Pages

Sunday, July 27, 2014

என் பார்வையில் சதுரங்க வேட்டை படம்

என் பார்வையில் சதுரங்க வேட்டை படம் ;
                                                                             படத்தை பற்றிய விளம்பரங்கள் ஒரு மணி நேரத்தில் 10 முறையாவது வரும் ஒரு சானலில் , எனவே ஆர்வம் அதிகம் ஆகி தனுஷின் இன் வேலை இலா பட்டதாரி படத்திற்கு முன்பே இதை பார்ப்பது என்று முடிவு செய்துவிட்டேன் , மேலும் படத்தை ரிலீஸ் செய்வது லிங்குசாமி என்பதால் ஒரு எதிர்பார்ப்பு

படத்தை பார்க்கலாம் என்று கோவை KG சினிமாஸ் இல் இரண்டாம் காச்சிக்காக online டிக்கெட் பெற்று சென்று அமர்ந்தேன் ,

சரி படத்திற்கு வருவோம் ,

                                            சிறு வயதில் அனாதை ஆன சிறுவன் வளர்ந்த பின் அதே சமூகத்தில் எப்படி இன்றய மக்களின் பேராசைகளை பணமாக மாற்றுகிறான் என்பது தான் கதை , சமீப ஈமு கோழி மோசடி , rise புல்லிங் பாதி விலையில் தங்கம்,MLM  மோசடி என அனைத்தையும் புட்டு புட்டு வைப்பது சூப்பர் ,

உண்மையில் நடராஜிக்கு இதுதான் முதல் படம் போல் இருக்கிறது , அதுவும் அந்த இரிடியம் ஆன்மிக lecture  அமேசிங் ,

பாம்பு கடத்தும் போது ஒரு தோற்றம், எம்எல்எம் வியாபாரம் செய்யும் போது வேறொரு தோற்றம், நகைக் கடை திட்டம், இரிடியம் ரைஸ் புல்லிங், ஆகியவற்றின் போது மற்றொரு தோற்றம் என அப்படியே அந்தந்த ஏமாற்று வேலைக்குப் பொருத்தமான ஆளாகவே மாறி விடுகிறார். வேறு யாராவது முன்னணி ஹீரோ நடித்திருந்தால் அந்த கதாபாத்திரத்தின் ஜீவனே மாறிப் போயிருக்கும். ஆனால், நட்ராஜ் நடித்திருப்பதைப் பார்க்கும் போது, ஏதோ அவருக்காகவே உருவாக்கப்பட்ட கதை போன்றும், கதாபாத்திரம் போன்றே தோன்றுகிறது,

படத்தின் ஆகபெரும் பலம் வசனங்கள் தான் , சான்சேஇல்லை , எந்த பொய்யிலும் கொஞ்சம் உண்மை கலந்து இருக்கனும், உனக்கு மட்டும் புரிந்தால் நான் வேறு யோசிக்கணும் , நாமெல்லம் முதலாளி ஆக முயற்சி செய்யும் கம்யூனிஸ்ட் , நாளைக்கு நம்பிக்கை இல்லாதவன் சேர்த்து வைப்பான் எனக்கு அவசியம் இல்லை ,நான் யாரையும் ஏமாற்றவில்லை அவங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்தேன் , உன்னை ஏமாற்றியவனை எதிரியாக நினைக்கதே அவன் உனக்கு குரு போன்றவன் . இது போன்ற வசனங்கள் சாட்டை அடி  வசனங்கள் ,

