஷன்ஸ் இருக்கு. ஹீரோவோட அம்மா விபத்தில் இறப்பது போல் ஒரு ஓவியம். அந்த ஓவியம் வரைஞ்ச அடுத்த வருசம் அம்மா டெட். ஹீரோ நாவல் எழுதுனதுக்காக அவார்டு வாங்குவது போல் ஒரு ஓவியம் அதே போல் ஹீரோ அவார்டு வாங்கறார்.

இந்த மாதிரி சில சம்பவங்கள் ஓவியங்கள்ல இருப்பது போலவே ஹீரோ வாழ்க்கைல நடக்குது. ஹீரோவோட அப்பா பிஸ்னெஸ்ல லாஸ் ஆகி கோமா ஸ்டேஜ்ல படுத்து செத்துடறாரு. ஹீரோவுக்கு தற்செயலாக வில்லா அப்டிங்கற வீட்டைப்பத்தி தகவல் கிடைக்குது. அது அவரோட அப்பா வாங்குன வீடுதான், ஆனா ஏதோ சில காரணங்களுக்காக அந்த வீட்டைப்பற்றின தகவல்களை மறைச்சுட்டாரு . அந்த வீட்டில் இதுக்கு முன்னால வாழ்ந்தவங்கள்ல ஒரு ஆள் ஒரு குழந்தையை நர பலி கொடுத்திருக்காரு. அதனால கூட இருக்கலாம்னு ஹீரோ நினைக்கறாரு.

ஹீரோவோட அப்பா வரைஞ்ச ஓவியக்கலெக்ஷன்ல ஹீரோ சாவது போலவும், ஹீரோவோட லவ்வரை ஹீரோவே கொலை செய்வது போலவும் இருக்கு. ஹீரோ அதைத்தடுக்க எடுக்கும் நடவடிக்கைகள் வெற்றியா? தோல்வியா? என்பது க்ளைமாக்ஸ்.

விஜய் சேதுபதி ஹீரோவா நடிச்ச பீட்சா செம ஹிட் ஆனதால், அதே ஃபார்முலாவில் பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டில் எடுக்கப்பட்ட தமிழ் சினிமாவுக்கு மாறுதலான த்ரில்லர் கதை கொண்ட படம். ஹீரோவா அசோக் செல்வன். கச்சிதமான நடிப்பு. அவர் ஏன் படம் முழுக்க இறுக்கமான முகத்துடன் வர்றார்னு தெரியலை. அப்பப்ப ஜாலியா இருப்பது மாதிரி காட்டி இருக்கலாம்.

ஹீரோயின் சஞ்சிதா ஷெட்டி. ஹீரோவை விட அதிக ஸ்கோப் உள்ள கேரக்டர் . இன்னும் நல்லா பண்ணி இருக்கலாம். நாசர் ஹீரோவுக்கு அப்பா கேரக்டர். ஆனா அதிக வாய்ப்பில்லை. பின்னணி இசை பிரமாதம்

படத்தின் பின்னணி இசையில் கலக்கியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஒவ்வொரு காட்சிகளிலும் ரசிகர்களுக்கு திக் திக் என வரவழைக்க காரணம் சந்தோஷ் நாராயணன் இசையும் தீபக் குமாரின் ஒளிப்பதிவும்தான்.

பீட்சா பாணியில் திகிலாக ஒரு கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் தீபன்.

மொத்தத்தில் 'பீட்சா 2 வில்லா' திகிலூட்டும் தீனி.

மொத்தத்தில் இந்த படம் A  சென்டர்களுக்கான  படம் Bமற்றும் C   சென்டர்களிலும்  படம் ஓடும் என்றாலும் பெரிய வசூல் எதிர் பார்க்ககூடாது  என்பதுதான் உண்மை .



இது என்னுடைய பார்வையில் மட்டுமே எனவே உங்களின் விமர்சனங்களை ஆவலுடன் எதிர்பார்கிறேன்

என்றும் நேசமுடன் ,
பாலசுப்ரமணியன்.சி
கோயம்புத்தூர் .

                                    இந்த நாள் இனிய நாள் .




















 

Saturday, November 16, 2013

தெண்டுல்கர் வேடத்தில் நடிக்க ஆசை: அமீர்கான்

தெண்டுல்கர் வேடத்தில் நடிக்க ஆசை: அமீர்கான்

உலகமே ஆவலுடன்  எதிர்நோக்கிய  சச்சின்  கிரிக்கெட் வாழ்க்கை மும்பை வாங்கடே மைதானத்தில்  மிக பிரமாண்டமாக நிறைவு பெற்றது  அப்போது மும்பை மைதானத்தில் அமிர்கான் மற்றும் ராகுல்காந்தி மற்றும் பல்வேறு பிரபலங்கள் போட்டியை ரசித்தனர் அப்போது அமிர்கான்  நிருபர்களிடம் பேசிய அமீர் இந்த செய்தியை கூறினார்

சச்சின் தெண்டுல்கர் வாழ்க்கை வரலாற்றை படமாக்க முயற்சிகள் நடக்கின்றன. இதற்கான அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.சச்சின் வேடத்தில் நடிக்க நடிகர் தேர்வு நடப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சச்சின் தெண்டுல்கராக நடிக்க அமீர்கான் விருப்பம் தெரிவித்துள்ளார்.அமீர்கான் ஏற்கனவே கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘லகான்’ இந்தி படத்தில் நடித்துள்ளார். எனவே சச்சின் தெண்டுல்கர் வேடத்துக்கு அவர் பொருத்தமாக இருப்பார் என்கின்றனர்.

இதுகுறித்து அமீர்கான் கூறும்போது, நான் சச்சின் தெண்டுல்கரின் தீவிர ரசிகன். சச்சின் தெண்டுல்கர் வேடத்தில் நடிக்க வாய்ப்பு கிட்டினால் நிச்சயம் நடிப்பேன். கதை பிடித்தால் ஏன் மறுக்க வேண்டும். நான் நடிப்பேன் என்று கூறினார்.

மேலும் சச்சின் டெண்டுல்கருக்கு அவரின் இந்த மிக பெரிய சாதனையை பாராட்டி அவருக்கு இந்தியாவின் மிக பெரிய விருதான பாரத  ரத்னா  விருது வழங்கி சிற்பிக்க வேண்டும் என பல்வேறு மட்டங்களில் கோரிக்கை எழுந்துள்ளது .


pizzaa  2 விமர்சனத்துடன் உங்களை மீண்டும் சந்திப்போம்

வணக்கம் அன்பர்களே
இந்த நாள் இனிய நாள்

என்றும்  பிரியமுடன் ,
பாலசுப்ரமணியன் .சி
9965818701
 

Tuesday, November 12, 2013

Sachin Tendulkar some Intresting Data;

Sachin Tendulkar some Intresting Data;


Most Matches in Odi :463
Most Matches in Test :198
Most runs in Test :15837 runs
Most runs in ODI :18426 runs
Most Fours in odi :2016 fours
Most Fours in test :2044 Fours
Most 150+ scores in odi :5
Most 150+ scores in test :20
Most hundreds by a batsman in Test:51 hundreds
Most Hundreds by a batsman in ODI :49 hundreds
Most Ninties in Odi :18
Most Ninties in Test :10
Most fifties by a batsman in Test :67
Most fifties by a batsman in ODI :96
Most Man of Match in odi :62
Most Man of series in odi :15
Most Balls Faced in odi :21367
Most ODI runs in a calendar year :1,894 ODI runs in 1998.
Most centuries in a calendar year :9 ODI centuries in 1998.
Most runs scored by a batsman in ODI tournament finals:
Tendulkar 1851,
Most centuries hit by a batsman in ODI tournament Finals:
Tendulkar (6 ton)
Most Runs in world cup :2278
Most Runs in single world cup :673 Runs in 2003 world cup
Most Hundreds in world cup :6
Most fifties in world cup :15
Most successful batsman in wins :(11157 runs in 234 matches)
Most successful batsman in chases :(5490 runs in 127 matches)
Yes it is one and only SACHIN TENDULKAR.

9 famous quotes on Sachin Tendulkar . . .!!!
 i want my son to became Sachin Tendulkar - brian lara
 We did not lose to a team called India, we lost to a man called Sachin
- mark taylor
 nothin bad can happen to us if we were on a plane in India with Sachin on it.
- hashim amla
 he can play that leg glance with a walking stick also,
- waqar younis
 there are 2 kind of batsman in the world,
1 Sachin tendulkar
2 all the others.
-andy flower
i have seen god. He bats at no.4 for India in tests.
- matthew hayden
 i see myself when i see Sachin batting.
-don bradman🎳
do your crime when Sachin is batting, bcos even god is busy watcing his batting.
- Australian fan🏉
best one from
Barack Obama- i don't know about cricket but still i watch cricket to see Sachin play. . Not bcoz i love his play its bcoz I want to know the reason why my country production goes down by 5 percent when he's batting. . . 
True Sachinists SHARE this. . . .
Tendulkar's 1'st match,
18 - 11 -1989
and.....
Last match,
18 - 11 - 2013....
That's all.


Regards,
Balasubramanian.C

Monday, November 11, 2013

மும்பை கான்திவிலி மைதானத்திற்கு சச்சின் பெயர்: கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

மும்பை கான்திவிலி மைதானத்திற்கு சச்சின் பெயர்: கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு


கிரிக்கெட்டில் பல்வேறு உலக சாதனைகள் படைத்த சச்சின் தனது 200-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியின் முடிவில், சச்சினுக்கு பிரமாண்ட பிரிவுபசார விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் சச்சன் டெண்டுல்கரை கவுரவப்படுத்தி சிறப்பிக்கும் வகையில் மும்பையில் இன்று பாராட்டு விழா நடத்தப்பட்டது. மும்பை கிரிக்கெட் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த விழா, ஆடல்-பாடல் மற்றும் கலைநிகழ்ச்சிகளுடன் விமரிசையாக நடைபெற்றது.

விழாவில் மும்பை கிரிக்கெட் சங்க தலைவர் சரத் பவார், மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் திரையுலக பிரபலங்கள், இந்திய-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். சச்சின் தனது மனைவி அஞ்சலியுடன் பங்கேற்றார்.

அப்போது, சச்சினின் கிரிக்கெட் சாதனைகளை கவுரவிக்கும் வகையில், மும்பையில் உள்ள கான்திவிலி மைதானத்துக்கு அவரது பெயர் சூட்டப்படும் என்று மும்பை கிரிக்கெட் சங்கம் முறைப்படி அறிவித்தது.

சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியில், தங்க நாணயத்தில் டாஸ் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்படும். டெஸ்ட் போட்டி நடைபெறும் 5 நாட்களிலும் சச்சின் படத்துடன் 5 வண்ணத்தில் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Saturday, November 9, 2013

ஆறே படத்தில் ஆடி கார் வாங்கினார் சிவகார்த்திகேயன்:

ஆறே படத்தில் ஆடி கார் வாங்கினார் சிவகார்த்திகேயன்:

சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த சிவகார்த்திகேயன் மெரீனா படத்தின் மூலம் சினிமா நடிகர் ஆனார். அதன் பிறகு 3 படத்தில் சிறிய காமெடி கேரக்டரில் நடித்தார். மனம் கொத்தி பறவை, கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என இவர் படங்கள் அனைத்தும் ஹிட் அடிக்க மெரீனாவில் 2 லட்சம் சம்பளம் வாங்கியவர் இப்போது 5 கோடி சம்பளம் வாங்குகிறார். தனது உயரத்தின் அடையாளமாக இப்போது 6 படங்களில் மட்டுமே நடித்துள்ள சிவகார்த்திகேயன் ஆடி கார் வாங்கி உள்ளார். அதில் உட்கார்ந்து போஸ் கொடுத்து அந்தப் படத்தை தனது பேஸ்புக்கிலும் வெளியிட்டுள்ளார்.

சினிமாவின் சிகரங்களை தொட்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போதும் தனது பழைய அம்பாசிடர் காரைத்தான் பயன்படுத்துகிறார். 6 படங்களில் நடித்த சிவா ஆடி காரில் பவனி வரப்போகிறார். சினிமா காட்டும் மாயாஜாலங்களில் இதுவும் ஒன்று

நன்றி
தினமலர்


அன்புடன்
பாலா ...
 

Friday, November 8, 2013

அஜீத்தின் ‘ஆரம்பம்’ 6 நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்து சாதனை

அஜீத்தின் ‘ஆரம்பம்’ 6 நாட்களில் ரூ.50 கோடி வசூல் செய்து சாதனை



தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட ஓப்பனிங் கொண்ட ஹீரோக்களில் நடிகர் அஜீத்தும் ஒருவர். அவரது படம் வெளியாகும் போதெல்லாம் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்.

அந்த வகையில் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு தீபாவளிக்கு 2-நாட்கள் முன்னதாக அஜீத்தின் ‘ஆரம்பம்’ படம் திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தை பார்க்க தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது.

‘பில்லா’ வெற்றிக்குப் பிறகு விஷ்ணுவர்தன்–அஜீத் கூட்டணியில் உருவான படம் என்பதால், இதுவரை இல்லாத அளவிற்கு ‘ஆரம்பம்’ படத்திற்கு டிக்கெட் விற்பனையும் படுஜோராக நடந்தது. முதல் நாள் விற்பனையிலேயே ஒரு வாரத்திற்குண்டான டிக்கெட்டுகள் எல்லாம் விற்றுத் தீர்ந்தன.

பல்வேறு எதிர்பார்ப்புகளிடையே வெளியான ‘ஆரம்பம்’ படத்தின் வசூலும் இப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களுககு திருப்தியாக அமைந்தது. தீபாவளிக்கு வெளியாகும் படங்களுக்காக பல தியேட்டர்கள் ஏற்கெனவே புக் செய்யப்பட்டிருந்த நிலையில், அந்த தியேட்டர்களில் மட்டும் ‘ஆரம்பம்’ 2 நாட்களுக்கு வெளியானது.

அதன்பிறகு தீபாவளிக்கு வெளியான ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’, ‘பாண்டிய நாடு’ படங்களின் வசூல் திருப்திகரமாக இல்லாததால், அந்த திரையரங்குகளில் காட்சிகள் குறைக்கப்பட்டு ‘ஆரம்பம்’ படம் திரையிடப்பட்டது.

‘ஆரம்பம்’ படம் வெளியான முதல் நாள் மட்டும் ரூ.10.20 கோடி வரை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ரிலீஸாகி 6 நாட்கள் ஆகிய நிலையில் ரூ.50 கோடியை தாண்டி வசூல் சாதனை செய்துள்ளதாகவும் விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, வெளிநாடுகளிலும் ரிலீசான 3 நாட்களில் சுமார் 1.34 கோடி ரூபாயை வசூல் செய்து யு.கே.பாக்ஸ் ஆபீசில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.

படத்தின் மொத்த பட்ஜெட் 60 கோடி ரூபாய். ஆனால் வெளியாகி 6 நாட்கள் ஆன நிலையிலேயே இந்த தொகையை நெருங்கிவிட்ட ‘ஆரம்பம்’ படத்தின் வசூல் தமிழகத்தின் பல்வேறு ஏரியாக்களிலும் எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதால் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. எனவே, இப்படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர்களும், ‘ஆரம்பம்’ படக்குழுவினரும் மிகுந்த மகிழ்ச்சியுடைந்துள்ளனர்.

Thursday, November 7, 2013

Alaguraja Movie Review:

அழகுராஜா சினிமா விமர்சனம்:

அழகுராஜா கார்த்தி. தான் நடத்தும் லோகல் கேபிள் சேனலை நம்பர் ஒன் சேனல் ஆக்கிய பின்புதான் கல்யாணம் என கண்ட கண்ட நிகழ்ச்சிகளையெல்லாம் தன் சேனலில் ஒலி, ஒளிபரப்பி வேறு ஒரு உலகத்தில் வாழ்ந்து வருபவர் கார்த்தி. அவர் தன் நண்பர் கல்யாணம் என்னும் சந்தானத்தின் காதர்பாய் பிரியாணி ஆசைக்காக, ஒரு கல்யாண ரிசப்ஷனுக்கு போகிறார். போன இடத்தில் அந்த மண்டபத்தில் நடக்கும் லைட் மியூசிக்கில் தப்பும் தவறுமாக பாடும் கொப்பும் குலையுமான சித்ராதேவிபிரியா என்னும் காஜல் அகர்வால் மீது காதல் வயப்படுகிறார். தனக்கு பாட்டு சரவரவில்லை என்றால் பரதம் என்று கலைத்துறையில் ஏதாவது சாதித்த பின்புதான் திருமணம் என கார்த்தி மாதிரியே விரதமிருக்கும் காஜல். கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதற்கேற்ப பாட்டும் வராமல் ஆட்டமும் சரிவராமல் கார்த்தியின் காதலுக்கு இல்லை இல்லை.. கடலைக்கு சற்றே மனம் இறங்குகிறார், இளகுகிறார். ஆனால், இந்த சமயத்தில் கார்த்தியின் அப்பா பிரபு இவர்களது காதலுக்கு தடை போடுகிறார். காரணம் பிரபுவின் பிளாஷ்பேக் காதல்! காஜலின் தாத்தா ராமசாமி என்னும் நாசரிடம் டிரைவராக வேலைபார்க்கும் பிரபுவுக்கு நாசரின் மகள் மீனாட்சி என்னும் ராதிகா ஆப்தே மீது காதல்! அந்த காதல் நாசருக்கு தெரிய வருவதற்கு முன்பே நாசரிடம் பிரபுவை (பிரபுவின் இளவயதிலும் கார்த்தியே நடித்திருப்பது மட்டுமே இம்மாம்பெரிய படத்தில் புதுமை, பொருத்தம்!) வேலைக்கு சேர்த்துவிட்ட கல்யாணம் சந்தானத்தின் அப்பா காளி சந்தானம் பிரபுவை (அதாங்க கார்த்தியை) வேறு ஒரு மேட்டரில் சிக்கவைத்து வேலையை விட்டு தூக்குகிறார். அதனால் பிரபு-ராதிகா ஆப்தேவின் காதல் பணால் ஆகிறது. அந்த கடுப்பில் கார்த்தியின் காஜல் மீதான காதலுக்கு நோ சொல்கிறார் பிரபு. அப்பா சந்தானம் செய்த தப்புக்கு பிள்ளை சந்தானம் பிராயச்சித்தம் தேடி பிரபுவின் சம்மதத்துடன் கார்த்தி-காஜலின் காதலை சேர்த்து வைக்க, ஆல் இன் ஆல் அழகுராஜா இனிதே முடிகிறது! இனிதேவா.?!

ஏதோ டாப்-10, படவரிசை பத்து, நகைச்சுவை கலாட்டா உள்ளிட்ட சின்னத்திரை டிராமா மாதிரியான கதையை துணிச்சலாக படமாக எடுத்திருக்கும் இயக்குநர் ராஜேஷ்.எம்-ஐ பாராட்டியே ஆகவேண்டும்! அதில் துணிச்சலாக நடிக்கவந்த கார்த்தி, காஜல், சந்தானம், பிரபு, நாசர், சரண்யா, வி.எஸ்.ராகவன், ராதிகா ஆப்தே, கோட்டா சீனிவாசராவ், ஆடுகளம் நரேன், ரஞ்சனி உள்ளிட்டவர்களுக்கு அபார துணிச்சல்தான்.

இந்த காமெடி டிராமாவுக்கும் பேமிலி டிராமாவுக்கும் இசையமைத்திருக்கும் எஸ்.தமன், ஒளிப்பதிவு செய்திருக்கும் சக்திசரவணன் உள்ளிட்ட எல்லோருக்கும் இப்படத்தை எழுதி, இயக்கி இருக்கும் ராஜேஷ்.எம் மாதிரியே ரொம்பவே துணிச்சல்! இதை படமாக தயாரித்திருக்கும் கே.இ.ஞானவேல்ராஜாவுக்கு துணிச்சலோ துணிச்சல்! ஆனால் அந்த துணிச்சல், படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இருக்காது என்பதுதான் படக்குழுவினருக்கு எரிச்சல்! ஆக மொத்தத்தில் ப்ளாஷ்பேக்கில் பிரபுவாக நடிக்கும் கார்த்தி போர்ஷனை தவிர்த்துவிட்டு பார்த்தால் ஆல் இன் ஆல் அழகுராஜா - அல்வாராஜா! ராஜேஷ்.எம்-க்கு சரக்கு தீர்ந்துபோச்சா...?


நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன்.சி




Wednesday, November 6, 2013

ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை செய்ய கமல் திட்டம்

ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை செய்ய கமல் திட்டம்


கமல் தற்போது ‘விஸ்வரூபம்’ படத்தின் இரண்;டாம் பாகத்தில் பிசியாக இருக்கிறார். முதல் பாகத்தை வெளியிடுவதில் பெரும் சர்ச்சைகளை சந்தித்து அப்படத்தை வெளியிடுவதற்குள் படாதாபாடு பட்டுவிட்டார். இறுதியில் அப்படம் வெளியாகி அவருக்கு சுமார் ரூ.200 கோடி வரை வசூலை வாரித் தந்தது.
இதேபோல் ‘விஸ்வரூபம்-2’ பாகத்திலும் வசூலை வாரிக்குவித்துவிட வேண்டும் என்று முனைப்பில் உள்ளார். நல்ல படங்களை கொடுத்தால் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்க முடியும் என்கிறார் கமல்.

இதுகுறித்து அவர் கூறும்போது, ரூ.200 கோடியெல்லாம் பெரிய வசூல் கிடையாது. அதிகபட்சமாக ஆயிரம் கோடி ரூபாய் வரை நம்மால் வசூலிக்க முடியும். காரணம், 100 கோடி ரசிகர்களை நாம் வைத்திருக்கிறோம். அதனால், அவர்கள் விரும்பும் வகையில் படங்கள் கொடுத்தால் கண்டிப்பாக ரூ.1000 கோடி வரை வசூல் செய்துவிடலாம். வருங்காலத்தில் இதை செய்து காட்டவேண்டும் என்ற ஆர்வம் என்னுள் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Monday, November 4, 2013

பாண்டியநாடு சினிமா விமர்சனம்

பாண்டியநாடு சினிமா விமர்சனம்


ரவுடிகள் சூழ்ந்த ஊரில் பயமின்றி நண்பர்களுடன் பொழுதை கழித்து நாயகியுடன் காதல் செய்து குடும்பத்திற்கு ஒரு பிரச்சனை என்றதும் ஆக்சன் அவதாரம் எடுக்கும் தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட் கதை தான். ஆனால் திரைக்கதையில் பழைய படங்களின் சாயல் செய்ததில் வித்தியாசப்பட்டு நிற்கிறார்கள்.

படத்தின் ஆகச்சிறந்த பலம் பாரதிராஜா தான். என்னா நடிப்பு, மனிதர் பிச்சு உதறியிருக்கிறார். இது போன்ற பாத்திரங்களில் இனி கவனம் செலுத்தினால் இயக்கத்தைப் போல் நடிப்பிலும் உச்சத்தை அடையலாம். மகன் இறந்ததும் தப்பாக கொடுக்கப்பட்ட இறப்பு சான்றிதழில் கையெழுத்து போட மறுத்து பொங்கி அழும் காட்சியிலும் மகனை கொன்றவர்களை கூலிப்படை வைத்தாவது கொல்ல வேண்டும் என்று செயலில் இறங்கும் போதும் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

ரவுடிகளால் ஆளப்படும் மதுரையில் ஒரு மிடில் கிளாஸ் குடும்பம். குடும்பத் தலைவர் பாரதிராஜா. இளைய மகன் விஷால் ஒரு செல்போன் கடை வைத்துக் கொண்டு, காமெடிரவுடி அடித்தால் கூட அடியை வாங்கிக் கொண்டு செல்லும் சாதுவான பையன். மூத்த மகன் சுரங்கத் துறையில் அதிகாரி. ஒரு பிரச்சனையில் பெரிய ரவுடியின் கனிம சுரங்கத்தை சீல் வைக்கிறார்.


கொதித்தெழும் ரவுடி விபத்து ஏற்பட்டது போல் அந்த பெரிய பையனை கொன்று விடுகிறார். மகனை கொன்றவர்களை பழி வாங்க கூலிப்படையினரைத் தேடி அலைகிறார் பாரதிராஜா. அப்பாவுக்குத் தெரியாமல் ரவுடியை கொல்ல பின் தொடர்கிறார் விஷால். பல மாதங்கள் காத்திருப்புக்கு பிறகு வில்லனை கொன்று குடும்பத்தையும் ஊரையும் காப்பாற்றுகிறார் விஷால்.

விஷாலுக்கு இந்த நேரத்தில் முக்கியமான படம் இது. கொஞ்சம் கூட ஹீரோயிசம் காட்டாமல் இயல்பான இளைஞனாக வருகிறார். பஞ்ச் டயலாக் கிடையாது. அதிரடி அறிமுகம் கூட கிடையாது. கடைசி நிமிடத்தில் ஆக்சன் அவதாரம் எடுக்கும் போது பின்னி எடுக்கிறார்

லட்சுமி மேனன் அம்சமாக இருக்கிறார். புடவை கட்டும் விதத்திலும் சரி, மேக்கப்பிலும் சரி. அதே போல் அடக்கமாக நடிக்கவும் செய்கிறார். இடைவேளைக்கு பிறகு தான் கதையின் தேவை கருதி காணாமல் போகிறார்.

சூரியின் காமெடிகள் சில இடத்தில் எடுபடுகின்றன. நகைச்சுவைக்கென்று மட்டும் இல்லாமல் கதையின் போக்குக்கு ஏற்ப சீரியஸாகவும் நடித்துப் போகிறார். நட்புக்காக ஒரு சிறிய கதாபாத்திரத்தில் விக்ராந்த். நன்றாக செய்திருக்கிறார்.

சிறு வயதில் ஒரு வில்லனை கண்டால் நாமும் கொல்ல வேண்டும் போல் ஒரு எண்ணம் தோன்றும். சற்று மெச்சூர்ட் ஆன பிறகு அப்படி எந்த படத்திலும் தோன்றியதில்லை. ஆனால் இந்த படத்தில் வில்லனை நாமே கொல்ல வேண்டும் தோன்றியதில் நிற்கிறது படத்தின் வெற்றி.

பாடல்கள் நன்றாக இருக்கின்றன எடுக்கப்பட்ட விதத்திலும் கூட. படத்தில் ஆரம்பத்திலிருந்து சண்டை பிரச்சனை என்று காட்டாமல் சண்டை நடக்கப்போகிறது என்ற பெப்பை கிரியேட் பண்ணி க்ளைமாக்ஸ் வரை கொண்டு சென்றிருப்பது நன்றாக இருக்கிறது.

நன்றி
பாலா...

Friday, November 1, 2013

ஆரம்பம் திரை விமர்சனம்


 

ஆரம்பம் - சினிமா விமர்சனம்

காலையில் இருந்த கூட்டத்தை விட 9மணிக்காட்சிக்கு ரசிகர்கள் உற்சாகத்தை தெறிக்க விடுகிறார்கள். ரசிகர் மன்றம் கிடையாது. ரசிகர்களை நிர்வகிக்க மாவட்ட தலைமை, நகர தலைமை கிடையாது. ஆனால் ரசிகர்களின் உற்சாகத்துக்கு மட்டும் அளவே கிடையாது. போன தீபாவளியன்று துப்பாக்கி காலை 4 மணிக்காட்சி பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன் இந்த ஓப்பனிங் மாஸ் விஜய்க்கு கூட கிடையாது.

என்ன ஒரு ஸ்கிரீன் ப்ரசன்ஸ். என்ன ஒரு அழகு. என்ன ஒரு வசீகரம். என்ன ஒரு ஸ்டைல். ரஜினிக்கு அடுத்து சந்தேகமில்லாமல் அஜித் தான். படம் முழுக்க அஜித் அஜித் அஜித் தான். அஜித் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி சந்தேகமில்லாமல் டபுள் கொண்டாட்டம் தான்.

இந்த படம் ஒரு ஆங்கிலப்படத்தின் தழுவல் என்று சொல்கிறார்கள். நான் அந்தப்படத்தை பார்க்கவில்லை. அதனால் ஒப்பிட்டு பார்ப்பதை விட்டு விடுவோம்.
ரசிகர்களின் உற்சாகம்

அஜித் மும்பையில் ஒரு உதவி கமிசனர். ஒரு தீவிரவாத தாக்குதலில் அவரது சக நண்பர் ராணா டகுபதி இறந்து விடுகிறார். அதில் புல்லட் ப்ரூப் ஊழல் நடந்திருப்பது தெரிய வருகிறது. ஊழலில் சம்பந்தப்பட்ட அமைச்சரும் கமிசனரும் அஜித்தின் குடும்பத்தை கொன்று விடுகின்றனர்.

அதில் இருந்து தப்பிக்கும் அஜித்தும் நயன்தாராவும் ஆர்யாவை பயன்படுத்தி வில்லன்கள் கூட்டத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றனர். இறுதியில் வில்லன்களை வீழ்த்தி படத்தை முடித்து வைக்கிறார் அஜித்.

முதல்பாதியில் தாடியுடன் வரும் அஜித் வசீகரிக்கிறார். பிட்டாக இருக்கிறார். எப்போதும் போல் கோட்டு கோபி போல் இருப்பாரோ என்று நினைத்தேன். ஆனால் மறந்தும் கோட்டை கையில் எடுக்கவில்லை. டிசர்ட் தான் படம் முழுக்க அருமையாக இருக்கிறது.
காலை 5.30மணிக்கு திரையரங்கம் முன் நான் செல்வின் சிவா

ஆர்யா பாத்திரத்திற்கு சரியான தேர்வு. அவ்வப்போது நச் வசனங்களில் சிரிக்கவும் வைக்கிறார். முதலில் அஜித்திடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் போதும் இடைவேளைக்கு பிறகு உண்மை தெரிந்து உதவும் போதும் நன்றாகவே செய்திருக்கிறார்.

நயன்தாரா ம்ஹூம் ஒன்னும் சாதாரணமாக சொல்வதற்கில்லை. ஒரு வில்லனை கொல்வதற்காக ஒரு சட்டையை மட்டும் போட்டுக் கொண்டு எண்ணெய் வழியும் உடம்புடன் வரும்போது அப்படிேய டென்சனாகிட்டேன். சமநிலை வருவதற்கு பத்து நிமிடம் பிடித்தது. நாயனம் வாசிச்சவனெல்லாம் பாக்கியசாலிங்க.
இடைவேளையில் காரசார விவாதம்

டாப்ஸி வழக்கமான தமிழ் சினிமாவின் லூசு கதாநாயகியாக வருகிறார். ஒரு பாடலுக்கு ஆர்யாவுடன் வந்து செல்கிறார். அவ்வப்போது பேபி பேபி என்று கொஞ்சுகிறார். நமக்குதான் கடுப்பாகிறது.

கிஷோர் அந்த போலீஸ் கதாபாத்திரத்திற்கு நச்சென பொருந்துகிறார். அதுல் குல்கர்னியை வேஸ்ட் செய்து இருக்கிறார்கள். ராணா டகுபதியை தெலுகு மார்க்கெட்டுக்காக போட்டு இருக்கிறார்கள். பத்து நிமிடம் வந்து செல்கிறார்.

அஜித்தும் ஆர்யாவும் பணத்தை களவாடும் காட்சி தான் படத்தின் ஹைலைட்டாக இருக்கும். ஆனால் எனக்கு காட்சி சற்று சுமாராகத்தான் தெரிகிறது. இன்னும் இன்ட்ரஸ்டிங்காக யோசித்து இருக்கலாம்.

பாடல்கள் எல்லாமே கடுப்பேற்றுகி்ன்றன. தேவையில்லாத இடத்தில் எல்லாம் பாடல்கள் வருகின்றன. ஹீரோ இன்ட்ரோ சாங்க் சுமாராக இருக்கிறது.

முதல்பாதியில் சுவாரஸ்யமே இல்லை. காலங்காத்தால பார்ப்பதால் கொட்டாவி வரவைத்தது. பின்பாதி தான் படத்தின் பக்கா பேக்கேஜ். ஆனால் இன்னும் எத்தனை காலத்திற்கு தான் போறவன் வர்றவனையெல்லாம் சுட்டுக்கிட்டு இருக்கப் போறாங்களோ.

ஆர்யாவின் அந்த குண்டு பிளாஷ்பேக், படத்தின் ஓட்டத்தை இன்னும் குறைக்கிறது. அதை அப்படியே வெட்டி எறிஞ்சிடலாம். அது படத்தின் சுவாரஸ்யத்தை எந்த விதத்திலும் பாதிக்காது.

அஜித்தை விட்டு இந்த படம் என்று பார்த்தால் சற்று தொங்கலாகத்தான் இருக்கும். ஆரம்பம் என்று பெயர் வைத்ததற்காக படத்தில் ஏகப்பட்ட காட்சிகளில் ஆரம்பம் ஆரம்பம் என்று சொல்வது சற்று நெருடத்தான் செய்கிறது.

அஜித் ரசிகர்களுக்கு இந்த படம் டபுள் அடிப்பொளி. சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டம். ஆனால் பொதுமக்களுக்கு ஒரு முறை பார்க்கலாம் ரகமே.
 
 
 
நன்றி

ஆரூர் மூனா