இணைய அன்பர்களுக்கு வணக்கம்:
காரிமங்கலம் மக்களுக்கு நற்செய்தி :
காரிமங்கலம் நகரம் இபோது தனி தாலுக்கா என்று தமிழக முதல்வர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களால் அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளார். மேலும் இனிமேல் காரிமங்கலம் நகரத்தில் அனைத்து சான்றிதழ்களும் இனி இங்கேயே கிடைக்கும். இனி பாலகோடு நகரத்திற்கு அலய வேண்டிய அவசியம் இல்லை.
மேலும் இப்போது காரிமங்கலம் நகரத்திற்கு பெண்கள் அரசு கலை அறிவியல் கல்லூரி நடப்பு கல்வி ஆண்டு முதல் செயல் பட துவங்கும் என்று முதல்வரால் சட்டசபையில் அதிகார பூர்வமாக அறிவிக்கபட்டுள்ளது. இப்போது தமிழ்நாட்டில் அதிக அரசு கலூரிகளை கொண்ட மாவட்டம் தர்மபுரி ஆகும். கல்வியில் பின் தங்கிய மாவட்டம் என்று கூறப்பட்ட இந்த மாவட்டம் இனி முனேறும் என்று நம்புவோம்
தற்போது இந்த மாவட்டதில் 5 கலை அறிவியல் மற்றும் ஒரு மருத்துவ கல்லூரியும் ஒரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியும் உள்ளது.
இனி தனியார் கல்லூரிகளின் கல்வி கொள்ளை இந்த மாவட்டத்தில் சற்று கடினம் தான்
No comments:
Post a Comment