கிடைத்த கொஞ்சூண்டு இடத்திலும் அழுத்த முத்திரை பதிக்கிறார் இஷாரா. பெரிய விழிகள், பெரிய கன்னம், மருண்ட பார்வை... என்று முகமொழியிலேயே உணர்வுகளைக் கடத்திவிடுகிறார். தமிழ்த் திரைக்கு ஒரு புது ராணி!
'மொழிப் பற்றோடு’ கட்டப்பஞ்சாயத்து செய்யும் 'சுத்தத் தமிழ்’ வில்லன், 'சிவப்பு நாடா’ நீதிமன்ற நிலுவைகள் ஒரு குற்றத்தைப் பிசுபிசுக்கச் செய்யும் உண்மை, அரசாங்க வளத்தை சூறையாடும் அசகாயத் தொழிலதிபர்கள், பாம்புக்காக மௌன விரதம் இருக்கும் பணத்தாசை வியாபாரி, 'பாதி விலையில் தங்கம்’ என்றதும் 'ஜோஜோ’வெனக் கிளம்பிவரும் 'மாட்டு மந்தை’ மக்கள் என... படத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் கதாபாத்திரத்திலும் அத்தனை உண்மை ,
மூளையை மழுங்கடிக்கும் எம்.எல்.எம் பாலீஷ் பேச்சுகள், ஆன்மிக மந்திரங்களின் போலித்தனம், கும்பலாக ஏமாற ஆள் சேர்ப்பது அல்லது கும்பல் இருந்தால் ஏமாறத் தயாராக இருப்பது, மதுரை கிரானைட்ஸ் அதிபரின் ஆட்டம்... எனச் செய்திகளும் சைக்காலஜியுமாகப் படம் நெடுக உண்மையின் அரசியல்
 
நடராஜ் -இஸாரா குடுப்பம் நடத்தும் காட்சிகள் கவிதை, படத்தில் எங்கும் பிரமாண்டம் இல்லை ஆனாலும் சூப்பர். போகிற போக்கில் மதுரை giranite  மோசடிகளை   சொல்லிய உண்மையின் அரசியல்.
 
படத்தின் பின்னணி இசையில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
 
 
 
 
மீண்டும் விரைவில் சந்திக்கும் வரை ,
 
 நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன்.சி 
+91 996581871
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 






















 

Saturday, March 29, 2014

என்னுடைய பார்வையில் குக்கூ படம்

என்னுடைய பார்வையில் குக்கூ  படம்

 ஆனந்த விகடன் புத்தகத்தில் டைரக்டர் ராஜு முருகன் வட்டியும் முதலும் தொடர் என் மனதின் மிக நெருக்கமான தொடர் அது என்னுடைய பள்ளி நாட்களையும் கிராம வாழ்கையும் நினைவு படுத்திய தொடர்  அந்த தொடர் முடியும் பொது ராஜு முருகன் நான் ஒரு படத்தை இயக்க இருப்பதால் இந்த தொடர் முடிவதாக எழுதி இருந்தார் அப்போதே படத்தின் தலைப்பையும் கூறி இருந்தார்

  நான் இந்த படத்தை ஆவலுடன் எதிர் பார்த்தாலும் முதல் வாரம் பார்க்கவில்லை என் அறை  நண்பர் ராஜு அழைத்த காரனத்தால் உடனடியாக  இரவு காட்சி காண கோவை செந்தில் குமரன் சென்றோம் அனால் டிக்கெட் இல்லை பின்னர் பத்து நிமிட தாமதத்தில் கங்கா காம்ப்ளெக்ஸ் அரங்கில் படத்தை பார்த்தோம்  ஆனாலும் முதல் 5 நிமிட படத்தை பார்க்க முடியவில்லை

சரி படத்திற்கு வருவோம் ,


நாயகனும் நாயகியும் மாற்றுத் திறனாளிகள். இருவரும் அதனை வைத்து பிழைக்க நினைக்காமல் உழைத்து பிழைக்கிறார்கள். அவர்கள் சார்உலகில் மகிழ்வுடன் பயணிக்கிறார்கள்.

சில அலைவரிசை புரிதல்களுக்கு பிறகு காதலிக்கிறார்கள். பார்வையற்ற நாயகியின் பணத்தாசை பிடித்த அண்ணனின் கட்டாயத்தினாலும் வாழ்வின் சூழலினாலும் இவர்கள் பிரிக்கப்படுகிறார்கள். இறுதியில் இணைந்தார்களா என்பதே  படம் .
 
நாயகனாக தினேஷ், முதல் படத்தைப் போலவே பர்பார்மன்ஸில் அசத்தியிருக்கிறார். கொஞ்சம் அசந்தாலும் ஓவர் ஆக்டிங் என்று சொல்லிவிடக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அப்படி எதுவும் நடக்கவில்லை என்பதே அவர் திறமைக்கு சான்று. கண்டிப்பாக இவர் தமிழ் சினிமாவில் உச்சம் தொட வேண்டும்.

நாயகியாக மாளவிகா, நல்ல நடிப்பு, இயல்பான அழகு, தெறிக்கும் எக்ஸ்பிரசன் என பட்டையை கிளப்புகிறார். நமக்கு பேரழகிகளை விட பக்கத்து வீட்டு பொண்ணு தோற்றம் தான் பிடிக்கும். அதனாலேயே இவர் இன்னும் கவனிக்கப்படுவார்.
 
படத்தில் ஒவ்வொரு பாத்திரத்திற்கும் தனிப்பட்ட முறையில் ஒரு பங்களிப்பை வைத்திருக்கிறார் இயக்குனர். அந்த எம்ஜியார் நடிகர், குபேரன் சந்திரபாபு, இளையராஜா காதல் சோக பாடல்களுக்கு பணம் தந்து ரசிக்கும் நபர், பிஎம், ரயிலில் யாரையும் திரும்பிக்கூட பார்க்காமல் பயணம் செய்யும் நபர் என ஒவ்வொருவரும் கவனம் ஈர்க்கின்றனர்.

பேஸ்புக் ஸ்டேட்டஸ்க்காக போலி பொதுச்சேவை செய்யும் நபர்களை ஒரு காட்சியில் நிற்க வைத்து சாட்டையால் அடிக்கிறார் இயக்குனர். அந்த ஒரு காட்சி என்னை மிகவும் ரசிக்க வைத்தது.

போகிற போக்கில் நம் நடிகர்களையும் இன்றய அரசியல்  அழகா விமர்சிப்பது மிக அழகு 
 
  படத்தில் கண் பார்வை இல்லாத தினேஷ் இடம் நண்பர்கள் 2 லச்ச ரூபாய் தந்து அனுப்புவது நம்பும் படி இல்லை , மேலும் தேர்தல் காலங்களில் சோதனை என்ற பெயரில் மக்களை  வஞ்சிக்கும் போலீஸ் அதிகாரிகளை ராஜு முருகன்  தோலுரித்து காட்டி இருக்கிறார் 
 

சந்தோஷ் நாராயணின் மனதை வருடும் பாடல்கள், இசை, (பின்னணி இசை விட்டுவிட்டு ஒலிப்பதின் பின்னணி என்னவோ.?), பி.கே.வர்மாவின் கண்களை கவரும் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் பெரிய பிளஸ் பாயிண்ட்டுகள்.

அண்ணனை விட தம்பிக்கு தான் பவர்..., இருட்டில் கிடைத்த சுதந்திரம்..., தமிழுக்கும், தமிழர்களுக்கும் தொடர்ந்து கிடைத்து வரும் அவமரியாதைகள், உள்ளிட்ட லோக்கல்-இன்டர்நேஷனல் பாலிட்டிக்ஸ்களை நக்கல் அடிப்பது, என படத்தில் பாத்திரங்கள் பேசும் வசனங்கள் இயக்குநர் ராஜூ முருகனுக்கு ஒரு ஷொட்டு
 
 பாடல்கள் தேன் என கூறினால் அது ஒன்றும் மிகை இல்லை , ஆனாலும் கிளைமாக்ஸ் நீளத்தை சற்று குறைத்து இருந்தால் இன்னும் சிறப்பாக  இருந்திருக்கும் , தரமான படம் வழக்கமான கிளைமாக்ஸ் ,
 
 
 
 
இது  தாமதமான விமர்சனம் , அடுத்த முறை மிக விரைவில் சந்திக்கும் வரை 
 
நன்றிகளுடன் ,
பாலசுப்ரமணியன்.சி 
கோயம்புத்தூர் .
9965818701.
 















 

Friday, March 28, 2014

குக்கூ. படத்தை பற்றி

குக்கூ. படத்தை பற்றி ,

                             இந்த படத்தை ரிலீஸ் ஆன உடனே பார்த்து விட வேண்டும் என எண்ணி இருந்தேன் ஆனாலும் வேலை பளு காரணமாக படத்தை பார்க்க முடியவில்லை , நான் ராஜு முருகனின் வட்டியும் முதலும் தொடரின் மிக பெரிய அடிமை , ஆனந்த விகடனில் அது தொடராக வெளி வந்த போது ஒரு வாரம் கூட  விடாமல் படித்தவன்  அதனால் தான் அந்த அளவுக்கு ஆர்வம்

தாமதம் என்றாலும் இன்று இரவுக்குள் படத்தின் விமர்சனத்தை இங்கு பதிவிடுகிறேன்


நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன் .சி
கோயம்புத்தூர்
+91 9965818701.

Wednesday, March 12, 2014

நிமிர்ந்து நில் சினிமா விமர்சனம் - என் பார்வையில்

நிமிர்ந்து நில்  சினிமா விமர்சனம் - என்  பார்வையில்,

   மிக நீண்ட நீண்ட இடைவெளிக்கு பிறகு பட விமர்சனம் எழுதுகிறேன் ,சமீபத்தில் முக்கிய படங்கள் எதுவும் வரவில்லை விஜய் சேதுபதி படமும் பெரிய எதிர்பார்ப்பு இல்லாத காரணத்தால் விமர்சனம் எழுதவில்லை ,

சமுதிரகனியின் படம் என்றாலே நிச்சயம் சமூக விழிப்புணர்வு இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும், மேலும் சமீபத்தில் அவர் படம் சாட்டை என்ற படத்தில் இடம் பெற்ற வசங்கள் மிகபெரிய வரவேற்ப்பை பெற்றன. எனவே இந்த் படத்திற்கும் வசனங்கள் மீது பெரிய எதிபார்ப்பு எனக்கு இருந்தது.

ஜெயம் ரவிக்கும் சமீபத்தில் எந்த ஹிட் படமும் இல்லை மேலும் படம் வெள்ளியன்று வெளியாகும் என்று கூறினார்கள், அனால் வரவில்லை சனிகிழமை அன்று வெளியான உடனே பார்க்க வேண்டும் என நினைத்தேன் அனால் முடியவில்லை நண்பர்களுடன் நேற்றுதான் பார்த்தேன்.

நான்  இந்த படத்தை  கோவை  செந்தில் குமரன் அ.ரங்கில் என் அறை தோழர் மற்றும் இன்னும் சில நண்பர்களுடன் அமர்ந்தேன்

சரி கதைக்கு வருவோம்,

நேர்மையாக வாழ நினைக்கும் பொறியியல் பட்டதாரியான ஜெயம் ரவி ஒரு நாள் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொது போக்குவரத்து காவலரால் உண்டாகும் சின்ன பிரச்சனையால் உண்டான கோபம் அது எங்கு போய்  முடிகிறது என்பதுதான் படம்.
நேர்மையாக வாழ வேண்டும் என்று போதிக்கப்பட்டு வளர்ந்த ஒருவனுக்கு வாழ்க்கையின் நிஜம் புரிய மறுக்கிறது. இயல்பான இந்தியா லஞ்சத்தில் மட்டுமே இயங்குகிறது என்பதை ஏற்க மறுக்கும் அவன் படும் பாடும் அதற்கு அவன் கண்டறியும் தீர்வுமே நிமிர்ந்து நில்.

ஜெயம் ரவியால் பதிக்கப்பட்ட  போலீஸ் மற்றும் ஜட்ஜ் இருவரும் ஜெயம் ரவியை போலீஸ் கொண்டு சாகும் அளவுக்கு அடிக்கிறார்கள்  இதனால் பொங்கி எழும் ஜெயம் ரவி இவர்கள் அனைவரும் பழி வாங்க இல்லாத ஒரு ஆள் பெயரில் பாஸ்போர்ட் driving licence , voter id மற்றும் death certificate போன்ற அனைத்தும் பெறுகிறார் இதன் மூலம் மொத்தம் 147 பேர் மாட்டுகிறார்கள் இவர்கள் அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்துகிறார்  ஜெயம் ரவி

இடைவேளை வரை மாட்டிய  அதிகாரிகள் ஜெயம் ரவியை பழிவாங்க முயற்சி செய்கிறார்கள் , இடைவேளை வரை வேகமாக செல்லும் படம் பின்னர் சற்று தடுமாறுகிறது என்பதே உண்மை.

அமலபாலுக்கு இந்த படத்தை பொறுத்தவரை பெரிய  வேலை இல்லை அவர் பாத்திரம் இல்லாவிட்டாலும் படத்தில் எந்த பாதிப்பும் இருந்திருக்காது.நாயகனின் நண்பனாக சூரி நிறைவாக வந்து காமெடியுடன் குணச்சித்திரத்தையும் கலந்து நிறைவாக செய்து போகிறார். கோபிநாத்தும் படத்தில் இருக்கிறார்.

பாடல்களை பொறுத்தவரை படத்தில் எதற்கு என்றே தெரியவில்லை , சரத்குமார் CBI அதிகாரியாக 10 நிமிடம் வந்து செல்கிறார்,.

