Pages

Wednesday, January 29, 2014

என்னுடைய பார்வையில் கோலி சோடா பட விமர்சனம்

என்னுடைய பார்வையில் கோலி சோடா பட விமர்சனம் ,

இந்த படத்தை பற்றி நல்ல படம் என்று நான் கேள்வி பட்டும் படத்தை ஒரு வார தாமதத்திற்கு பிறகு கோவை கங்கா திரை அரங்கில் பார்த்தேன் என்  அறை நண்பர் ராஜீவ் படத்தை பார்க்க என்னுடன் மூன்றாவது முறையாக வந்ததால் எனக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது

சரி  படத்திற்கு வருவோம் .

படத்தில் நடித்து இருப்பவர்கள் பசங்க படத்தில் பள்ளி சிறுவர்களாக நடித்த கிஷோர் ,பாண்டி மற்றும் ஸ்ரீராம் போன்றவர்களே இந்த படத்தில் வளர்ந்த வாலிப சிறுவர்களாக

தங்களக்கு என்று எந்த அடையாளம் இல்லாத கோயம்பேடு மார்கெட்டில் மூட்டை தூக்கி பிழைக்கும் சிறுவர்கள் பின்னர் ஒரு தங்கலுய்க்கன அடையாளத்தை அடையும் போது அந்த அடையாளத்தை அழிக்கும்  வில்லன் கூட்டமும் மீண்டும் தங்கள் அடையாளங்களை அந்த சிறுவர்கள் அடைந்தார்களா  என்பது தான் படம்

ஆசியாவிலேயே பெரிய காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு வணிகவளாகத்தில் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்துகின்றனர் புள்ளி - கிஷோர், சித்தப்பா - பாண்டி, குட்டிமணி - முருகேஷ், சேட்டு - ஸ்ரீராம் ஆகிய நான்கு அநாதை சிறுவர்கள். காலம் முழுவதும் இப்படியே மூட்டை தூக்கி அடுத்த வேளை சோற்றுக்கு பிறர் கையை எதிர்பார்த்தே வாழப் போகிறீர்களா? அல்லது உங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் ஏதாவது தொழில் செய்து பெரிய மனுஷர்களாக மாறப்போகிறீர்களா? என அவர்களை உசுப்பேற்றி விடுகின்றது சுற்றமும், சூழ்நிலையும். குறிப்பாக இந்த 4 சிறுவர்களின் முதலாளியம்மாவும், காய்கறி மொத்த விற்பனையாளருமான ஆச்சி - சுஜாதா. இவர்களை உசுப்பேற்றுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் 4 பேரையும் கோயம்பேடு மார்க்கெட்டின் பெரிய மனிதர் நாயுடு அண்ணாச்சி முன் கொண்டு நிறுத்தி, அவர்களுக்கென ஒரு கடையையும் பிடித்து, அதில் ஒரு உணவு விடுதியையும் ஆரம்பித்து கொடுக்கிறார். ஆரம்பத்தில் பிஸினஸூம் ஆஹா, ஓஹோ என அமர்க்களப்படுகிறது.

ஆச்சிமெஸ் பசங்க எனும் அடையாளத்தோடு வளைய வர ஆரம்பிக்கும் நால்வரும் மகிழ்வு நிலையில் இருக்கும்போது, அவர்களது கடையை நாயுடுவின் ஆட்கள் தங்களது செகண்ட் பிஸினஸூக்கும், குடி, குட்டி உள்ளிட்ட சின்ன புத்தி செயல்களுக்கும் யூஸ் பண்ணுவது கண்டு வெகுண்டெழும் நால்வரும், நாயுடுவின் ஆட்களுடன் மோதலில் இறங்குகின்றனர். இதனால் அவர்கள் படும்பாடும், கொடுக்கும் பதிலடியும்தான் கோலி சோடா. இந்த கதையினூடே புள்ளி-கிஷோர், யாமெனி-சாந்தினி மற்றும் சித்தப்பா-பாண்டி, ஏடிஎம்-ஸ்ரீநிதியின் இன்பாட்சுவேஷன் காதலையும் கலந்துகட்டி கலர்புலாக கதை சொல்லி இருக்கிறார் இப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான எஸ்.டி.விஜய் மில்டன்.

கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் உள்ளிட்ட நான்கு சிறுவர்களும் நச் என்று நடித்திருக்கின்றனர். மீசை முளைக்க ஆரம்பிக்காத வயதில் அவர்களுக்கு கிளம்பும் அடையாள ஆசையையும், ஆண்-பெண் ஆசையையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றனர் மேலும் அந்த  atm என்ற கிண்டலுக்கு உள்ளாகும் ஸ்ரீநிதியின்  அப்ளாஸ்

அதிலும் ரவுண்டு ரவுண்டாக புகைவிட்டு போதையில் போலீஸ் ஸ்டேஷனில் ஆவின்பால் நஷ்டத்தில் ஓடுது, அதை வீடு வீடாக சப்ளை பண்றீங்க, டாஸ்மாக் லாபத்துல ஓடுது, அங்க குடிச்சுட்டு டூ-வீலர்ல வந்தா அவனை அரெஸ்ட் பண்றீங்க... என சகட்டு மேனிக்கு தத்துவமாக பொரிந்து தள்ளும் மந்திரவாதி - இமான் அண்ணாச்சி, தான் வரும் காட்சிகளில் தியேட்டரை அதிர வைக்கிறார். இமான் அண்ணாச்சி பேசும் இந்த வசனங்களில் தொடங்கி, திருப்பி அடிக்க நாங்க பெரிய பசங்களும் இல்லை... பயந்து ஓடுவதற்கு நாங்க சின்ன பசங்களும் இல்லை... என அந்த சிறுவர்கள் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் தியேட்டரில் கைதட்டலையும், விசில் சப்தங்களையும் அள்ளுகிறது வாழ்த்துக்குள்

ஆச்சியாக நடித்து இருக்கும் சுஜாதா ஒரு நிறைவான கதா பாத்திரம்

படத்திற்கு மிக பெரிய பலம் பசங்க பாண்டிராஜின்  வசனங்கள்தான் என்றால் அது மிகை இல்லை

இந்த படம் ஒரு சிறந்த படம் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது  ஆனாலும் வழக்கமான கிளைமாக்ஸ் கடைசியில் ஓவர் மசாலா என்ற வகையில் கொஞ்சம் விலகி செல்வதாகவே தோன்றுகிறது

இது போன்ற படங்களை வெளியிடும்  டைரக்டர் லிங்குசாமிக்கும் மனம்மார்ந்த நன்றி



மீண்டும் இனிமையான செய்திகளுடன் சந்திக்கும் வரை

நன்றிகளுடன் 


பாலசுப்ரமணியன்.சி
9965818701


















 

No comments: