Pages

Saturday, March 30, 2013

காரிமங்கலம் நகரம் மிக வேகமாக வளரும் நகரமாக உள்ளது. ஏனெனில் இந்த நகரம் NH 7 இல் அமைந்துள்ளது  அதனால் போக்கு வரத்திற்கு சிரமம் இல்லாத நகரமாக உள்ளது. இந்த ஊரில் ரியல் எஸ்டேட் பிசினஸ் இப்போது கொடி கட்டி பறக்கிறது.தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி நகரில் நிலத்தின் விலையை விட இந்த ஊரில் நிலத்தின் விலை அதிகம். காரிமங்கலம் நகரத்தில் இருந்து பெங்களூர் மாநகரம் சுமார் 100 km தொலைவில் உள்ளது. சேலம் மாநகரம் சுமார் 85 km தொலைவில் உள்ளது
பெரு நகரங்களுக்கு மிக விரைவாக தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று விடலாம். அருகில் ஹோகனேக்கல் அருவி சுமார் 50 km தொலைவில் உள்ளது இந்த காரணங்களால் இந்த ஊரில் நிலத்தின் விலை மிக மிக அதிகமாக உள்ளது
இந்த ஊரில் முக்கியமாக மா விளைச்சல் அதிகம் அதே போல் தக்காளி மற்றும் மஞ்சள் விளைச்சலும் மிக அதிகம்
காரிமங்கலம் நகரத்தை சுற்றி விளையும் புளி அதிக புளிப்பு சுவை கொண்டது.
காரிமங்கலம் நகரத்தில் உள்ள வார சந்தை தமிழ் நாட்டில் உள்ள குறிபிடத்தக்க மிக முக்கிய மற்றும் பெரிய சந்தை ஆகும்.
காரிமங்கலம் நகரத்துக்கு தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி நகரத்தில் இருந்து 5 நிமிடத்துக்கு ஒரு பேருந்து வசதி உள்ளது. சாலை போக்கு வரத்தில் இந்த நகரம் ஒரு சிறப்பு நகரம் என்றே கூறலாம்
அன்புடன்

பாலா...

காரிமங்கலம் நகரத்தில் நடு பகுதியில் சிறிய மலை குன்று ஒன்று உள்ளது . இந்த குன்றின் மீது ஒரு சிவன் கோவில் உள்ளது. இந்த சிவன் கோவில் சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். இது பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்த கோவிலில் அருணாசலேசுவரர் மற்றும் உடனுறை அபித குஜம்பால் சன்னதியும் உள்ளது. ஒரு முறை பயணம் செய்து பாருங்கள்.
இப்போது காரிமங்கலம் நகரம் தனி தாலுக்கா என்று தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.இதனால் காரிமங்கலம் மக்கள் பாலகோடு நகரத்துக்கு அலையவேண்டும் என்ற அவசியம் இல்லை
மேலும் காரிமங்கலம் நகரத்துக்கு புதிய பெண்கள் கல்லூரியும் வர உள்ளது.

Friday, March 29, 2013

காரிமங்கலம்:
இந்த நகரம் தர்மபுரி மாவட்டம் பாலகோடு வட்டம் என்ற பகுதிக்கு உட்பட்ட ஒரு நகரம் ஆகும். இந்த நகரம் தேசிய நெடுஞ்சாலை என்ன 7இல் அமைந்துள்ளது. இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும்