Pages

Sunday, July 27, 2014

என் பார்வையில் சதுரங்க வேட்டை படம்

என் பார்வையில் சதுரங்க வேட்டை படம் ;
                                                                             படத்தை பற்றிய விளம்பரங்கள் ஒரு மணி நேரத்தில் 10 முறையாவது வரும் ஒரு சானலில் , எனவே ஆர்வம் அதிகம் ஆகி தனுஷின் இன் வேலை இலா பட்டதாரி படத்திற்கு முன்பே இதை பார்ப்பது என்று முடிவு செய்துவிட்டேன் , மேலும் படத்தை ரிலீஸ் செய்வது லிங்குசாமி என்பதால் ஒரு எதிர்பார்ப்பு

படத்தை பார்க்கலாம் என்று கோவை KG சினிமாஸ் இல் இரண்டாம் காச்சிக்காக online டிக்கெட் பெற்று சென்று அமர்ந்தேன் ,

சரி படத்திற்கு வருவோம் ,

                                            சிறு வயதில் அனாதை ஆன சிறுவன் வளர்ந்த பின் அதே சமூகத்தில் எப்படி இன்றய மக்களின் பேராசைகளை பணமாக மாற்றுகிறான் என்பது தான் கதை , சமீப ஈமு கோழி மோசடி , rise புல்லிங் பாதி விலையில் தங்கம்,MLM  மோசடி என அனைத்தையும் புட்டு புட்டு வைப்பது சூப்பர் ,

உண்மையில் நடராஜிக்கு இதுதான் முதல் படம் போல் இருக்கிறது , அதுவும் அந்த இரிடியம் ஆன்மிக lecture  அமேசிங் ,

பாம்பு கடத்தும் போது ஒரு தோற்றம், எம்எல்எம் வியாபாரம் செய்யும் போது வேறொரு தோற்றம், நகைக் கடை திட்டம், இரிடியம் ரைஸ் புல்லிங், ஆகியவற்றின் போது மற்றொரு தோற்றம் என அப்படியே அந்தந்த ஏமாற்று வேலைக்குப் பொருத்தமான ஆளாகவே மாறி விடுகிறார். வேறு யாராவது முன்னணி ஹீரோ நடித்திருந்தால் அந்த கதாபாத்திரத்தின் ஜீவனே மாறிப் போயிருக்கும். ஆனால், நட்ராஜ் நடித்திருப்பதைப் பார்க்கும் போது, ஏதோ அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதை போன்றும், கதாபாத்திரம் போன்றே தோன்றுகிறது,

படத்தின் ஆகபெரும் பலம் வசனங்கள் தான் , சான்சேஇல்லை , எந்த பொய்யிலும் கொஞ்சம் உண்மை கலந்து இருக்கனும், உனக்கு மட்டும் புரிந்தால் நான் வேறு யோசிக்கணும் , நாமெல்லம் முதலாளி ஆக முயற்சி செய்யும் கம்யூனிஸ்ட் , நாளைக்கு நம்பிக்கை இல்லாதவன் சேர்த்து வைப்பான் எனக்கு அவசியம் இல்லை ,நான் யாரையும் ஏமாற்றவில்லை அவங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தேன் , உன்னை ஏமாற்றியவனை எதிரியாக நினைக்கதே அவன் உனக்கு குரு போன்றவன் . இது போன்ற வசனங்கள் சாட்டை அடி  வசனங்கள் ,

கிடைத்த கொஞ்சூண்டு இடத்திலும் அழுத்த முத்திரை பதிக்கிறார் இஷாரா. பெரிய விழிகள், பெரிய கன்னம், மருண்ட பார்வை... என்று முகமொழியிலேயே உணர்வுகளைக் கடத்திவிடுகிறார். தமிழ்த் திரைக்கு ஒரு புது ராணி!
'மொழிப் பற்றோடு’ கட்டப்பஞ்சாயத்து செய்யும் 'சுத்தத் தமிழ்’ வில்லன், 'சிவப்பு நாடா’ நீதிமன்ற நிலுவைகள் ஒரு குற்றத்தைப் பிசுபிசுக்கச் செய்யும் உண்மை, அரசாங்க வளத்தை சூறையாடும் அசகாயத் தொழிலதிபர்கள், பாம்புக்காக மௌன விரதம் இருக்கும் பணத்தாசை வியாபாரி, 'பாதி விலையில் தங்கம்’ என்றதும் 'ஜோஜோ’வெனக் கிளம்பிவரும் 'மாட்டு மந்தை’ மக்கள் என... படத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் கதாபாத்திரத்திலும் அத்தனை உண்மை ,
மூளையை மழுங்கடிக்கும் எம்.எல்.எம் பாலீஷ் பேச்சுகள், ஆன்மிக மந்திரங்களின் போலித்தனம், கும்பலாக ஏமாற ஆள் சேர்ப்பது அல்லது கும்பல் இருந்தால் ஏமாறத் தயாராக இருப்பது, மதுரை கிரானைட்ஸ் அதிபரின் ஆட்டம்... எனச் செய்திகளும் சைக்காலஜியுமாகப் படம் நெடுக உண்மையின் அரசியல்
 
நடராஜ் -இஸாரா குடுப்பம் நடத்தும் காட்சிகள் கவிதை, படத்தில் எங்கும் பிரமாண்டம் இல்லை ஆனாலும் சூப்பர். போகிற போக்கில் மதுரை giranite  மோசடிகளை   சொல்லிய உண்மையின் அரசியல்.
 
படத்தின் பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
 
 
 
 
மீண்டும் விரைவில் சந்திக்கும் வரை ,
 
 நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன்.சி 
+91 996581871