இணைய அன்பர்களுக்கு வணக்கம்.
நம் இணைய பக்கத்தில் காரிமங்கலம் நகரில் உள்ள சிவன் கோவிலை பற்றி முன்பே எழுதி உள்ளேன். ஆனால் விரிவாக எழுத வில்லை. இந்த கோவிலில் பௌர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. மேலும் கிரிவலமும் நடக்கிறது.இந்த கோவில் நகரின் மைய பகுதியில் உள்ளத்தால் மக்கள் திரளாக வருகிறார்கள்.
இந்த கோவில் அருகில் ஒரு குளம் உள்ளது இந்த குளத்தில் மீன்கள் துள்ளுவதை பார்த்து ரசிப்பது மனதிற்கு சுகமான அனுபவம்
இந்த ஆலயத்திற்கு செல்ல இந்த குன்றில் சாலை வசதியும் உள்ளது மேலே வண்டிகளை நிறுத்த விசாலமான இட வசதி உள்ளது
இந்த அருனச்சலேஸ்வறேர் கோவிலில் திருமண முகுர்த்த நாட்களில் நிறைய திருமணங்கள் நடைபெறுகிறது.
இந்த கோவிலுக்கு செல்ல சாலை வசதி உடன் படிகளிலும் நடந்து செல்லலாம்.
இந்த பழமையான சிவன் கோவிலுக்கு குடும்பத்துடன் வாருங்கள் சிவன் அருள் பெறுங்கள்
அன்புடன்
பாலா...
1 comment:
thank u for your information about this temple
Post a Comment