இடைவேளைக்கு பின் வரும் ஆந்தர  ஜெய் சிம்ம ரெட்டியாக  இன்னொரு பாத்திரத்திலும் வெளுத்து வாங்கி இருக்கிறார் ஜெயம் ரவி. அவரை  இறுதியில் கொலை செய்வது ஏன் என்று தெரியவில்லை.

ஆனால் படத்தின் பிற்பாதி சலிப்பையும் ஒரு அயற்சியையும் தருகிறது. முதல் பாதியில் ரவிக்கு ஆதரவாக போராடிய மாணவர்கள் காணாமல் போனதன் ரகசியம் தான் புரியவில்லை.

ரவியின் பேட்டியைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்ட மக்கள் அவருக்கு ஆதரவாக உயிரையும் கொடுக்க கிளம்புகிறார்கள். ஆனால் படத்தின் ஓட்டத்தில் காணாமலே போகிறார்கள்.

லஞ்சம் வாங்குபவனை விட லஞ்சம் கொடுத்து காரியம் சாதிக்க நினைக்கும் மக்கள் தான் குற்றவாளிகள் என்பதை சொல்ல நினைக்கும் படம் சற்றே தடம் புரண்டுவிட்டது. ஆகச்சிறந்த படமாக வந்திருக்க வேண்டியது அனால் சற்று தடம் புரண்டுவிட்டது 
 
ஆனாலும் படம் பார்க்கும் பொது அந்நியன்  மற்றும் சாமுராய் போன்ற படங்களின் எண்ணம் வருவதை தவிர்க்க முடியவில்லை 
 
ஆனாலும் படத்தை ஒருமுறை நிச்சயம் பார்க்கலாம் 
 
 
 







































 

Wednesday, January 29, 2014

என்னுடைய பார்வையில் கோலி சோடா பட விமர்சனம்

என்னுடைய பார்வையில் கோலி சோடா பட விமர்சனம் ,

இந்த படத்தை பற்றி நல்ல படம் என்று நான் கேள்வி பட்டும் படத்தை ஒரு வார தாமதத்திற்கு பிறகு கோவை கங்கா திரை அரங்கில் பார்த்தேன் என்  அறை நண்பர் ராஜீவ் படத்தை பார்க்க என்னுடன் மூன்றாவது முறையாக வந்ததால் எனக்கும் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது

சரி  படத்திற்கு வருவோம் .

படத்தில் நடித்து இருப்பவர்கள் பசங்க படத்தில் பள்ளி சிறுவர்களாக நடித்த கிஷோர் ,பாண்டி மற்றும் ஸ்ரீராம் போன்றவர்களே இந்த படத்தில் வளர்ந்த வாலிப சிறுவர்களாக

தங்களக்கு என்று எந்த அடையாளம் இல்லாத கோயம்பேடு மார்கெட்டில் மூட்டை தூக்கி பிழைக்கும் சிறுவர்கள் பின்னர் ஒரு தங்கலுய்க்கன அடையாளத்தை அடையும் போது அந்த அடையாளத்தை அழிக்கும்  வில்லன் கூட்டமும் மீண்டும் தங்கள் அடையாளங்களை அந்த சிறுவர்கள் அடைந்தார்களா  என்பது தான் படம்

ஆசியாவிலேயே பெரிய காய்கறி மார்க்கெட்டான கோயம்பேடு வணிகவளாகத்தில் மூட்டை தூக்கி பிழைப்பு நடத்துகின்றனர் புள்ளி - கிஷோர், சித்தப்பா - பாண்டி, குட்டிமணி - முருகேஷ், சேட்டு - ஸ்ரீராம் ஆகிய நான்கு அநாதை சிறுவர்கள். காலம் முழுவதும் இப்படியே மூட்டை தூக்கி அடுத்த வேளை சோற்றுக்கு பிறர் கையை எதிர்பார்த்தே வாழப் போகிறீர்களா? அல்லது உங்களுக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் ஏதாவது தொழில் செய்து பெரிய மனுஷர்களாக மாறப்போகிறீர்களா? என அவர்களை உசுப்பேற்றி விடுகின்றது சுற்றமும், சூழ்நிலையும். குறிப்பாக இந்த 4 சிறுவர்களின் முதலாளியம்மாவும், காய்கறி மொத்த விற்பனையாளருமான ஆச்சி - சுஜாதா. இவர்களை உசுப்பேற்றுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் 4 பேரையும் கோயம்பேடு மார்க்கெட்டின் பெரிய மனிதர் நாயுடு அண்ணாச்சி முன் கொண்டு நிறுத்தி, அவர்களுக்கென ஒரு கடையையும் பிடித்து, அதில் ஒரு உணவு விடுதியையும் ஆரம்பித்து கொடுக்கிறார். ஆரம்பத்தில் பிஸினஸூம் ஆஹா, ஓஹோ என அமர்க்களப்படுகிறது.

ஆச்சிமெஸ் பசங்க எனும் அடையாளத்தோடு வளைய வர ஆரம்பிக்கும் நால்வரும் மகிழ்வு நிலையில் இருக்கும்போது, அவர்களது கடையை நாயுடுவின் ஆட்கள் தங்களது செகண்ட் பிஸினஸூக்கும், குடி, குட்டி உள்ளிட்ட சின்ன புத்தி செயல்களுக்கும் யூஸ் பண்ணுவது கண்டு வெகுண்டெழும் நால்வரும், நாயுடுவின் ஆட்களுடன் மோதலில் இறங்குகின்றனர். இதனால் அவர்கள் படும்பாடும், கொடுக்கும் பதிலடியும்தான் கோலி சோடா. இந்த கதையினூடே புள்ளி-கிஷோர், யாமெனி-சாந்தினி மற்றும் சித்தப்பா-பாண்டி, ஏடிஎம்-ஸ்ரீநிதியின் இன்பாட்சுவேஷன் காதலையும் கலந்துகட்டி கலர்புலாக கதை சொல்லி இருக்கிறார் இப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான எஸ்.டி.விஜய் மில்டன்.

கிஷோர், பாண்டி, முருகேஷ், ஸ்ரீராம் உள்ளிட்ட நான்கு சிறுவர்களும் நச் என்று நடித்திருக்கின்றனர். மீசை முளைக்க ஆரம்பிக்காத வயதில் அவர்களுக்கு கிளம்பும் அடையாள ஆசையையும், ஆண்-பெண் ஆசையையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கின்றனர் மேலும் அந்த  atm என்ற கிண்டலுக்கு உள்ளாகும் ஸ்ரீநிதியின்  அப்ளாஸ்

அதிலும் ரவுண்டு ரவுண்டாக புகைவிட்டு போதையில் போலீஸ் ஸ்டேஷனில் ஆவின்பால் நஷ்டத்தில் ஓடுது, அதை வீடு வீடாக சப்ளை பண்றீங்க, டாஸ்மாக் லாபத்துல ஓடுது, அங்க குடிச்சுட்டு டூ-வீலர்ல வந்தா அவனை அரெஸ்ட் பண்றீங்க... என சகட்டு மேனிக்கு தத்துவமாக பொரிந்து தள்ளும் மந்திரவாதி - இமான் அண்ணாச்சி, தான் வரும் காட்சிகளில் தியேட்டரை அதிர வைக்கிறார். இமான் அண்ணாச்சி பேசும் இந்த வசனங்களில் தொடங்கி, திருப்பி அடிக்க நாங்க பெரிய பசங்களும் இல்லை... பயந்து ஓடுவதற்கு நாங்க சின்ன பசங்களும் இல்லை... என அந்த சிறுவர்கள் பேசும் ஒவ்வொரு டயலாக்கும் தியேட்டரில் கைதட்டலையும், விசில் சப்தங்களையும் அள்ளுகிறது வாழ்த்துக்குள்

ஆச்சியாக நடித்து இருக்கும் சுஜாதா ஒரு நிறைவான கதா பாத்திரம்

படத்திற்கு மிக பெரிய பலம் பசங்க பாண்டிராஜின்  வசனங்கள்தான் என்றால் அது மிகை இல்லை

இந்த படம் ஒரு சிறந்த படம் என்பதில் மாற்று கருத்து இருக்கமுடியாது  ஆனாலும் வழக்கமான கிளைமாக்ஸ் கடைசியில் ஓவர் மசாலா என்ற வகையில் கொஞ்சம் விலகி செல்வதாகவே தோன்றுகிறது

இது போன்ற படங்களை வெளியிடும்  டைரக்டர் லிங்குசாமிக்கும் மனம்மார்ந்த நன்றி



மீண்டும் இனிமையான செய்திகளுடன் சந்திக்கும் வரை

நன்றிகளுடன் 


பாலசுப்ரமணியன்.சி
9965818701


















 

Monday, January 27, 2014

கோலி சோடா படத்தை பற்றி

கோலி சோடா  படத்தை பற்றி  சில positive ஆன  ரிசல்ட் பல ன் அன்பர்கள் என்னுடன் பகிர்ந்து கொண்டார்கள்

உண்மையில் இந்த படத்தை நானும் ஒரு சாதாரண படம் என்று தான் நினைத்தேன் அனால் பத்திரிகைகள் மற்றும் வலை தள  விமர்சனங்கள் நன்றாக இருந்ததாக  கூறி உள்ளார்கள், நான் இதை பத்தோடு பதினொன்று என நினைத்து பார்க்கவில்லை எனவே படத்தை உடனே பார்ஹு விமர்சனம்  என்னுடைய வலை பூவில் பதிவிடுகிறேன்

படத்தை பார்த்த நண்பர்கள் கமெண்ட்ஸ் சொல்லவும்


நன்றிகளுடன்,
பாலசுப்ரமணியன்.சி
9965818701

Saturday, January 18, 2014

ஜில்லா பட விமர்சனம்

ஜில்லா சினிமா விமர்சனம்

 

                                             வீரம் படத்தை பார்த்த உடனே  ஜில்லாவையும் பார்த்து விட்டேன் ஆனாலும் விமர்சனம் எழுதலாம் என்று நினைக்கும் போது  எதாவது  வேலை வந்து விடுகிறது. இது ரொம்ப தாமதம் என்று தெரியும் ஆனாலும் எழுதி பாப்போம் என்று தோன்றியதால் எழுதுகிறேன்

வழக்கம் போல் காரிமங்கலம் நகரத்தில் படத்தை பாப்போம் என்று தியேட்டர் போனால் அநியாயமாக 80 ரூபாய் டிக்கெட். தலையில் அடித்து கொண்டே வேறு வழி  இல்லாமல் சென்று அமர்ந்தேன்

படத்தில் மோகன்லால் வேறு இருந்ததால் ஏக  எதிர்பார்ப்பு என்  மனதில்.

சிவன் எனும் மோகன்லாலின் வளர்ப்பு மகன் சக்தி எனும் விஜய். மதுரையையே ஆட்டிப்படைக்கும் தாதா சிவனுக்காக போலீசிடம் போராடி சக்தி விஜய்யின் கண் எதிரேயே உயிரை விடுகிறார் அவரது அப்பா. அப்பாவை பறிகொடுத்தாலும் அந்த ஸ்பாட்டிலேயே லாலின் நிறைமாத கர்ப்பவதி மனைவி பூர்ணிமா பாக்யராஜையும், அவர் பிரசவிக்கும் குழந்தையையும் வில்லன்களிடமிருந்து காபந்து செய்கிறார் சிறுவயது விஜய்! அப்புறம்? அப்புறமென்ன...? அப்பாவை இழந்ததால் அநாதையாகும் விஜய், லாலின் மூத்த மகனாக வளர்ந்து ஆளாகி, லால் எள் என்றால் எண்ணெய்யாக நிற்கிறார். தன்வசம் எத்தனையோ ஆட்கள் இருந்தும் முக்கிய தாதாபணிகளுக்கு ஒற்றை ஆளாக சக்தி - விஜய்யை அனுப்பி காரியம் பல சாதிக்கிறார் சிவன் - லால்!

 தன் தந்தையை சிறுவயதில் போலீஸ்காரர் ஒருவர் அநியாயமாக சுட்டுக்கொன்றதால் காக்கி உடுப்பைக் கண்டாலே வெறுக்கும் விஜய், எதிர்பாராமல் காக்கி உடுப்புக்கு சொந்தக்காரரான காஜல் அகர்வாலை உடுப்பு (காக்கி உடுப்பு) இல்லாத நேரத்தில் காதலிக்க தொடங்குகிறார். அவர் போலீஸ் என தெரிந்ததும் காக்கி உடுப்பின் மீது இருக்கும் வெறுப்பில் காதலையே தூக்கி எறிகிறார். அப்படிப்பட்ட விஜய்யே ஒரு கட்டத்தில் அப்பா மோகன் லாலின் விருப்பம் மற்றும் மதுரையை ஏப்பம் விடும் முயற்சிக்காக காக்கி உடுப்பை மாட்டிக்கொண்டு போலீஸாக பணிபுரிய வேண்டிய சூழல்! தாதா போலீசாகும் விஜய் மேலும் ஒரு கட்டத்தில் வளர்ப்பு அப்பா மோகன் லாலுக்கு எதிராகவே திரும்புகிறார். காஜலுடன் மீண்டும் காதலில் விழுகிறார். அதுமட்டுமன்றி அப்பா சிவனை நல்லவராக்கும் முயற்சியில் நல்ல போலீசாகும் சக்தி - விஜய், சிவன் - லாலின் கோபப்பார்வைக்கு ஆளாக அதை சாதகமாக்கிக் கொள்ளும் சிவனின் அடிவருடி அமைச்சர் சம்பத், தன் வஞ்சத்திற்கு அப்பா மகன் இருவரையும் தீர்த்து கட்டும் ஆசையில் இருவரையும் கோர்த்து விட்டு வேடிக்கை பார்க்கிறார். வென்றது சம்பத்தா? விஜய்யா? மோகன் லாலா..? என்பது வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும்  உள்ளது.

விளையாட்டுல மோதுறவனை பார்த்திருப்ப... விளையாட விட்டு மோதுறவனை பார்த்திருக்கியா... என பஞ்ச் வசனம் பேசுவதிலாகட்டும், பரோட்டா சூரியை விட்டு போலீஸ் பரேடில் ஓவர் பெர்பார்மென்ஸ் காட்டும் போலீஸ்காரரைப் பார்த்து, ஆமாம் இவரு பெரிய துரைசிங்கம் என போட்டி நடிகர் சூர்யாவுக்கு சொக் வைப்பதிலாகட்டும், உங்க பக்கம் நின்னு பார்க்கறப்போ நாம பண்றது எல்லாம் ரைட்டா தெரிஞ்சுது, இந்த பக்கம் வந்து பார்க்கறப்போ அதுவே தப்பா தெரியுது... நியாயத்தின் பக்கம் நின்று கொண்டு மோகன்லாலுக்கு எதிராக வசனம் பேசும் போதிலாகட்டும் விஜய்யை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது எனலாம்! வாவ்! இன்னும் நடை, உடை, பாவனைகளில் எத்தனை குறும்பு. ஆனால் அது சில இடங்களில் டூ மச்சாக தெரிவதை விஜய்யும், இயக்குநரும் நினைத்திருந்தால் தவிர்த்திருக்கலாம்!


காஜல் அகர்வால் போலீஸ் யூனிபார்மில் இருக்கும் நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் கவர்ச்சி அகர்வால்! அதிலும் டூயட்களில் மனதை கொள்ளையடிக்கிறார். பரோட்டா சூரி காமெடியில் தேறியிருக்கிறார். பூர்ணிமா, மகத், தம்பி ராமையா, சம்பத், சரண், ஆர்.கே. ரவி மரியா, பிரதீப் ராவத், பிளாக் பாண்டி, ஜோ மல்லூரி, நிவேதா, இமான் அண்ணாச்சி உள்ளிட்டவர்களும் கச்சிதம்.

 பரோட்டா சூரி அப்பப்ப மொக்கை போட்டாலும் 4 இடங்களில் சிரிக்க முடியுது.

முன் பாதி திரைக்கதையில் இருந்த வேகம் பின் பாதியில் இல்லை. கடைசி 30 நிமிடங்கள் இழுவை. மொத்த படம் 3 மணி நேரம் என்பதால் ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டி உள்ளது.

படத்தில் காஜல் எதற்கு என்று டைரக்டர் தான் விளக்க வேண்டும்,

கடைசியில்  ஒரு தெலுங்கு படம் பார்த்த  மாதிரி இருந்தது  இந்த லச்சணத்தில்
இரண்டாம் பாகத்திற்கு துண்டு போட்டு வைத்திருக்கிறார்  இதற்கே முடியல இதில் இது வேறு





மீண்டும் வேறு ஒரு நல்ல பதிவுடன் சந்திக்கும் வரை
 என்றும்  அன்புடன்,

பாலசுப்ரமணியன்.சி

+91 9965818701